Tuesday, April 5, 2011

பொலிஸ், அதிரடிப்படை, விமானப்படை வீரர்களுக்கிடையில் மோதல் 11 பேர் காயம், 45 பேர் கைது; பதற்றம் தணிவு


களுத்துறையில் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், விமானப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு மிடையில் இடம்பெற்ற மோதல் நிலை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர ப்பட்ட தையடுத்து பதற்றம் தணிந்துள்ளது.

இம்மோதலினால் 11 பேர் காயமடைந்த நிலையில் களுத்துறை, நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், விமானப் படையினர் உள்ளடங்கலாக 45 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தினகரனுக்குத் தெரிவித்தார்.

ஞாயிற்றுக் கிழமை இரவு 9 மணிய ளவில் ஆரம்ப மான இம்மோதல் நேற்று நண்பகல் வரை நீடித்து ள்ளது. இம்மோதல் காரணமாக களுத்துறை கிராமமொ ன்றில் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். வீடுகளின் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டிரு ப்பதுடன் பல முச்சக்கர வண்டிகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவருக்கும் விமானப்படையதிகாரி ஒருவருக்குமிடையே ஏற்பட்ட தனிப்பட்ட வாய்த்தர்க்கமே இறுதியில் முத்தரப்பினருக்குமிடையிலான மோதலாக உருவெடுத்திருப்பது ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மோதலில் களுத்துறையைச் சேர்ந்த பெண் ஒருவர் உள்ளிட்ட 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். இவர்களது உடல்நிலை தேறி வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். கைது செய்யப்பட்டிரு க்கும் 45 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவ ரெனவும் அவர் கூறினார்.

இதேவேளை, மோதலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் குழுவொன்று அப்பகுதி மக்களிடையே கலந்துரையாடி அவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியதையடுத்து அப்பகுதியில் பதற்றம் தணிந்துள்ளது. இம்மோதல் குறித்து விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.லக்ஷ்மி பரசுராமன் TUESDAY, APRIL 05, 2011

No comments:

Post a Comment