Thursday, October 28, 2010

பம்பலப்பிட்டி சோதனைச்சாவடி அகற்றப்பட்டது


பம்பலப்பிட்டி காலி வீதியில் செயற்பட்டு வந்த வீதி சோதனைச் சாவடி நேற்று முதல் முழுமையாக அகற்றப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவள கூறினார்.

இதன்படி, கொழும்பு நகரிலுள்ள பிரதான வீதி சோதனைச் சாவடிகளை படிப்படியாக களைவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் மேஜர் ஜெனரல் குறிப்பிட்டார்.

கொழும்பின் பாதுகாப்பு நிலைமைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதனை தொடர்ந்து வீதிச் சோதனை சாவடிகளை படிப்படியாக களைவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் சுட்டிக்
காட்டினார்
THURSDAY, OCTOBER, 28, 2010லக்ஷ்மி பரசுராமன்

Thursday, October 21, 2010

ருஹுணு உபவேந்தர் மீது மாணவர் குழு தாக்குதல்:மாத்தறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை


ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுசிறித் மெண்டிஸ் நேற்றுக்காலை பல் கலைக்கழக மாணவர் குழுவொன்றி னால் தாக்கப்பட்டுள்ளார். மக்கட் பண்பியல் பீடத்தைச் சேர்ந்த இரு மாணவ குழுக்களிடையே நேற்று இடம்பெற்ற மோதலை சீர்செய்வதற்காக உபவேந்தர் அவ்விடத்துக்கு சென்றிருந்த போதே குறித்த மாணவக் குழு உபவேந்தரை தாக்கியுள்ளது.

காயமடைந்த உபவேந்தர் மாத்தறை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் சிரேஷ்ட மாணவ ஆலோசகரான சமன் சந்தன என்பவரும் சில மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக உபவேந்தர் மாத்தறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். அண்மைக்காலமாக ருஹுணு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தொடர்ச்சியாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களுக் குமிடையிலான மாணவ ஒன்றியமும் விஞ்ஞான பீட மாணவர்களும் கடந்த செவ்வாய்க்கிழமை மோதிக் கொண்டதில் ஏழு பட்டதாரி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் எம். என். ஹேரத்தின் பணிப்புரையின் பேரில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் பத்மசிறியின் மேற்பார்வையில் விசேட பொலிஸ் குழுவொன்று இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
THURSDAY, OCTOBER, 21, 2010லக்ஷ்மி பரசுரமான்

Monday, October 18, 2010

பொதுநலவாய நாடுகளின் பிரிட்டிஷ் எம்.பிக்கள் தூதுக்குழு இலங்கை விஜயம்


பொதுநலவாய நாடுகளின் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தூதுக்குழுவொன்று நேற்று இலங்கை வந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இக்குழுவினர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பர். இக்காலப் பகுதியினுள் நாட்டின் முக்கிய பல தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்துவரெனவும் எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கிடையில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் இத்தூதுக்குழு நாளை (19) செவ்வாய்க்கிழமை காலை பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
MONDAY, OCTOBER, 18, 2010லக்ஷ்மி பரசுராமன்

இந்திய வெளிவிவகார அமைச்சர் நவம்பர் 25ம் திகதி இலங்கை வருகை


கொழும்பில் நடைபெறவிருக்கும் இலங்கை-இந்திய கூட்டு ஆணைக்குழுவில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா நவம்பர் 25ஆம் திகதி இலங்கை வரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

ம்மாதம் 27ஆம் திகதி மேற்படி ஆணைக்குழு கொழும்பில் கூடுவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தபோதும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் திடீர் ஜப்பான் விஜயம் காரணமாக இது அடுத்த மாத இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டிரு ப்பதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி யொருவர் கூறினார்.

இலங்கை வரவிருக்கும் இந்தியப் பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை தாங்க விருக்கும் அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா மூன்று தினங்கள் வரை இங்கே தங்கியிருப்பதுடன் வடக்கில் மோதல் இடம்பெற்ற பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்வதுடன் அங்கு இந்திய அரசின் நிதியுதவியின்கீழ் முன்னெடுக்கப் பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை-இந்திய கூட்டு ஆணைக்குழு கடந்த 2005ஆம் ஆண்டு கொழும்பில் கூடி ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.
MONDAY, OCTOBER, 18, 2010லக்ஷ்மி பரசுராமன்

போலிமருந்துகள் கடத்தலுக்கு விரைவில் தீர்வு; சட்டவிரோத செயலுக்கு உடந்தையான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை


சட்டவிரோதமான முறையில் இலங்கையினுள் போலி மருந்துகளை கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குத் துரித கதியில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுமென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

பதிவு செய்யப்படாத மருந்துகள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதனை நிறுத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின்பேரில் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த நான்கு குழுக்களினதும் உறுப்பினர்களில் சிலர் இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு தொடர்ந்தும் ஒத்தாசை வழங்கி வருவது அம்பலத்திற்கு வந்திருப்பதாகவும் அமைச்சர் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்றுக்காலை ‘போலி மருந்துகளைக் கட்டுப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கருத்தரங்கொன்று நடைபெற்றது.

அமெரிக்க அரசாங்கம் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்க மருந்தக சம்மேளனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் இலங்கை மருந்துகள் உற்பத்தி சங்கத்தின் சம்மேளனம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலகின் பிரதான வியாபார மோசடியை எடுத்துக் கொண்டால் அதில் பிரதானமானது ஆயுதக் கடத்தல். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது மருந்துக் கடத்தல் ஆகும். இதனை நாட்டினுள் அனுமதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அதனை ஆராய்ந்து கட்டுப்படுத்தும் நோக்கில் நான்கு பிரதான குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

இக்குழுக்களின் உறுப்பினர்களுள் பலர் நேர்மையான முறையில் தமது கடமைகளை முன்னெடுத்து வந்த போதிலும் சிலர் சட்டவிரோத மருந்து கடத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளமைக்கான ஆதாரங்கள் எமக்கு கையும் மெய்யுமாக கிடைத்துள்ளன. இச்செயற்பாடுகளுடன் அரச அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்ட போதிலும் அரசாங்கத்துக்கு பதில் கூறியே ஆகவேண்டும். சுகாதார அமைச்சரென்ற வகையில் தொடர்ந்தும் நாட்டில் போலி மருந்து மாபியா நடப்பதற்கு என்னால் இடம் வழங்க முடியாது. இதற்கெதிராக மிக விரைவில் நடவடிக்கையெடுப்பதுடன் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியாக தண்டனைப் பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அமைச்சர் இதன்போது கூறினார்.
MONDAY, OCTOBER, 18, 2010லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, October 12, 2010

முல்லைத்தீவில் 11 விமான குண்டுகள் கண்டுபிடிப்பு


முல்லைத்தீவு காட்டுக்குள்ளிலிருந்து அதிசக்தி வாய்ந்த 11 விமான குண்டுகள் மீட்கப்பட்டி ருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். முன்றரை அடி நீளமும் 2 1/2 அடி அகலமும் கொண்ட 50 கிலோகிராம் நிறையுடைய 04 விமான குண்டுகளும் 3 1/2 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்ட 25 கிலோகிராம் நிறையுடைய 07 விமான குண்டுகளுமே இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பொலிஸ் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையில் வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா தலைமையிலான குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட தேடுதலின் போதே இவை கைப்பற்றப் பட்டுள்ளன. ஏ-35 முல்லைத்தீவு - பரந்தன் வீதியிலமைந்துள்ள காட்டுக்குள் காணப்பட்ட பதுங்கு குழிக்குள்ளிருந்தே மேற்படி விமான குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
TUESDAY, OCTOBER, 12, 2010லக்ஷ்மி பரசுராமன்

Thursday, October 7, 2010

எல்.ரீ.ரீ.ஈ. முக்கிய சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்படமாட்டார்கள் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு


பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ. முக்கிய சந்தேக நபர்கள் எவருமே விடுதலை செய்ய ப்பட மாட்டார்களென பொலிஸ் தலை மையகம் நேற்று அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக் கவுன்ஸில் இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தது.

இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று கூடிய தேசிய பாதுகாப்பு கவுன்ஸிலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் மீதான சாட்சியங்களுக்கேற்ப வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஆதாரங்கள் உள்ள பயங்கரவாத சந்தேக நபர்கள் எவருமே விடுதலை செய்யப்படமாட்டார்கள்.

இதேவேளை, போதுமான சாட்சியங்கள் இல்லாத சந்தேக நபர்களை விடுதலை செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
THURSDAY, OCTOBER, 07, லக்ஷ்மி பரசுராமன்

Monday, October 4, 2010

விவசாயிகளை பாதுகாத்து உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதே இலக்கு


கோதுமை மாவுக்கு மானியங்களையும் நாம் வழங்கப்போவதில்லை. உள்நாட்டு விவசாயிகளை பாதுகாத்து உள்ளூர் உற்பத்தியினை அதிகரிப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமென நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எனவே, பாண் விலையதிகரிப்புக் குறித்து பொதுமக்கள் கலக்கமடையத் தேவையில்லை. அதற்கு பதிலாக அரிசி உற்பத்திப் பொருட்களின் பாவனையினை அதிகரிக்கவேண்டுமெனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரிமா நிறுவன விநியோகஸ் தர்கள் கோதுமை மா கிலோ வொன்றுக்கான விலையை 8 ரூபா 33 சதத்தினால் அதிகரித்திருப்பது குறித்து நுகர்வோர் விவகார அமைச்சரிடம் கேள்வியெழுப்பியபோதே அவர் மேற்கண்ட வாறு பதிலளித்தார்.
MONDAY, OCTOBER, 04, 2010லக்ஷ்மி பரசுராமன்)

6540 பேருக்கு நவம்பரில் ஆசிரிய நியமனம்


நாடளாவிய ரீதியில் எதிர்வரும் நவம்பர் இறுதிக்கு முன்னதாக 6540 பேருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை அமைச்சு கட்டங் கட்டமாக முன்னெடுத்து வருகின்றதென அமைச்சின் செயலாளர் சுனில் எச். சிறிசேன தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டிடன் அனைத்து பகுதிகளிலுமுள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையிலேயே கல்வியமைச்சர் பந்துல குணவர்தன நவம்பர் மாத இறுதிக்குள் இந்நியமனங்களை வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.

இதனடிப்படையில், எதிர்வரும் 06ம் திகதி புதன்கிழமை நாடளாவிய ரீதியில் கல்வியியற் கல்லூரியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மூவாயிரம் மாணவர்களுக்கும் ஆங்கிலப் பட்டதாரிகள் 540 பேருக்கும் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
MONDAY, OCTOBER, 04, 2010லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, September 28, 2010

லலித் கொத்தலாவலயின் வங்கி பெட்டகத்திலிருந்து பெருந்தொகை நகைகள்


லலித் கொத்தலாவல மற்றும் அவரது மனைவிக்குச் சொந்த மான 60 மில்லியன் ரூபாவுக்கு மேல் பெறுமதிமிக்க தங்க நகைகள் மற்றும் பல மாணிக்க கற்களையும் இரகசியப் பொலிஸார் நேற்று கொழும்பிலுள்ள பிரபல அரச வங்கியொன்றிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.

நீதிமன்றத்தின் அனுமதியுடன் இரகசியப் பொலிஸார் குறித்த வங்கியின் பெட்டகங்களை சோதனையிட்ட போதே லலித் கொத்தலாவல மற்றும் அவரது மனைவியினால் பிரகடனப்படுத் தப்படாத மேற்படி நகைகளும் மாணிக்கக் கற்களும் மீட்கப்பட்டுள்ளன.

பெட்டகங்களில் இருந்து பெருந் தொகையான தங்க ஆபரணங்களு டன் முத்து, இரத்தினம், மாணிக் கம் மற்றும் வைரக்கற்களும்
கைப்பற்றப்பட்டுள்ளன
TUESDAY, SEPTEMBER, 28, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, September 27, 2010

34 குடும்பங்கள் முல்லைத்தீவில் இன்று மீள் குடியமர்வு


வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள 34 குடும்பங்களைச் சேர்ந்த 96 பேர் இன்று முல்லைத்தீவு மாவட் டத்தில் மீளக்குடியமர்த்தப்படவுள் ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி நிவாரணக் கிராமங்களிலுள்ள 283 குடும்ப த்தைச் சேர்ந்தோர் கரச்சி பிரதேச செயலாளர் பிரிவில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னர் நடைபெற்ற மீள்குடி யேற்றத்தை தவறவிட்ட 100 குடும்பங்களைச் சேர்ந்தோரை எதிர்வரும் 11 ஆம் திகதி தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக் கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கேதீஸ்வரன் கூறினார்
MONDAY, SEPTEMBER, 27, 2010லக்ஷ்மி பரசுராமன்

மீள் குடியேற்றப்பட்டோருக்கு விசேட ஏற்பாடு:மழைக்கு ஈடுகொடுக்கும் வகையில் கூடாரத்துணிகள், கூரைத்தகடுகள்


வடக்கில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளோ ர்க்கு எதிர்வரும் மழைக் காலத்திற்கு முன்னதாக பாதுகாப்பான கூடாரங்களை அமைத்துக் கொடுப்பதற்கென வட மாகாண சபை 5 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளதென மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிரி தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வடக்கில் மீள்குடியேறியுள்ளோருக்கென 51 ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணிகள் ஒக்டோபர் நடுப்பகுதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மழைக் காலத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் தற்காலிகமாக இந்தக் கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கப்படவிரு ப்பதாகவும் ஆளுநர் கூறினார்.
மோதல்களின் போது இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்கள் மற்றும் ஏனைய வெளி மாவட்டங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் அரசாங்கத்தின் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். துரிதகதியில் மீள் குடியேற்றம் இடம்பெற்றுவரும் நிலையில், எதிர்வரும் மழைக்காலத்திற்கு முன்னதாக அம்மக்களுக்கு பாதுகாப்பான கூடாரங்கள் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக வடமாகாண ஆளுநர் தலைமையில் அண்மையில் கொழும்பில் கூடி ஆராயப்பட்டது.

இந்திய அரசாங்கம் பெற்றுத் தருவதாக இணக்கம் தெரிவித்திருக்கும் கூரைத் தகரங்களுக்கும் மேலதிகமாகவே வடமாகாண சபை இதற்கென 05 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளது. இதேவேளை, ஆளுநரின் வேண்டுகோளுக்கமைய போதி யளவு கூரைத்தகரங்கள் மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் சீட்டுக்களைப் பெற் றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மீள்குடி யேற்ற அமைச்சு முன்னெடுத்து வருவதாக வும் அதன் செயலாளர் எஸ். திஸாநாயக்க கூறினார். இதற்குரிய நிதி கூடிய விரை வில் அமைச்சினூடாக பெற்றுக் கொடுக்கப் படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பல தன்னார்வ தொண்டு நிறுவனங் களும் மழைக் காலத்திற்கு முன்னதாக கூடா ரங்களைப் பெற்றுக் கொடுக்க இணக்கம் தெரிவித்துள்ளன.

இதன்படி குடும்ப மொன்றுக்கு 12 கூரைத் தகடுகள் வீதம் வழங்கப்பட தீர்மானிக்கப்பட் டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
MONDAY, SEPTEMBER, 27, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, September 20, 2010

வவுனியா மாவட்டத்தில் 2900 வீடுகளை நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு: இந்திய அரசின் வீடமைப்பு திட்டத்திற்கு மேலதிகமாக வழங்க நடவடிக்கை


வவுனியா மாவட்டத்தில் புதிதாக 2 ஆயிரத்து 900 வீடுகளை நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் வடக்கில் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் புதிதாக 7 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு மேலதிகமாகவே ஐரோப்பிய ஒன்றியம் 2 ஆயிரத்து 900 வீடுகளை வழங்கவிருப்பதாகவும் அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியமானது குறிப்பாக மோதல்களுக்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட்டிலிருந்து வவுனியா மாவட்டத்தில் குடியேறியுள்ள தெரிவு செய்யப்பட்ட 2,900 குடும்பங்களுக்காகவே புதிதாக வீடுகளை வழங்க முன்வந்துள்ளன. மீள்குடியேறியவர்கள் தொடர்ந்தும் அதே பகுதியில் வசித்து வருவது உறுதிப் படுத்தப்படும் பட்சத்திலேயே அவர்களுக்கு வீடு நிர்மாணிப்பதற்கான நிதியுதவி பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கான பயனாளிகளை தெரிவு செய்யும் வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரதேச செயலாளர் பிரிவுகளினூடாக இதற்கென பிரத்தியேக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

கிடைக்கப்பெறும் நிரப்பப்பட்ட விண் ணப்பங்களுள் தெரிவு செய்யப்பட்டோர் தொடர்பான விபரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்குவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் வீடொன்றின் நிர்மாணப் பணிகளுக்காக தலா 3 இலட் சத்து 25 ஆயிரம் ரூபா வீதம் வழங்க விருப்பதாகவும் அரச அதிபர் சார்ள்ஸ் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்திய அரசாங்கத் தினால் வவுனியா மாவட்டத்தில் புதிதாக நிர் மாணிக்கப்படவிருக்கும் 7 ஆயிரம் வீடுகளுக்குரிய பயனாளிகளை தெரிவு செய்யும் வேலைத்திட்டமும் பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் நடைபெற்று வருகின்றன.

யுத்தத்தினால் தமது வீடுகளை இழந்தோர் தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளி மாவட்டங்களில் தங்கியிருக்கும் பட்சத்தில், அவர்களுக்குரிய பிரதேச செயலாளர் பிரிவுகளினூடாக விண்ணப்பப்படிவத் தினைப் பெற்று பூரணப்படுத்தி வேறு மாவட்டத்தில் தாம் வசிப்பதற்கான காரணத்தைத் தெளிவாக குறிப்பிட்டு அனுப்பிவைப்பதன் மூலம் அவர்கள் தமது சொந்த இடத்திற்கு திரும்பும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான வளமும் நிதியுதவியும் கிடைக்க வழி செய்யப் படுமென்பதால் தாமதியாது விண்ணப்பங் களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அரச அதிபர் கேட்டுக் கொண்டார்.

இவை தொடர்பான அனைத்து மதிப் பீடுகளும் ஒக்டோபர் நடுப்பகுதியளவில் ஐரேப்பிய ஒன்றியம் மற்றும் இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்படும்.
அத்துடன் வவுனியா மாவட்டத்தில் பகுதியளவில் சேதமடைந்திருக்கும்1125 வீடுகளையும் புனர் நிர்மாணம் செய்ய இந்திய அரசாங்கம் முன்வந்திருப்பதனால் அதற்குரிய பயனாளிகளை தெரிவு செய் யும் விண்ணப்பப்படிவங்களும் விநியோகிக் கப்பட்டு வருகின்றன.

எமது தொழில்நுட்ப அலுவலககள் குறித்த வீட்டின் சேதம் தொடர்பாக சமர்ப்பிக்கும் கணக்கெடுப்புகளும் அடுத்த மாதமளவில் இந்திய அரசாங்கத்திடம் வழங்கப்படு மெனவும் அரச அதிபர் மேலும் கூறினார்.
MONDAY, SEPTEMBER, 20, 2010லக்ஷ்மி பரசுராமன்

புனர்வாழ்வு பெற்ற மேலும் 440 பேர் 30ம் திகதி உறவினரிடம் ஒப்படைப்பு


புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள மேலும் 440 பேர் எதிர்வரும் 30ம் திகதி வியாழக்கிழமை தமது குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப் படவிருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களு க்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

வவுனியா கலாசார மண்டபத்தில் வைபவரீதியாக நடைபெறும் இந்நிகழ்வுக்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியு குணசேகர தலைமை தாங்குவாரெனவும் ஆணையாளர் கூறினார்.

அமைச்சர் டியு குணசேகர தலைமையில் அண்மையில் வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட நடமாடும் சேவையின் போது, அமைச்சரால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளு க்கமைய 119 பேர் இதன்கீழ் எதிர்வரும் 30ம் திகதி தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். மேலும் நூறு பெண்கள், அங்கவீனமானோர், சுகயீனமுற்றோர் மற்றும் முழுமையாக புனர்வாழ்வு பெற்று வேலை செய்ய தகுதி பெற்றோர் ஆகியோரே இம்முறை விடுவிக்கப்படவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த மாதம் புனர்வாழ்வு நிலையங்களி லிருந்து 500க்கும் மேற்பட்டோர் தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
MONDAY, SEPTEMBER, 20, 2010லக்ஷ்மி பரசுராமன்

Friday, September 17, 2010

துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் கொல்லப்பட்ட விவகாரம்:5 பொலிஸ் உட்பட 9 பேர் கைது; இரு அத்தியட்சகர்கள் இடமாற்றம்


பேருவளையில் பொலிஸாருக்கும் கொள்ளைக் கோஷ்டியொன்றுக் குமிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸார் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் மகரகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து பொலிஸாரும் நான்கு பொது மக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் நுகேகொடை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் மற்றும் மிரிஹானை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் சேனாபதி ஆகியோர் நேற்று பொலிஸ் களப்பிரிவு தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

பேருவளை நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வைத்து கொள்ளைக் கோஷ்டியினரை சுற்றி வளைத்துப் பிடிக்கும் நோக்கில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்குமிடையில் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது.

இதன்போது அப்பகுதியில் முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த 07 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததுடன் அவனது தந்தை காயங்களுக்கு உள்ளானார். சம்பவத்தின்போது தப்பிச் சென்ற கொள்ளைக் கோஷ்டியினரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று 16 ஆம் திகதி மாலை களுத்துறை மேலதிக நீதவான் நாமல் பெரேரா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது எதிர் வரும் 30 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
FRIDAY, SEPTEMBER, 17, 2010லக்ஷ்மி பரசுராமன்

Sunday, September 5, 2010

நியூசிலாந்தில் விமான விபத்து:இலங்கை விமானி உட்பட 9 பேர் பலி


நியூசிலாந்தில் நேற்று இடம் பெற்ற விமான விபத்தில் இலங்கையைச் சேர்ந்த சமிந்த நளின் சேனாதீர என்ற விமானி கொல்லப்பட்டுள்ளதாக வெளி விவகார அமைச்சு ஊர்ஜிதம் செய்துள்ளது. இந்த விபத்தில் விமானி உட்பட 9 பேர் கொல் லப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தின் ‘ஸ்கெடைவிங்’ என்ற நிறுவன மொன்றுக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் சுற்றுலாத் தளமொன்றிலிருந்து பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆகாயத்திலேயே தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
பலியான வர்களில் நால்வர் நியூசிலாந்தைச் சேர்ந்தவர்கள், ஏனையவர்கள் பிரிட்டன், அயர்லாந்து, அவுஸ் திரேலியா, ஜேர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

SUNDAY SEPTEMBER 05 2010லக்ஷ்மி பரசுராமன்

தமிழ்க் கட்சிகளின் அரங்கம்:12 அம்சங்களடங்கிய கோரிக்கை முன்வைத்து நிருபமாராவுடன் பேச்சு


தமிழ்க் கட்சிகள் அரங்கம் நேற்று இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமாராவை சந்தித்து 12 அம்ச கோரிக் கைகளை முன்வைத்தது. இந்திய இல்லத் தில் நேற்றுக்காலை சுமார் ஒரு மணித்தி யாலமாக இடம்பெற்ற சந்திப்பில் தமிழ்க் கட்சிகள் அரங்கப் பிரதிநிதிகள் இந்திய வெளிவிகார செயலாளரிடம் அர்த்தமுள்ள மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிக ளுடன் கூடிய மீள்கட்டுமானம், உயர்பாது காப்பு வலயம் மற்றும் இராணுவ முகாம் களை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற இந்தியா உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்ததாக அதன் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த வெளிவிவகார செயலாளர், இந்திய அரசாங்கம் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு உதவும். இதற்காக 50 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப் படவிருப்பதாகவும் மலையக மக்களுக்காக பல்வேறு உதவிகளை முன்னெடுக்க விருப்பதாகவும் கூறினார்
FRIDAY, SEPTEMBER, 03, 2010லக்ஷ்மி பரசுராமன்

எரியூட்டப்பட்ட நிலையில் புலிகளின் விமான உதிரிப்பாகங்கள்:கரியமுள்ளிவாய்க்காலில் மீட்பு


கரியமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து நேற்று இலங்கை விமானப் படையின் புலனாய்வுப் பிரிவினர் எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட சில விமான உதிரிப்பாகங்களை மீட்டிருப்பதாக விமானப்படை பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்தார்.

கொள்கலன் ஒன்றினுள் விமான உதரிரிப்பாகங்கள் இடப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையிலேயே அவை மீட்கப்பட்டுள்ளன. முன்னாள் புலி உறுப்பினர்கள் வழிகாட்டியதையடுத்தே விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்துக்கு சென்று உதிரிப்பாக ங்களை மீட்டுள்ளனர்.

எரியூட்டப்பட்ட நிலையில் 02 சிறிய இயந்திரங்கள், லைட்கள், சக்கரங்கள் உள்ளிட்ட சில விமான உதிரிப்பாகங்களும் பற்றுச்சீட்டுப் புத்தகங் கள், தொலைபேசிகள், பற்றரி சார்ஜர்கள் ஆகிய பொருட்களும் குறித்த கொள்கலனி லிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

இவை இலகுரக விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் உதிரிப்பாகங்களென தெரிவித்த விமானப்படை பேச்சாளர், படையினருக்கும் புலிகளுக்கும் மோதல் உக்கிரமாக நிலவிய காலத்தில் புலிகள் அவற்றுக்கு தீ வைத்திருக்கலாமென நம்புவதாகவும் கூறினார்.
THURSDAY, SEPTEMBER, 02, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, August 30, 2010

நிரூபமாராவ் இன்று வருகை:வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு நேரடி விஜயம்: இந்திய அபி. பணிகளையும் பார்வையிடுவார்


இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமாராவ் இன்று இலங்கை வருகிறார். இரு தரப்புச் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் இவர், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்திட்டங்களை நேரில் சென்று பார்வையிடுவாரென வும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமாராவ் உள்ளிட்ட குழுவினர் வடக்கில் வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (31) வவுனியா சென்றடையும் நிரூபமா தலைமையிலான குழுவினர் அங்கே நிறுவப்பட்டிருக்கும் மெனிக்பாம் மற்றும் கதிர்காமர் நிவாரணக் கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், வவுனியா அரச அதிபர் அலுவலகத்தில் கலந்துரையாடலொன்றில் பங்குபற்றுவர்.
அதனைத் தொடர்ந்து அவர் நிலக்கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் இந்தியக் குழுவினர் செயலாற்றும் இடங்களை நேரில் சென்று பார்வையிடுவாரெனவும் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி. சார்ள்ஸ் கூறினார்.

இதனையடுத்து, நிரூபமாராவ் வடக்கில் ஏனைய மாவட்டங்களுக்கும் விஜயம் செய்து இந்திய அரசாங்கத்தின் நிதியுதவி யின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து ஆராய்வார். குறிப்பாக வடக்கில் இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படவிருக்கும் வீடுகள் குறித்து இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படுமெனவும் வெளி விவகார அமைச்சு தெரிவித்தது. இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் மேலும் 12 அரசாங்கப் பிரதிநிதிகள் இலங்கை வருவரென எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதி நிதிகள், இலங்கைத் தொழிலாளர் காங் கிரஸின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய கட்சித் தலைவர்களை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சந்தித்து உரையாடுவார்.

எதிர்வரும் 02 ஆம் திகதி அவர் நாடு திரும்புவதற்கு முன்னதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் ஜி. எல். பீரிஸ் ஆகியோருடன் இருதரப்புச் சந்திப்புக்களை மேற்கொள் வார்ரெனவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
MONDAY, AUGUST 30, 2010லக்ஷ்மி பரசுராமன்

புனர்வாழ்வு பெற்ற 500 பேர் 4ம் திகதி குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு


புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் 500 பேர் எதிர்வரும் 04ஆம் திகதி சனிக்கிழமை அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட விருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

வவுனியா பம்பைமடு மத்திய நிலையத்தில் அன்றையதினம் நடைபெற ஏற்பாடாகியிருக்கும் கலாசார நிகழ்வினைத் தொடர்ந்து புனர்வாழ்வு நிலையத்தில் இருக்கும் 500 பேர் தமது குடும்பத்தார் மற்றும் உறவினரிடம் உத்தியோகப்பூர்வமாக ஒப்படைக்கப்படுவரெனவும் அதன் ஆணையாளர் கூறினார்.

ஏற்கனவே கடந்த 27ஆம் திகதி புனர்வாழ்வு பெற்ற ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களின் தாய்மார் 30 பேர் விடுவிக்கப் படுவரென தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அது ஒத்திவைக் கப்பட்டது. இவர்களும் உள்ளடங்களாக 500 பேர் எதிர்வரும் 04ஆம் திகதி தமது குடும்பத்தாருடன் சேர்த்துவைக்கப்படுவர்.

சுகயீனமுற்றோர், க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியோர், பல்வேறு பயிற்சிப் பட்டறைகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டோரே புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து விடுவிக்கப்படவுள் ளனர்.

புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து இதுவரை 3 ஆயிரத்து 80 பேர் தமது குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் ஆணையாளர் கூறினார்.
MONDAY, AUGUST 30, 2010லக்ஷ்மி பரசுராமன்

பரந்தனில் பாழடைந்த கிணற்றுக்குள் ஆயுதங்கள் மீட்பு


பரந்தன் உமையாள் புரத்திலுள்ள பாழடைந்த கிணற்றுக்குள்ளிருந்து பெருந்தொகையான ஆயுதங்களும் வெடிபொருட்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பிராதேசம் மீள்குடியேற்ற கிராமமாகும். அங்கிருக்கும் வைரவர் கோவிலுக்கு அருகில் அமைந்திருந்த பாழடைந்த கிணற்றுக்குள்ளிருந்தே சனிக் கிழமை மாலை இவை மீட்கப்பட்டுள்ளன. கிணறு நான்கு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்ட நிலையில் ஆயுதங்களும் வெடிபொருட்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
MONDAY, AUGUST 30, 2010லக்ஷ்மி பரசுராமன்,

Monday, August 23, 2010

தமிழ் கைதிகள் விவகாரம்:சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்


தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்திருக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கவையென பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்பு தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் 765 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனக் கோரி அரியநேந்திரன் எம்.பி. ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்தார்.

அதில் அனைவரையும் விடுவிக்க முடியாத பட்சத்திலும் சிறைகளிலுள்ள 50 பெண்களையும் 05 குழந்தைகளையுமாவது விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டுமென தான் கேட்டிருந்ததாகவும் அரியநேந்திரன் எம்.பி. தினகரனுக்குத் தெரிவித்தார்.

மகஜர் கிடைத்ததும் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி அறிவித்திருந்ததுடன், நீதியமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கூறி சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்திருந்தமை தொடர்பாக தனக்கு கடிதங்கள் கிடைத்துள்ளதாகவும் அரியநேந்திரன் எம்.பி. கூறினார்.
MONDAY, AUGUST 23, 2010லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, August 17, 2010

படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஐவர் கைது:முக்கிய புள்ளிகளை தேடி சிலாபத்தில் தேடுதல்


சட்டவிரோதமான முறையில் மீன்பிடி படகினூடாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஐவர் சிலாபம் மாரவில பகுதியில் வைத்து கையும் மெய்யுமாக மடக்கிப் பிடிக்கப்பட்டிருப்பதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அத்துல செனரத் தெரிவித்தார்.

இந்த ஆள்கடத்தலை ஏற்பாடு செய்திருந்த பிரதான ஏற்பாட்டாளர் உள்ளிட்ட ஐவரே கடற்படையின் புலனாய்வு பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கம்பஹா, கனேமுல்ல, மாஹோ மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் அனைவரும் பெரும்பான்மை இனத்தவர்கள் எனவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார்.

கடல் மார்க்கமாக மீன்பிடி படகினூடாக அவுஸ்திரேலியா அழைத்துச் செல்வதாகக் கூறி அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் ஏற்பாட்டாளர், ஏனைய நால் வரிடமிருந்தும் தலா 6 இலட்சம் ரூபா வீதம் இதற்காக அறவிடப்பட்டிருந்தமை விசாரணைகளிலிருந்து தெரியவந்தி ருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


மாரவில பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய் யப்பட்டுள்ளனர். இதன் பிரதான ஏற்பாட்டாளரை விசாரணைக்குட்படுத்தி வரும் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் அவரிடமிருந்து கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஆட்கடத்தலுடன் சம்பந்தப்பட்ட ஏனைய முக்கிய புள்ளிகளையும் தேடி சிலாபம் முழுவதும் பாரிய தேடுதல்களை நடத்தி
வருகின்றனர்
TUESDAY, AUGUST 17, 2010லக்ஷ்மி பரசுராமன்

கிரிந்த துறைமுகத்தில் படகு கவிழ்ந்து இருவர் பலி; மூவர் மாயம்


அம்பாந்தோட்டை கிரிந்த துறைமுகத் திற்குட்பட்ட கடற்பரப்பில் நேற்று மாலை படகொன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்திருப்பதுடன் மூவர் காணாமற் போயிருப்பதாகவும் மூவர் காயமடைந்திருப்பதாகவும் கடற்படை பேச்சாளர் கெப்டன் அத்துல செனரத் தெரிவித்தார்.

கடற்படை அதிகாரியொருவர் மற்றும் அவரது குடும்பத்தார் கடற்படைக்குச் சொந்தமான டிங்கி படகில் சவாரி செய்கையிலேயே கடல் சீற்றம் காரணமாக படகு அலையில் சிக்கி இவ்விபத்து நேர்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

சம்பவத்தின்போது படகில் எண்மர் பணித்துள்ளனர்.

இவர்களுள் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சிறு பிள்ளையொன்றும் உயிரிழந்துள்ளது. மேலும் இரண்டு பிள்ளைகள் உட்பட மூவர் காணாமற் போயுள்ளனர்.

காயமடைந்த மூவருள் ஒருவர் திஸ்ஸ மஹாராம வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். காணாமற்போன வர்களை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
TUESDAY, AUGUST 17, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, August 16, 2010

சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ரூ. 50 மில்.பெறுமதியான சட்டவிரோத சிகரட்டுகள் மீட்பு


சீனாவிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 50 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரட்டுகள் கைப் பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக் களத்தின் பேச்சாளர் எஸ். டி. பிரபாத் ஜயவிக்கிரம தெரிவித்தார்.

மினுவாங்கொடை பகுதியிலுள்ள பிர பல வர்த்தகரொருவரின் வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சட்ட விரோத சிகரட்டுகள் மீட்கப் பட்டுள்ளன.

கலால் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் திணைக்களத்தின் அதிகாரிகளும் பொலிஸ் போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளும் இணைந்து நீண்டகாலமாக நடத்தி வந்த தேடுதலின் விளைவாகவே நேற்று குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிகரெட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் திணக்களத்தின் பேச்சாளர் கூறினார். இதன்போது 22 இலட்சத்து 50 ஆயிரம் சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. முற்றுகையின் போது குறித்த வீட்டிலிருந்த உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சீனாவிலிருந்தே மேற்படி சிகரட்டுகள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கைது செய்யப் பட்ட இருவரும் கலால் திணைக் களத்தின் ஆணையாளர் நாயகம் வசந்த அப்புஹாரச்சி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதும் அவர்களுக்கு டொபெக்கோ சட்டமூலத்தின் கீழ் இதற்கான தண்டனை பெற்றுக் கொடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

இதேவேளை இதுபோன்ற தகவல்களை கலால் திணைக்களத்திற்கு பெற்றுக் கொடுப்போருக்கு பெறுமதி மிக்க பரிசில் களை வழங்க திணைக்களம் தீர்மானித் திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்
MONDAY, AUGUST 16, 2010லக்ஷ்மி பரசுராமன்

யாழ். குடா கைத்தொழில் பேட்டை; அலரிமாளிகையில் 2ம் கட்ட பேச்சு


யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் பேட்டையினை நிறுவுவது தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

இதன்போது, கைத்தொழில் பேட்டையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பது தொடர்பாக ஆராயப்படுமென வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ்ப்பாண அரச அதிபர் அலுவலகத்தில் சில வாரங்களுக்கு முன்னர் கைத்தொழில் பேட்டையினை நிறுவுவது தொடர்பான முதலாவது கூட்டம் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

வளங்களைப் பயன்படுத்தி சிறந்த தரம்மிக்க பொருட்களை யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்வதே இக்கைத்தொழில் பேட்டையை நிறுவுவதன் பிரதான நோக்கமெனவும் ஆளுநர் கூறினார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலுள்ள தீவுப் பகுதிகளில் ஹோட்டல்களை அமைப்பதில் முதலீட்டாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதனால், சுற்றுலாத்துறையைச் சேர்ந்தோருக்கு நிலங்களை பகிர்ந்தளிப்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக ஆளுநர் தெரிவித்தார்.

அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர் மிக விரைவில் தீவுப் பகுதிகள் சுற்றுலா மையங்களாக மாற்றியமைக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.
MONDAY, AUGUST 16, 2010லக்ஷ்மி பரசுராமன்)

Friday, August 13, 2010

பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டு:விஜித ஹேரத் உட்பட மூவர் காலியில் கைது



ஜே. வி. பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அஜித் குமார மற்றும் மாகாண சபை உறுப்பினர் நZன் ஹேவகே ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

காலியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கடமைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள், பொலிஸாரைத் தாக்கினார்கள் ஆகிய குற்றச் சாட்டுகளின் பேரிலேயே இம்மூவரும் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி ஜனநாயக தேசிய முன்னணி நேற்று காலியில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. பொலிஸார் அதனை கலைக்க முற்பட்டதையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. சம்பவத் தின் போது ஆர்ப்பாட்டக்காரர் களின் தாக்குதலுக்குள்ளான 5 பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
FRIDAY, AUGUST 13, 2010லக்ஷ்மி பரசுராமன்

Thursday, August 12, 2010

மகஸின் சிறையில் இரு கைதிகள் மோதல்:விலக்கச் சென்றவர் அடித்துக் கொலை


வெலிக்கடை, மகஸின் சிறைச்சாலை யில் நேற்றுக் காலை இரண்டு கைதிகளுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் அதனை தடுக்க வந்த இன்னுமொரு கைதி உயிரிழந்துள்ளதுடன் , மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

சம்பவத்தில் போதைவஸ்து பாவனை குற்றத்திற்காக விளக்கமறியலில் கடந்த 10ஆம் திகதி சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்த மலிந்த பெரேரா எனும் கைதியே உயிரிழந்திருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி. ஆர். டி. சில்வா தெரிவித்தார்.

விளக்கமறியல் கைதியொருவர் மற்றொரு கைதியை இரும்பு கொக்கி யொன்றினால் குத்த முற்பட்டபோதே மோதல் மூண்டுள்ளது. மோதலை தடுக்க முற்பட்ட போதே மலிந்த பெரேரா எனும் கைதியின் தலையிலும் முதுகிலும் இரும்பு கொக்கியினால் பலத்த அடி வீழ்ந்துள்ளது. இதனையடுத்து படுகாயமடைந்த மேற்படி கைதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இன்னுமொரு கைதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக நிலவி வந்த பகையே இம்மோதல் மூண்டதற்கு காரணம் என தெரிவித்த சிறைச்சாலைகள் ஆணையாளர் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்
THURSDAY, AUGUST 12, 2010 லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, August 11, 2010

ஜீப் ஆற்றுக்குள் விழுந்து விபத்து; 3 பொலிஸார் பலி


கலவானை கொஸ்வத்த பகுதியில் நேற்று மாலை 6.30மணியளவில் பொலிஸ் ஜீப்பொன்று குக்குலேகங்க ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் கலவானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சரத் கம்ஹேவா, சார்ஜன்ட் குணபால, பொலிஸ் கான்ஸ்டபிள் பிரிமானே ஆகியோரே உயிரிழந்துள்ளனர். கலவானை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. பொலிஸ் ஜீப் வண்டியில் இவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த போது வண்டி கலவானை கொஸ்வத்தையிலுள்ள பள்ளத்திலிருந்து குடைசாய்ந்து ஆறு ஒன்றினுள் விழுந்ததிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது
WEDNESDAY, AUGUST 11, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, August 9, 2010

சவூதியில் நிர்க்கதியான பணிப்பெண்களை உடன் அழைத்துவர விசேட விமான ஏற்பாடு:இன்று 44பேர் வருகைநாளை மறுதினம் 100 பெண்கள்:


சவூதி அரேபியாவில் நிர்க்கதிக்குள்ளா கியிருக்கும் பணிப்பெண்களை இலங்கைக்கு அழைத்துவர விசேட விமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பொது முகாமையாளர் எல். கே. ருகுணுகே தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக இன்று 44 பணிப்பெண்களும் நாளை மறுதினம் (11) 100 பணிப்பெண்களும் சவூதி அரேபியாவிலிருந்து இலங்கை அழைத்து வர ஏற்பாடாகியுள்ளது.

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சவூதி அரேபியாவில் நிர்க்கதிக்குள்ளாகி யிருக்கும் இலங்கைப் பணிப்பெண்களை அழைத்து வருவதற்காக விசேடமாக மிஹின் லங்கா விமானம் தயார் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையைச் சேர்ந்த 250 பணிப் பெண்கள் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தமது வேலையைக் கைவிட்டுவிட்டு சவூதி அரசாங்கத்தின் கீழ் நடத்தப்பட்டு வரும் நலன்புரி நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்கள் சவூதியில் சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும் சொந்த நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் எவ்வித ஏற்பாடுகளையும் முன்னெடுக்க வில்லையெனவும் பல ஊடகங்கள் குற்றம் சுமத்தியிருந்தன. உண்மையில், அவர்கள் அங்கு சிறைவைக்கப்படவில்லை. சகல வசதிகளுடனுமே தங்கவைக்கப் பட்டுள்ளனர்.

விமான இருக்கை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட கால தாமதமே அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் தாமதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு பணியகத்தின் முயற்சியாலும் அரசாங்கத்தின் ஏற்பாட்டி னாலும் மிஹின் லங்கா விமானம் மூலம் ஒரே தடவையில் நாளை மறுதினம் 100 பேர் அழைத்து வரப்படவிருப்பதாகவும் எல். கே. ருகுணுகே கூறினார். இன்று காலை 2.30 மணிக்கு 44 பணிப்பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய ஏற்பாடாகியிருப்பதாகவும் அவர் நேற்றுத் தெரிவித்தார்.
MONDAY, AUGUST 09, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, August 2, 2010

வட மாகாண டெங்கு நோய் ஒழிப்புத் திட்டம் இன்று ஆரம்பம்:யாழ். நகரசபையில் நிகழ்வு: மன்னாருக்கு விசேட வைத்தியக்குழு


வட மாகாணத்தில் டெங்கு நோய் ஒழிப்பிற்கான தேசிய வேலைத் திட்டம் இன்று முதல் ஆரம்பமாகின்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாணத்துக்கான ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தலைமையில் இதற்கான தேசிய நிகழ்வு இன்று காலை யாழ். மாநகர சபையில் ஆரம்பித்து வைக்கப்படும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கமைய நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இம்மாதம் குறித்த நான்கு நாட்கள் தேசிய டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனப்படுத்தப் படவுள்ளன. அந்த வகையில் இன்று 02 ஆம் திகதி முதல் வட மாகாணத்தின் தேசிய டெங்கு ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படவிருப்பதாக வட மாகாண ஆளுநர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

கடந்த 27 ஆம் திகதி வவுனியா அதிபர் அலுவலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இது தொடர்பான கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமைய மாகாணத்தின் சகல பகுதிகளிலும் அந்தந்த மாவட்டத்திற்குரிய அரச அதிபர் தலைமையில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளிலேயே இன்று டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். தற்போது ஒப்பீட்டளவில் வடமாகாணத்தில் மிக மிக குறைந்த எண்ணிக்கையானோரே டெங்கு நோய்க்கு ஆளாகியுள்ளனர். மன்னாரில் சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து வவுனியாவிலிருந்து விசேட வைத்தியர் குழுவொன்று மன்னார் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்
கூறினார்
MONDAY, AUGUST 02, 2010லக்ஷ்மி பரசுராமன்

சவூதியில் 40 பணிப்பெண்கள் நிர்க்கதி; 6 பேருக்கு சுகயீனம்:இலங்கைக்கு அழைத்து வருவதற்கு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்பாடு




சவூதி அரேபியாவின் ரியாத்தில் நிர்க்கதியான நிலையிலிருக்கும் 40 இலங் கைப் பணிப்பெண்களுள் சுகயீனமுற்றிரு க்கும் ஐவரை உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேற்கொண்டிருப்பதாக அதன் பொது முகாமையாளர் ருகுனுகே தெரிவித்தார்.

அந்நாட்டின் குறித்த வைத்தியசாலை யொன்றில் வேலை பெற்றுக் கொடுப்பதாகக் கூறி இலங்கையி லிருந்து 41 பணிப்பெண்கள் அண்மையில் ரியாத் அழைத்துச் செல்லப்பட்டனர். ஒப்பந்தத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இவர்களுக்கு குறித்த வேலை வழங்கப்படவில்லை.

இருப்பினும் குறிப்பிட்ட மாதாந்த சம்பளத்தின் ஒரு பகுதி மாத்திரம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு சென்ற ஆறு பெண்கள் சுகயீனமுற்றுள்ளனர். இவர்களுள் ஒருவர் நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
MONDAY, AUGUST 02, 2010லக்ஷ்மி பரசுராமன்

வடக்கில் ஒரு இலட்சம் ஏக்கரில் நெற்செய்கை:இந்தியா, ஐ.சி.ஆர்.சி. 900 ட்ரக்டர் வழங்க முடிவு:உரமானியம்; இலவச விதை நெல்லுக்கும் ஏற்பாடு


வடக்கில் பெரும்போக நெற்செய்கையினை பாரியளவில் முன்னெடுப்பதற்கான வேலைத் திட்டங்களை வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி திட்டமிட்டு வருவதாக அதன் செயலாளர். எஸ். பி. திவாரட்ன தினகரனுக்குத் தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியாவின் குறித்த பகுதிகளில் காணப்படும் விளைச்சல் நிலங்களை இலக்காகக் கொண்டே இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவெனக் கூறிய செயலாளர் எஸ். பி. திவாரட்ண, எதிர்வரும் ஒக்டோபர் முதல் ஆரம்பமாகவிருக்கும் பெரும்போகத்தில் 75 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் வரையிலான ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து நெல் விளைச்சலை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்த வேலைத் திட்டத்திற்கு இந்தியா மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன உதவ முன்வந்துள்ளன.
இதனடிப்படையில், இந்திய அரசாங்கம் பெரும்போகத்திற்கு முன்னர் விளைநிலங்களை உழுவதற்காக 500 ட்ரக்டர் வண்டிகள் மற்றும் நீர் பம்பிகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

அதற்கு மேலதிகமாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 400 ட்ரக்டர் வண்டிகளையும் நீர்ப் பம்பிகளையும் இலங்கைக்கு வழங்கியுள்ளது. ட்ரக்டர் வண்டிகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் பழமையான முறையான ஏர் பூட்டும் முறையை கையாளவும் விவசாயிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக செயலாளர் எஸ். பி. திவாரட்ன கூறினார்.

மேலும் விவசாய அமைச்சும் உலக விவசாய ஸ்தாபனமும் வட மாகாணத்தின் பெரும்போகத்துக்கென மூன்று இலட்சம் புசல் விதை நெற்களை ஏற்பாடு செய்து வைத்துள்ளன. அத்துடன் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்குவதற்கென போதியளவு உரம் கையிருப்பிலுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் நெல் விளைச்சல் மற்றும் வீடமைப்பு ஆகியவற்றிலேயே வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் செயலணி கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக கூறிய அதன் செயலாளர், இம்மாத இறுதிக்குள், இந்திய அரசாங்கம் வடக்கின் 05 மாவட்டங்களிலும் ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணியை ஆரம்பிக்குமெனவும் சுட்டிக்காட்டினார்.
MONDAY, AUGUST 02, 2010லக்ஷ்மி பரசுராமன்

Friday, July 30, 2010

தீக்குளித்தவரை கறுப்பு ஜீப்பில் கொண்டுவந்து இறக்கியவர் யார்?


ஐ. தே. க. தலைமையகத்திற்கு முன்பாக தற்கொலை செய்து கொண்ட ரியன்சி அல்கமவின் மரணத்திற்கு பின்புலமாகயிருக் கும் நபர்கள் மற்றும் அவரை அவ்விடத்திற்கு கொண்டு வந்து இறக்கிய கறுப்பு ஜீப் வண்டி குறித்து தீவிர விசார ணைகள் ஆரம்பிக்கப்பட்டி ருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

ரியன்சி அல்கமவின் மரணம் குறித்து நபரொருவர் பொலிஸா ருக்கு வழங்கியிருக்கும் வாக்கு மூலத்தில், தான் கடையொன்றில் பழம் வாங்கிக் கொண்டிருக்கும் போது கறுப்பு நிற ஜீப் வண்டியொன்று அவ்வழியாக வந்ததாகவும் அதிலிருந்து கொள்கலன் ஒன்றுடன் இறங்கிய ஒருவர் நீண்ட நேரமாக அவ்விடத்தில் நின்று வண்டியி னுள் இருந்த இன்னுமொரு வருடன் பேசிக் கொண்டிருந்தார்.

பின்னர் நான் வீட்டுக்குச் சென்று தொலைக் காட்சியை பார்த்தபோது குறித்த நபர் தீப்பற்றிய நிலையில் வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்வதைக் கண்டேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து பொலிஸார் கறுப்பு நிற ஜீப் வண்டி மற்றும் அதனுள் இருந்த நபர் குறித்து விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்

FRIDAY, JULY 30, 2010லக்ஷ்மி பரசுராமன்

Thursday, July 29, 2010

’தமிழ்க் கட்சிகள் அரங்கம்’:9 கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு:கூட்டமைப்பை அழைக்க முடிவு


ஒன்பது தமிழ் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் அரங்கம் நேற்று புளொட் அலுவலகத்தில் கூடி ஆராய்ந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப் பினையும் தமிழ் கட்சிகள் அரங்கத்தில் இணைத்துக் கொள்வதற்காக ஒன்பது கட்சிகளினதும் பிரதிநிதிகள் கையெழுத்திட்ட கடிதமொன்றை கூட்டமைப்புக்கு அனுப்பி வைப்பது குறித்து இச்சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டதாக முன்னாள் எம். பி. சிவாஜிலிங்கம் தெரி வித்தார்.

புளொட் அலுவலகத்தில் நேற்று நண்பகல் ஒரு மணியள வில் ஆரம்பமான இச்சந்திப்பு சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை நீடித்தது. உத்தியோக பூர்வமாக கடிதம் அனுப்பி வைப்பது மாத்திரமன்றி கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம். பி. நாடு திரும்பியதும் தமிழ் கட்சிகள் அரங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் அவரை நேரில் சந்தித்து கடிதத்தின் பிரதியொன்றை அவரிடம் நேரடியாக கையளிப்பதற்கு முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சிவாஜிலிங்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் ஸ்ரீ தரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சந்திரகாந்தன், ஈழ எதிரிகள் மறு வாழ்வுக் கழகத்தின் தலைவர் செ. சந்திரஹாசன், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி. ஆனந்தசங்கரி, ஈ. பி. டி. பி. அமைப்பின் தலைவர் டக்ளஸ் தேவாநந்தா, புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப்.
அமைப்பின் தலைவர் பத்மநாபா, டெலோ அமைப்பின் தலைவர் உதயராசா ஆகியோர் ஒன்பது பேரும் கையொப்பமிட்ட உத்தியோகபூர்வ கடிதமே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட விருப்பதாகவும் அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் வடக்கு, கிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு பொதுவான தீர்வு எடுப்பது குறித்து ஆராயப்பட்டிருப்பதுடன் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி மட்டக்களப்பில் காலை 10 மணிக்கு நடத்துவதெனவும் தீர்மானம்

THURSDAY, JULY 29, 2010லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, July 27, 2010

ஐ. தே. க. வை மறு சீரமைக்கக் கோரி:ஸ்ரீகொத்தவுக்கு முன்னால் ஒருவர் தீமூட்டி தற்கொலைக்கு முயற்சி


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையக மான ஸ்ரீ கொத்தவின் முன்பாக நேற்று ஒருவர் தனக்குத் தானே தீமூட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.

வெலிகமவைச் சேர்ந்த ரியன்ஸி அல்கம (60) என்பவரே பிட்டகோட்டே யிலுள்ள ஐ. தே. க. தலைமையகம் முன்பாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

ஒருவர் தீப்பற்றி எரிவதனைக் கண்ட பிரதேசவாசிகள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் அவரை முச்சக்கர வண்டியில் ஏற்றி களுபோவில வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.


உடலில் 60 சதவீத எரிகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருக்கும் மேற்படி நபர் சிகிச்சைபெற்று வருவதாகவும் அவரது உடல் நிலையில் முன்னேற்றமிருப்ப தாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்ஹ தெரிவித்தார்.

ஐ. தே. க.வினுள் மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனக் கோரியே இவர் தனக்குத் தானே தீமூட்டிக் கொண்டிருப்பதாக பிரதேச வாசிகளிடம் அவர் கூறியிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட் டினார்.
TUESDAY, JULY 27, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, July 26, 2010

வடக்கில் டெங்கு ஒழிப்பு வாரம்:வேலைத்திட்டங்களை ஆராய வவுனியாவில் உயர் மாநாடு


வடமாகாணத்தில் எதிர்வரும் 02 ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட விருப்பதாக ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இவ்வேலைத் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான பிரதான டெங்கு ஒழிப்பு மாநாடு நாளை (27) வவுனியா அரச அதிபர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் பாரியளவில் முன்னெடுக்கப்படவுள்ளன.

வவுனியாவில் நாளை நடைபெற விருக்கும் மாநாட்டில் ஐந்து மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்கள், உதவி அரசாங்க அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்து கொள்வரெனவும் ஆளுநர் கூறினார்.


இம் மாநாட்டின் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் டெங்கு நுளம்பு பரவக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் காணப்படும் பகுதிகள், அவற்றைக் கட்டுப்படுத்தும் விதம் தேவையான உபகரணங்கள் ஆகியன குறித்து கலந்துரையாடி அவசியமானவற்றை எதிர்வரும் 02 ஆம் திகதிக்கு முன் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


அரசாங்க உத்தியோகத்தர்களைக் கொண்டு நாட்டில் டெங்கு பரவுவதைத் தடுக்கும் வேலைத்திட்டம் தற்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் எதிர்வரும் 02 ஆம்திகதி வடமாகாணத்துக்கான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.

ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடமாகாணத்தில் மிகவும் குறைந்தளவினரே டெங்கு நோய்க்கு ஆளாகியுள்ளனர். இருப்பினும் மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் நீர் தேங்கக்கூடிய மற்றும் நுளம்பு பெருகக்கூடிய இடங்களை சுத்திகரிப்பதற்காக தீவிர முயற்சியில் இறங்கவுள்ளோமெனவும் ஆளுநர் தெரிவித்தார்

MONDAY, JULY 26, 2010லக்ஷ்மி பரசுராமன்

வடக்கில் கைவிடப்பட்ட நிலங்களில் நெற்செய்கை: அடுத்த மாதம் ஏர்பூட்டு விழா


வடக்கில் கைவிடப்பட்ட வயல் நிலங்களில் நெற்பயிர்ச் செய்கையினை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான ஏர்பூட்டு விழா அடுத்த மாதம் நடுப்பகுதியளவில் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தலைமையில் நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் பெரும் வயல் நிலங்கள் நீண்டகாலமாக பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன. இந்நிலங்களில் மீண்டும் நெல் விளைச்சலை ஆரம்பிக்க வேண்டுமென்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
புதர்களாக காட்சியளிக்கும் மேற்படி வயல் நிலங்களை சுத்திகரித்து பயிர்ச் செய்கைக்கு ஏற்ற விதத்தில் தயார்படுத்து வதற்கு பெரும் எண்ணிக்கையான ட்ரக்டர் வண்டிகள் தேவைப்படு கின்றன.

தற்போது தேவையான ட்ரக்டர் வண்டிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக எருதுக ளின் உதவியுடன் ஏர் பூட்டும் பழைமை யான முறையினை பின்பற்றி அவற்றை விளைச்சலுக்கு உகந்த நிலங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதென ஆளுநர் கூறினார்.
MONDAY, JULY 26, 2010லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, July 21, 2010

அமைச்சர் ஜீ.எல். - நீல்பூனே நேற்று சந்தித்துப் பேச்சு


ஐக்கிய நாடுகள் சபையின் இலங் கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூனேக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ¤க்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது பூனே தனது கடமைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க விருப்பதாகவும் ஐ.நா. இலங்கையில் தமது வேலைகளை தொடர்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் பீரிஸிடம் கூறியுள்ளார். இதன்போது இலங்கைக்கும் ஐ.நா.வுக்குமிடையிலான உறவு என்றும் ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டு மென்பதே அரசாங்கத்தின் விருப்பமெனவும் அமைச்சர் பீரிஸ், பூனேவிடம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. செய லாளர் நாயகம் பான் கீ மூனுடன் கலந்துரையாடுவதற்காக நியூயோர்க் சென்றிருந்த நீல் பூனே நேற்று காலை நாடு திரும்பி பான் கீ மூனின் ஆலோச னைக்கமைய இந்த சந்திப்பில் ஈடுபட்டதாக வும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
WEDNESDAY, JULY 21, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, July 19, 2010

சீரற்ற காலநிலை தொடரும்:மலையகத்தின் நீரேந்து பகுதிகளில் கடும் மழை: வான் கதவுகள் திறப்பு


நாட்டில் தற்போது நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்குமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

தென்மேல் பருவப்பெயர்ச்சி காரணமாக காலநிலையில் ஏற்பட்டிருக்கும் இம்மாற்றம் நாட்டின் தென் மேற்குப் பகுதியிலுள்ள மலைப் பிரதேசங்களில் அதிகூடிய மழையினையும் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் இடைக்கிடை கடும் காற்றினையும் ஏற்படுத்துமென காலநிலை அவதான நிலைய அதிகாரியான தமயந்தி திக்கெட்டி ஹேவாகே தெரிவித்தார்.

இதன்படி, கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் கென்யோன் பகுதியிலேயே அதிகூடிய மழை வீழ்ச்சியாக 114.5 மில்லி மீற்றர் பெய்தமை பதிவாகியுள்ளது.
லக்ஷபானவில் 89.5 மில்லிமீற்றர் மழையும், நோர்ட்டன் பிரிஜ்ஜில் 83.03 மில்லி மீற்றர் மழையும், மவுசாகலையில் 77.5 மில்லி மீற்றர் மழையும் பதிவாகியிருப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்தது. அத்துடன் மஸ்கெலியாவில் 57 மில்லி மீற்றர் மழையும் கொத்மலையில் 43.03 மில்லி மீற்றர் மழையும் பெய்துள்ளது.


மலையகத்தின் தென் மேற்கு பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் அதிகூடிய மழை காரணமாக கென்னியோன், லக்ஷபான மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்கள் உயர்ந்துள்ளதை யடுத்து அவற்றின் வான் கதவுகள் நேற்று நண்பகல் 12 மணி முதல் திறந்து விடப்பட்டிருப்பதாக நோட்டன் பிரிஜ்ஜுக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அறிவித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி கூறினார். இதேநேரம்; கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் திறந்துவிடப்படவுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழ்வோர் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மலையத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக மண்சரிவு அபாயம் இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அநாவசிய விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு இக்காலப்பகுதியில் மலையகத்தின் குறித்த பகுதிகளுக்கான தூர பிரயாணங்களை தவித்துக் கொள்வது சிறந்ததெனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங் களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று இடைக்கிடை வெயிலுடன் கூடிய மழை பெய்யும். அதேவேளை கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று ஓரளவு மழை எதிர்பார்க்கப்படலாமெனவும் காலநிலை அவதான நிலைய அதிகாரி கூறினார்
MONDAY, JULY 19, 2010லக்ஷ்மி பரசுராமன்

மீள்குடியேறியோர் உட்கட்டமைப்பு மேம்பாடு;உதவி வழங்கும் பேரவையை இலங்கையில் அமைக்க பேச்சுவார்த்தை


மீள்குடியேற்றம் மற்றும் குடியேற்றப்பட்டோரின் உட்கட்டமைப்பு வசதிகளை துரிதப்படுத்தும் வகையில் அரசாங்கம் ஏழு நாடுகளின் உதவிகளைப் பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சின் செயலாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, கனடா, சுவீடன், நோர்வே, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளிடமிருந்து நிதியுதவி மற்றும் நன்கொடைகளை பெற்றுக்கொள்ளும் முகமாக அரசாங்கம் இந்நாடுகளுடன் ஆரம்ப கட்டப் பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.


மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு வருவதுடன் அவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படுகி ன்றன. மேற்படி செயற்திட்டங்களை துரிதப்படுத்தும் வகையில் மேற்குறிப்பிட்ட ஏழு நாடுகளின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.


இந்நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் மிக விரைவில் இந்நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு அழைக்கப்பட்டு மீள்குடியேற்றத்துக்கான உதவி வழங்கும் பேரவையொன்றை ஸ்தாபிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இப்பேரவையினூடாக தேவையான நிதி மற்றும் நன்கொடையினைப் பெற்று மீள்குடியேற்றம் மற்றும் குடியேற்றப் பட்டவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமென நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
MONDAY, JULY 19, 2010லக்ஷ்மி பரசுராமன்

டெங்கு ஒழிப்புப் பணி;பொது சுகாதார அதிகாரிகள் மீது தாக்குதல்; உபகரணங்களும் சேதம்


திருகோணமலையில் டெங்கு பெருகக்கூடிய இடங்களை கண்டறிந்து சுத்திகரிப்பதற்காக சென்றிருந்த பொது சுகாதார பரிசோதகர்கள் தாக்கப்பட்டுள்ளதுடன் சுத்திகரிக்கும் உபகரணமும் சேதமாக்கப்பட்டு ள்ளது.சில வாரங்களுக்கு முன்னர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியொருவரின் தந்தையே மேற்படி சுகாதார பரிசோதகர்களைத் தாக்கியுள்ளார்.

மஹாமாயபுரவைச் சேர்ந்த திசைமுத்து அத்தனி ஜெயராஜ்(38) என்பவரே தாக்குதலை மேற்கொண்டமைக்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மஜிஸ்ட்ரேட் முன்னிலையில் நிறுத்தப்பட்டுள்ளார்.

பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தும் குற்றச்சாட்டின் கீழ் இவர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக திருமலை பொலிஸார் தெரிவித்தனர்.
MONDAY, JULY 19, 2010லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, July 14, 2010

போலி நாணயத் தாள் அச்சிட்ட 2 பேர் கைது





ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்களை அச்சிட்ட இருவர் நேற்று கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிட மிருந்து ஒரு இலட்சத்து 77 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்கள் நேற்று வரை கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

விஸ்வமடு, முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்களை அச்சிட்டு பல்வேறு இடங்களுக்கும் விநியோகித்து வந்துள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து இவர்கள் வவுனியாவில் வைத்தே போலி நாணயத் தாள்களை அச்சிட்ட பின்னர் கிளிநொச்சிக்கு எடுத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
THURSDAY, JULY 15, ௨0௧0
லக்ஷ்மி பரசுராமன்

உகண்டா குண்டு வெடிப்பில் கொட்டாஞ்சேனை குடும்பஸ்தரும் பலி


உகண்டா குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்த இலங்கையரின் சடல த்தை இலங்கைக்கு எடுத்து வருவ தற்கான நடவடிக்கைகளை வெளி விவகார அமைச்சு கென்னிய உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக அமை ச்சின் அதிகாரியொருவர் தெரிவித் தார்.

கொழும்பு 13, சென். பெனடிக் மாவத்தையைச் சேர்ந்த ராமராஜா கிருஷ்ணராஜா (50) எனும் குடும்ப ஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள் ளார்.

இவர் 2008ஆம் ஆண்டு முதல் உக ண்டாவிலுள்ள இந்திய கம்பனியொ ன்றில் விற்பனைப் பிரதிநிதியாக கடமையாற்றி வந்துள்ளார்.
இக்குண்டு வெடிப்புகளில் 74 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக் கது.
WEDNESDAY, JULY 14, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, July 12, 2010

வடக்கு வசந்தம் அபி. முன்னெடுப்புக்கள்:ஜனாதிபதி தலைமையில் ஆய்வுக் கூட்டம்;கிளிநொச்சியில் விசேட ஏற்பாடுகள்



கிளிநொச்சியில் எதிர்வரும் 14ஆம் திகதி புதன்கிழமை நடத்தப்படவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாணத்துக்கான ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தினகரனுக்குத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்துக்கென அம்மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் கூறினார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள் வதற்காக 44 அமைச்சர்களும் அன்றைய தினம் கிளிநொச்சி வருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, அன்றைய தினமே அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வடக்கின் வசந்தம் அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் தொடர்பாக ஆராயும் கூட்டமும் நடை பெறவிருப்பதனால் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் தொடர்புடைய சிரேஷ்ட மற்றும் முக்கிய அதிகாரிகளும் கிளிநொச்சி வரவிருப்பதாக ஆளுநர் சுட்டிக் காட்டினார்.

வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் இதுவரை முன் னெடுக்கப்பட்டுவந்த அபிவிருத்திச் செயற் பாடுகள் மற்றும் அவற்றை விரைவுபடுத்தக் கூடிய வழிமுறைகள் தொடர்பாக ஜனா திபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார்.

இவற்றைத் தொடர்ந்து அன்றைய தினம் ஜனாதிபதி கிளிநொச்சியில் வைத்து பொது மக்களுக்காக விசேட உரையொன்றையும் நிகழ்த்தவிருப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டம் மற்றும் அபி விருத்திக் கூட்டம் ஆகியவற்றில் பங்கு பற்றுவதற்காக கொழும்பிலிருந்து வரும் விசேட அதிதிகளுக்கான தங்குமிட வசதி கள், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட் டிருப்பதாகவும் ஆளுநர் கூறினார்.

அத்துடன் 13ஆம் திகதி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தலைமையில் பரந்தன் மற்றும் கிளிநொச்சியில் பெற் றோலிய கூட்டுத்தாபனத்தின் கிளைகள் திறந்து வைக்கப்பட விருப்பதுடன் 14 ஆம் திகதி நீதிமன்ற கட்டடத்துக்கான அடிக்கல் நடும் வைபவம் நீதி மறுசீரமைப்பு அமைச்சர் தலைமையில் நடைபெற விருப்பதாகவும் அதற்காக அமைச்சின் அதிகாரிகள் பலர் அங்கு வருகைதரவிருப் பதாகவும் அவர் தெரிவித்தார்.
MONDAY, JULY 12, 2010லக்ஷ்மி பரசுராமன்

விமல் வீரவன்சவின் உடல் நிலையில் முன்னேற்றம்



வீடமைப்பு நிர்மாணத்துறை யமைச்சர் விமல் வீரவன்சவின் உடல் நிலையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கமைய அமைச்சருக்கு மிகவும் சிறப்பான முறையில் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் பணிப்பாளர் ஹுலுகல்ல கூறினார்.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள விசேட நிபுணர் குழுவைக் கலைக்குமாறு வலியுறுத்தி அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த வியாழக்கிழமை (08) காலை 10.15 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தார்.

மூன்று நாட்களாக நீருமின்றி உண்ணாவிரதம் இருந்து வந்த வீரவன்ச நேற்று முன்தினம் (10) மிகவும் சோர்வடைந்திருந்தார். மருத்துவர்களின் ஆலோசனைக்கமைய அமைச்சருக்கு நேற்று முன்தினம் நண்பகலளவில் சேலைன் ஏற்றப்பட்டது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அன்றைய தினம் மாலை அமைச்சரை நேரில் சென்று பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு வருகை தந்து அமைச்சரை பார்வையிட்டதுடன் அவரோடு உரையாடி நீராகாரம் வழங்கினார். இதன் பின்னர் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்ட அமைச்சர் கொழும்பு இராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு விசேட சிகிச்சையளிக்கப்பட்டு வருவதன் பயனாக அமைச்சரின் உடல்நிலை தேறி வருவதாக லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.
MONDAY, JULY 12, 2010லக்ஷ்மி பரசுராமன்

விமலின் தாயார் காலமானார்



தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு நிர்மாணத்துறையமைச்சருமான விமல் வீரவன்சவின் தாயார் டபிள்யூ. செலிநோநா (78) காலமானார்.

சிறிது காலம் சுகயீனமுற்றிருந்த அவர் கடந்த இருவார காலமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலை யிலேயே நேற்று முன்தினம் இரவு மரண மாகியுள்ளார்.

பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று மாலை 5 மணிவரை அவரது பூதவுடல் பொரள்ளை ஜயரத்ன மலர்ச் சாலையில் வைக்கப்பட்டு பின்னர் அவ ரது சொந்த ஊரான மாத்தறைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டமை காரணமாக மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப் பட்ட அமைச்சர் விமல் வீரவன்ச தற் போது இராணுவ ஆஸ்பத்திரியொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் நிலையிலேயே அவரது தாயார் மரண மாகியுள்ளார்.

வைத்தியரது ஆலோசனைப்படி அமைச்சர் திடீரென சிகிச்சையை முடித்துக் கொள்ள முடியாதிருப்பதனால் தாயாரின் மரணச் சடங்குகளில் கலந்துகொள்வதற்காக விசேட மருத்துவ ஏற்பாடுகள் செய்யப் படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.
MONDAY, JULY 12, 2010லக்ஷ்மி பரசுராமன்

Friday, July 9, 2010

14 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை நடத்த தீர்மானம்



அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எதிர்வரும் 13 ஆம் திகதி செவ் வாய்க்கிழமை தெரிவு செய்யப் பட்ட 14 கரையோர மாவட்டங்க ளில் சுனாமி முன்னெச்சரிக்கையினை ஒரே நேரத்தில் நடத்தத் தீர்மானித்துள்ள தென அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் ஹெட்டி யாராய்ச்சி கூறினார்.

அன்றைய தினம் மாலை 3 மணி முதல் சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதா கவும் அவர் கூறினார். இது தொடர் பாக நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது,

கொழும்பில் லுனுபொக்குன, கம்பஹாவில் பள்ளியாவத்தை வடக்கு, களுத்துறையில் 730 ஏ, கஸ்பு, காலியில் 85, பட்ட பென்டிமுல்ல, மாத்தறையில் பொல்ஹேன, அம்பாந்தோட்டை யில் பட்டாத்த தெற்கு, அம்பா றையில் திருக்கோவில், மட்டக் களப்பில் களுவாங்கேணி, திரு கோணமலை, கிண்ணியா, யாழ்ப் பாணத்தில் வல்வெட்டித்துறை, புத்தளத்தில் பருதெல்பொல, கிளி நொச்சியில் வழிபாடு, முல் லைத்தீவில் கண்ணப்பாடு மற்றும் மன்னாரில் அசிப்பு மேற்கு ஆகிய பகுதிகளிலேயே எதிர்வரும் 13 ஆம் திகதி சுனாமி முன்னெச்சரிக்கை நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன எனக் கூறினார்.
FRIDAY, JULY 09, 2010லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, July 6, 2010

அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மாலைதீவு பயணம்


இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் நேற்று மாலை தீவு பயணமானார்.

இருதரப்பு நல்லெண்ண அடிப்படையில் அமைச்சர் மேற்கொண்டிருக்கும் விஜயத்தில் அந்நாட்டு ஜனாதிபதி மொகமட் நiட் உள்ளிட்ட பிற சிரேஷ்ட அரசியல் அதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

அமைச்சர் பீரிஸ¤டன் பாராளுமன்ற உறுப்பினர் சச்சின் வாஸ் குணவர்தன மற்றும் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் மாலைதீவு சென்றுள்ளனர்.
TUESDAY, JULY 06, 2010லக்ஷ்மி பரசுராமன்

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றம்:யாழ். அரசாங்க அதிபருக்கு அறிவுறுத்தல்



யாழ். குடாநாட்டின் அதிஉயர் பாது காப்பு வலயங்களில் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட விருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் எம். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை, பாதுகாப்பு அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷ¤க்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.

யாழ். தெல்லிப்பளை, கோப்பாய் மற்றும் யாழ். குடாநாட்டின் மேற்குப் பிரதேசங்களில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு அமைச்சினால் அறிவுறுத் தப்பட்டுள்ளது.

அமைச்சின் அதிகாரிகள் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது, அங்கு அரசாங்க அதிபருடன் நடந்த கலந்துரையாடலின் போதே அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசங்களில் மக்களை மீள்குடியேற்றுவது குறித்து அரச அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் செயலாளர் திஸாநாயக்க கூறினார்.

இதன்படி யாழ். குடாநாட்டின் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றத்தை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அனுமதி அரச அதிபருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் அது தொடர்பான கலந்துரை யாடல்களை தற்போது ஆரம்பித்திருப் பதாகவும் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உபய மதவளவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, யாழ். குடாநாட்டின் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அது குறித்து விரைவில் சாதகமான பதில் கிடைக்குமென்ற நம்பிக்கையிருப் பதாகவும் கூறினார்.

அரச அதிபர் கே. கணேஷ் இவ்விடயம் தொடர்பில் யாழ். பாதுகாப்புக்கு பொறு ப்பான கொமாண்டர் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவுடன் கலந்துரையாடி வருகின்றார். அப்பகுதிகளில் தற்போது நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
TUESDAY, JULY 06, 2010லக்ஷ்மி பரசுராமன்)