Friday, July 30, 2010

தீக்குளித்தவரை கறுப்பு ஜீப்பில் கொண்டுவந்து இறக்கியவர் யார்?


ஐ. தே. க. தலைமையகத்திற்கு முன்பாக தற்கொலை செய்து கொண்ட ரியன்சி அல்கமவின் மரணத்திற்கு பின்புலமாகயிருக் கும் நபர்கள் மற்றும் அவரை அவ்விடத்திற்கு கொண்டு வந்து இறக்கிய கறுப்பு ஜீப் வண்டி குறித்து தீவிர விசார ணைகள் ஆரம்பிக்கப்பட்டி ருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

ரியன்சி அல்கமவின் மரணம் குறித்து நபரொருவர் பொலிஸா ருக்கு வழங்கியிருக்கும் வாக்கு மூலத்தில், தான் கடையொன்றில் பழம் வாங்கிக் கொண்டிருக்கும் போது கறுப்பு நிற ஜீப் வண்டியொன்று அவ்வழியாக வந்ததாகவும் அதிலிருந்து கொள்கலன் ஒன்றுடன் இறங்கிய ஒருவர் நீண்ட நேரமாக அவ்விடத்தில் நின்று வண்டியி னுள் இருந்த இன்னுமொரு வருடன் பேசிக் கொண்டிருந்தார்.

பின்னர் நான் வீட்டுக்குச் சென்று தொலைக் காட்சியை பார்த்தபோது குறித்த நபர் தீப்பற்றிய நிலையில் வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்வதைக் கண்டேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து பொலிஸார் கறுப்பு நிற ஜீப் வண்டி மற்றும் அதனுள் இருந்த நபர் குறித்து விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்

FRIDAY, JULY 30, 2010லக்ஷ்மி பரசுராமன்

Thursday, July 29, 2010

’தமிழ்க் கட்சிகள் அரங்கம்’:9 கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு:கூட்டமைப்பை அழைக்க முடிவு


ஒன்பது தமிழ் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் அரங்கம் நேற்று புளொட் அலுவலகத்தில் கூடி ஆராய்ந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப் பினையும் தமிழ் கட்சிகள் அரங்கத்தில் இணைத்துக் கொள்வதற்காக ஒன்பது கட்சிகளினதும் பிரதிநிதிகள் கையெழுத்திட்ட கடிதமொன்றை கூட்டமைப்புக்கு அனுப்பி வைப்பது குறித்து இச்சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டதாக முன்னாள் எம். பி. சிவாஜிலிங்கம் தெரி வித்தார்.

புளொட் அலுவலகத்தில் நேற்று நண்பகல் ஒரு மணியள வில் ஆரம்பமான இச்சந்திப்பு சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை நீடித்தது. உத்தியோக பூர்வமாக கடிதம் அனுப்பி வைப்பது மாத்திரமன்றி கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம். பி. நாடு திரும்பியதும் தமிழ் கட்சிகள் அரங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் அவரை நேரில் சந்தித்து கடிதத்தின் பிரதியொன்றை அவரிடம் நேரடியாக கையளிப்பதற்கு முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சிவாஜிலிங்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் ஸ்ரீ தரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சந்திரகாந்தன், ஈழ எதிரிகள் மறு வாழ்வுக் கழகத்தின் தலைவர் செ. சந்திரஹாசன், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி. ஆனந்தசங்கரி, ஈ. பி. டி. பி. அமைப்பின் தலைவர் டக்ளஸ் தேவாநந்தா, புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப்.
அமைப்பின் தலைவர் பத்மநாபா, டெலோ அமைப்பின் தலைவர் உதயராசா ஆகியோர் ஒன்பது பேரும் கையொப்பமிட்ட உத்தியோகபூர்வ கடிதமே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட விருப்பதாகவும் அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் வடக்கு, கிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு பொதுவான தீர்வு எடுப்பது குறித்து ஆராயப்பட்டிருப்பதுடன் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி மட்டக்களப்பில் காலை 10 மணிக்கு நடத்துவதெனவும் தீர்மானம்

THURSDAY, JULY 29, 2010லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, July 27, 2010

ஐ. தே. க. வை மறு சீரமைக்கக் கோரி:ஸ்ரீகொத்தவுக்கு முன்னால் ஒருவர் தீமூட்டி தற்கொலைக்கு முயற்சி


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையக மான ஸ்ரீ கொத்தவின் முன்பாக நேற்று ஒருவர் தனக்குத் தானே தீமூட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.

வெலிகமவைச் சேர்ந்த ரியன்ஸி அல்கம (60) என்பவரே பிட்டகோட்டே யிலுள்ள ஐ. தே. க. தலைமையகம் முன்பாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

ஒருவர் தீப்பற்றி எரிவதனைக் கண்ட பிரதேசவாசிகள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் அவரை முச்சக்கர வண்டியில் ஏற்றி களுபோவில வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.


உடலில் 60 சதவீத எரிகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருக்கும் மேற்படி நபர் சிகிச்சைபெற்று வருவதாகவும் அவரது உடல் நிலையில் முன்னேற்றமிருப்ப தாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்ஹ தெரிவித்தார்.

ஐ. தே. க.வினுள் மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனக் கோரியே இவர் தனக்குத் தானே தீமூட்டிக் கொண்டிருப்பதாக பிரதேச வாசிகளிடம் அவர் கூறியிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட் டினார்.
TUESDAY, JULY 27, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, July 26, 2010

வடக்கில் டெங்கு ஒழிப்பு வாரம்:வேலைத்திட்டங்களை ஆராய வவுனியாவில் உயர் மாநாடு


வடமாகாணத்தில் எதிர்வரும் 02 ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட விருப்பதாக ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இவ்வேலைத் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான பிரதான டெங்கு ஒழிப்பு மாநாடு நாளை (27) வவுனியா அரச அதிபர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் பாரியளவில் முன்னெடுக்கப்படவுள்ளன.

வவுனியாவில் நாளை நடைபெற விருக்கும் மாநாட்டில் ஐந்து மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்கள், உதவி அரசாங்க அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்து கொள்வரெனவும் ஆளுநர் கூறினார்.


இம் மாநாட்டின் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் டெங்கு நுளம்பு பரவக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் காணப்படும் பகுதிகள், அவற்றைக் கட்டுப்படுத்தும் விதம் தேவையான உபகரணங்கள் ஆகியன குறித்து கலந்துரையாடி அவசியமானவற்றை எதிர்வரும் 02 ஆம் திகதிக்கு முன் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


அரசாங்க உத்தியோகத்தர்களைக் கொண்டு நாட்டில் டெங்கு பரவுவதைத் தடுக்கும் வேலைத்திட்டம் தற்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் எதிர்வரும் 02 ஆம்திகதி வடமாகாணத்துக்கான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.

ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடமாகாணத்தில் மிகவும் குறைந்தளவினரே டெங்கு நோய்க்கு ஆளாகியுள்ளனர். இருப்பினும் மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் நீர் தேங்கக்கூடிய மற்றும் நுளம்பு பெருகக்கூடிய இடங்களை சுத்திகரிப்பதற்காக தீவிர முயற்சியில் இறங்கவுள்ளோமெனவும் ஆளுநர் தெரிவித்தார்

MONDAY, JULY 26, 2010லக்ஷ்மி பரசுராமன்

வடக்கில் கைவிடப்பட்ட நிலங்களில் நெற்செய்கை: அடுத்த மாதம் ஏர்பூட்டு விழா


வடக்கில் கைவிடப்பட்ட வயல் நிலங்களில் நெற்பயிர்ச் செய்கையினை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான ஏர்பூட்டு விழா அடுத்த மாதம் நடுப்பகுதியளவில் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தலைமையில் நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் பெரும் வயல் நிலங்கள் நீண்டகாலமாக பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன. இந்நிலங்களில் மீண்டும் நெல் விளைச்சலை ஆரம்பிக்க வேண்டுமென்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
புதர்களாக காட்சியளிக்கும் மேற்படி வயல் நிலங்களை சுத்திகரித்து பயிர்ச் செய்கைக்கு ஏற்ற விதத்தில் தயார்படுத்து வதற்கு பெரும் எண்ணிக்கையான ட்ரக்டர் வண்டிகள் தேவைப்படு கின்றன.

தற்போது தேவையான ட்ரக்டர் வண்டிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக எருதுக ளின் உதவியுடன் ஏர் பூட்டும் பழைமை யான முறையினை பின்பற்றி அவற்றை விளைச்சலுக்கு உகந்த நிலங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதென ஆளுநர் கூறினார்.
MONDAY, JULY 26, 2010லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, July 21, 2010

அமைச்சர் ஜீ.எல். - நீல்பூனே நேற்று சந்தித்துப் பேச்சு


ஐக்கிய நாடுகள் சபையின் இலங் கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூனேக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ¤க்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது பூனே தனது கடமைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க விருப்பதாகவும் ஐ.நா. இலங்கையில் தமது வேலைகளை தொடர்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் பீரிஸிடம் கூறியுள்ளார். இதன்போது இலங்கைக்கும் ஐ.நா.வுக்குமிடையிலான உறவு என்றும் ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டு மென்பதே அரசாங்கத்தின் விருப்பமெனவும் அமைச்சர் பீரிஸ், பூனேவிடம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. செய லாளர் நாயகம் பான் கீ மூனுடன் கலந்துரையாடுவதற்காக நியூயோர்க் சென்றிருந்த நீல் பூனே நேற்று காலை நாடு திரும்பி பான் கீ மூனின் ஆலோச னைக்கமைய இந்த சந்திப்பில் ஈடுபட்டதாக வும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
WEDNESDAY, JULY 21, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, July 19, 2010

சீரற்ற காலநிலை தொடரும்:மலையகத்தின் நீரேந்து பகுதிகளில் கடும் மழை: வான் கதவுகள் திறப்பு


நாட்டில் தற்போது நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்குமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

தென்மேல் பருவப்பெயர்ச்சி காரணமாக காலநிலையில் ஏற்பட்டிருக்கும் இம்மாற்றம் நாட்டின் தென் மேற்குப் பகுதியிலுள்ள மலைப் பிரதேசங்களில் அதிகூடிய மழையினையும் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் இடைக்கிடை கடும் காற்றினையும் ஏற்படுத்துமென காலநிலை அவதான நிலைய அதிகாரியான தமயந்தி திக்கெட்டி ஹேவாகே தெரிவித்தார்.

இதன்படி, கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் கென்யோன் பகுதியிலேயே அதிகூடிய மழை வீழ்ச்சியாக 114.5 மில்லி மீற்றர் பெய்தமை பதிவாகியுள்ளது.
லக்ஷபானவில் 89.5 மில்லிமீற்றர் மழையும், நோர்ட்டன் பிரிஜ்ஜில் 83.03 மில்லி மீற்றர் மழையும், மவுசாகலையில் 77.5 மில்லி மீற்றர் மழையும் பதிவாகியிருப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்தது. அத்துடன் மஸ்கெலியாவில் 57 மில்லி மீற்றர் மழையும் கொத்மலையில் 43.03 மில்லி மீற்றர் மழையும் பெய்துள்ளது.


மலையகத்தின் தென் மேற்கு பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் அதிகூடிய மழை காரணமாக கென்னியோன், லக்ஷபான மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்கள் உயர்ந்துள்ளதை யடுத்து அவற்றின் வான் கதவுகள் நேற்று நண்பகல் 12 மணி முதல் திறந்து விடப்பட்டிருப்பதாக நோட்டன் பிரிஜ்ஜுக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அறிவித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி கூறினார். இதேநேரம்; கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் திறந்துவிடப்படவுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழ்வோர் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மலையத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக மண்சரிவு அபாயம் இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அநாவசிய விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு இக்காலப்பகுதியில் மலையகத்தின் குறித்த பகுதிகளுக்கான தூர பிரயாணங்களை தவித்துக் கொள்வது சிறந்ததெனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங் களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று இடைக்கிடை வெயிலுடன் கூடிய மழை பெய்யும். அதேவேளை கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று ஓரளவு மழை எதிர்பார்க்கப்படலாமெனவும் காலநிலை அவதான நிலைய அதிகாரி கூறினார்
MONDAY, JULY 19, 2010லக்ஷ்மி பரசுராமன்

மீள்குடியேறியோர் உட்கட்டமைப்பு மேம்பாடு;உதவி வழங்கும் பேரவையை இலங்கையில் அமைக்க பேச்சுவார்த்தை


மீள்குடியேற்றம் மற்றும் குடியேற்றப்பட்டோரின் உட்கட்டமைப்பு வசதிகளை துரிதப்படுத்தும் வகையில் அரசாங்கம் ஏழு நாடுகளின் உதவிகளைப் பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சின் செயலாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, கனடா, சுவீடன், நோர்வே, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளிடமிருந்து நிதியுதவி மற்றும் நன்கொடைகளை பெற்றுக்கொள்ளும் முகமாக அரசாங்கம் இந்நாடுகளுடன் ஆரம்ப கட்டப் பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.


மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு வருவதுடன் அவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படுகி ன்றன. மேற்படி செயற்திட்டங்களை துரிதப்படுத்தும் வகையில் மேற்குறிப்பிட்ட ஏழு நாடுகளின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.


இந்நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் மிக விரைவில் இந்நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு அழைக்கப்பட்டு மீள்குடியேற்றத்துக்கான உதவி வழங்கும் பேரவையொன்றை ஸ்தாபிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இப்பேரவையினூடாக தேவையான நிதி மற்றும் நன்கொடையினைப் பெற்று மீள்குடியேற்றம் மற்றும் குடியேற்றப் பட்டவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமென நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
MONDAY, JULY 19, 2010லக்ஷ்மி பரசுராமன்

டெங்கு ஒழிப்புப் பணி;பொது சுகாதார அதிகாரிகள் மீது தாக்குதல்; உபகரணங்களும் சேதம்


திருகோணமலையில் டெங்கு பெருகக்கூடிய இடங்களை கண்டறிந்து சுத்திகரிப்பதற்காக சென்றிருந்த பொது சுகாதார பரிசோதகர்கள் தாக்கப்பட்டுள்ளதுடன் சுத்திகரிக்கும் உபகரணமும் சேதமாக்கப்பட்டு ள்ளது.சில வாரங்களுக்கு முன்னர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியொருவரின் தந்தையே மேற்படி சுகாதார பரிசோதகர்களைத் தாக்கியுள்ளார்.

மஹாமாயபுரவைச் சேர்ந்த திசைமுத்து அத்தனி ஜெயராஜ்(38) என்பவரே தாக்குதலை மேற்கொண்டமைக்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மஜிஸ்ட்ரேட் முன்னிலையில் நிறுத்தப்பட்டுள்ளார்.

பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தும் குற்றச்சாட்டின் கீழ் இவர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக திருமலை பொலிஸார் தெரிவித்தனர்.
MONDAY, JULY 19, 2010லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, July 14, 2010

போலி நாணயத் தாள் அச்சிட்ட 2 பேர் கைது





ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்களை அச்சிட்ட இருவர் நேற்று கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிட மிருந்து ஒரு இலட்சத்து 77 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்கள் நேற்று வரை கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

விஸ்வமடு, முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்களை அச்சிட்டு பல்வேறு இடங்களுக்கும் விநியோகித்து வந்துள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து இவர்கள் வவுனியாவில் வைத்தே போலி நாணயத் தாள்களை அச்சிட்ட பின்னர் கிளிநொச்சிக்கு எடுத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
THURSDAY, JULY 15, ௨0௧0
லக்ஷ்மி பரசுராமன்

உகண்டா குண்டு வெடிப்பில் கொட்டாஞ்சேனை குடும்பஸ்தரும் பலி


உகண்டா குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்த இலங்கையரின் சடல த்தை இலங்கைக்கு எடுத்து வருவ தற்கான நடவடிக்கைகளை வெளி விவகார அமைச்சு கென்னிய உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக அமை ச்சின் அதிகாரியொருவர் தெரிவித் தார்.

கொழும்பு 13, சென். பெனடிக் மாவத்தையைச் சேர்ந்த ராமராஜா கிருஷ்ணராஜா (50) எனும் குடும்ப ஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள் ளார்.

இவர் 2008ஆம் ஆண்டு முதல் உக ண்டாவிலுள்ள இந்திய கம்பனியொ ன்றில் விற்பனைப் பிரதிநிதியாக கடமையாற்றி வந்துள்ளார்.
இக்குண்டு வெடிப்புகளில் 74 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக் கது.
WEDNESDAY, JULY 14, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, July 12, 2010

வடக்கு வசந்தம் அபி. முன்னெடுப்புக்கள்:ஜனாதிபதி தலைமையில் ஆய்வுக் கூட்டம்;கிளிநொச்சியில் விசேட ஏற்பாடுகள்



கிளிநொச்சியில் எதிர்வரும் 14ஆம் திகதி புதன்கிழமை நடத்தப்படவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாணத்துக்கான ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தினகரனுக்குத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்துக்கென அம்மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் கூறினார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள் வதற்காக 44 அமைச்சர்களும் அன்றைய தினம் கிளிநொச்சி வருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, அன்றைய தினமே அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வடக்கின் வசந்தம் அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் தொடர்பாக ஆராயும் கூட்டமும் நடை பெறவிருப்பதனால் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் தொடர்புடைய சிரேஷ்ட மற்றும் முக்கிய அதிகாரிகளும் கிளிநொச்சி வரவிருப்பதாக ஆளுநர் சுட்டிக் காட்டினார்.

வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் இதுவரை முன் னெடுக்கப்பட்டுவந்த அபிவிருத்திச் செயற் பாடுகள் மற்றும் அவற்றை விரைவுபடுத்தக் கூடிய வழிமுறைகள் தொடர்பாக ஜனா திபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார்.

இவற்றைத் தொடர்ந்து அன்றைய தினம் ஜனாதிபதி கிளிநொச்சியில் வைத்து பொது மக்களுக்காக விசேட உரையொன்றையும் நிகழ்த்தவிருப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டம் மற்றும் அபி விருத்திக் கூட்டம் ஆகியவற்றில் பங்கு பற்றுவதற்காக கொழும்பிலிருந்து வரும் விசேட அதிதிகளுக்கான தங்குமிட வசதி கள், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட் டிருப்பதாகவும் ஆளுநர் கூறினார்.

அத்துடன் 13ஆம் திகதி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தலைமையில் பரந்தன் மற்றும் கிளிநொச்சியில் பெற் றோலிய கூட்டுத்தாபனத்தின் கிளைகள் திறந்து வைக்கப்பட விருப்பதுடன் 14 ஆம் திகதி நீதிமன்ற கட்டடத்துக்கான அடிக்கல் நடும் வைபவம் நீதி மறுசீரமைப்பு அமைச்சர் தலைமையில் நடைபெற விருப்பதாகவும் அதற்காக அமைச்சின் அதிகாரிகள் பலர் அங்கு வருகைதரவிருப் பதாகவும் அவர் தெரிவித்தார்.
MONDAY, JULY 12, 2010லக்ஷ்மி பரசுராமன்

விமல் வீரவன்சவின் உடல் நிலையில் முன்னேற்றம்



வீடமைப்பு நிர்மாணத்துறை யமைச்சர் விமல் வீரவன்சவின் உடல் நிலையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கமைய அமைச்சருக்கு மிகவும் சிறப்பான முறையில் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் பணிப்பாளர் ஹுலுகல்ல கூறினார்.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள விசேட நிபுணர் குழுவைக் கலைக்குமாறு வலியுறுத்தி அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த வியாழக்கிழமை (08) காலை 10.15 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தார்.

மூன்று நாட்களாக நீருமின்றி உண்ணாவிரதம் இருந்து வந்த வீரவன்ச நேற்று முன்தினம் (10) மிகவும் சோர்வடைந்திருந்தார். மருத்துவர்களின் ஆலோசனைக்கமைய அமைச்சருக்கு நேற்று முன்தினம் நண்பகலளவில் சேலைன் ஏற்றப்பட்டது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அன்றைய தினம் மாலை அமைச்சரை நேரில் சென்று பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு வருகை தந்து அமைச்சரை பார்வையிட்டதுடன் அவரோடு உரையாடி நீராகாரம் வழங்கினார். இதன் பின்னர் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்ட அமைச்சர் கொழும்பு இராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு விசேட சிகிச்சையளிக்கப்பட்டு வருவதன் பயனாக அமைச்சரின் உடல்நிலை தேறி வருவதாக லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.
MONDAY, JULY 12, 2010லக்ஷ்மி பரசுராமன்

விமலின் தாயார் காலமானார்



தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு நிர்மாணத்துறையமைச்சருமான விமல் வீரவன்சவின் தாயார் டபிள்யூ. செலிநோநா (78) காலமானார்.

சிறிது காலம் சுகயீனமுற்றிருந்த அவர் கடந்த இருவார காலமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலை யிலேயே நேற்று முன்தினம் இரவு மரண மாகியுள்ளார்.

பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று மாலை 5 மணிவரை அவரது பூதவுடல் பொரள்ளை ஜயரத்ன மலர்ச் சாலையில் வைக்கப்பட்டு பின்னர் அவ ரது சொந்த ஊரான மாத்தறைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டமை காரணமாக மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப் பட்ட அமைச்சர் விமல் வீரவன்ச தற் போது இராணுவ ஆஸ்பத்திரியொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் நிலையிலேயே அவரது தாயார் மரண மாகியுள்ளார்.

வைத்தியரது ஆலோசனைப்படி அமைச்சர் திடீரென சிகிச்சையை முடித்துக் கொள்ள முடியாதிருப்பதனால் தாயாரின் மரணச் சடங்குகளில் கலந்துகொள்வதற்காக விசேட மருத்துவ ஏற்பாடுகள் செய்யப் படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.
MONDAY, JULY 12, 2010லக்ஷ்மி பரசுராமன்

Friday, July 9, 2010

14 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை நடத்த தீர்மானம்



அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எதிர்வரும் 13 ஆம் திகதி செவ் வாய்க்கிழமை தெரிவு செய்யப் பட்ட 14 கரையோர மாவட்டங்க ளில் சுனாமி முன்னெச்சரிக்கையினை ஒரே நேரத்தில் நடத்தத் தீர்மானித்துள்ள தென அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் ஹெட்டி யாராய்ச்சி கூறினார்.

அன்றைய தினம் மாலை 3 மணி முதல் சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதா கவும் அவர் கூறினார். இது தொடர் பாக நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது,

கொழும்பில் லுனுபொக்குன, கம்பஹாவில் பள்ளியாவத்தை வடக்கு, களுத்துறையில் 730 ஏ, கஸ்பு, காலியில் 85, பட்ட பென்டிமுல்ல, மாத்தறையில் பொல்ஹேன, அம்பாந்தோட்டை யில் பட்டாத்த தெற்கு, அம்பா றையில் திருக்கோவில், மட்டக் களப்பில் களுவாங்கேணி, திரு கோணமலை, கிண்ணியா, யாழ்ப் பாணத்தில் வல்வெட்டித்துறை, புத்தளத்தில் பருதெல்பொல, கிளி நொச்சியில் வழிபாடு, முல் லைத்தீவில் கண்ணப்பாடு மற்றும் மன்னாரில் அசிப்பு மேற்கு ஆகிய பகுதிகளிலேயே எதிர்வரும் 13 ஆம் திகதி சுனாமி முன்னெச்சரிக்கை நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன எனக் கூறினார்.
FRIDAY, JULY 09, 2010லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, July 6, 2010

அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மாலைதீவு பயணம்


இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் நேற்று மாலை தீவு பயணமானார்.

இருதரப்பு நல்லெண்ண அடிப்படையில் அமைச்சர் மேற்கொண்டிருக்கும் விஜயத்தில் அந்நாட்டு ஜனாதிபதி மொகமட் நiட் உள்ளிட்ட பிற சிரேஷ்ட அரசியல் அதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

அமைச்சர் பீரிஸ¤டன் பாராளுமன்ற உறுப்பினர் சச்சின் வாஸ் குணவர்தன மற்றும் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் மாலைதீவு சென்றுள்ளனர்.
TUESDAY, JULY 06, 2010லக்ஷ்மி பரசுராமன்

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றம்:யாழ். அரசாங்க அதிபருக்கு அறிவுறுத்தல்



யாழ். குடாநாட்டின் அதிஉயர் பாது காப்பு வலயங்களில் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட விருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் எம். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை, பாதுகாப்பு அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷ¤க்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.

யாழ். தெல்லிப்பளை, கோப்பாய் மற்றும் யாழ். குடாநாட்டின் மேற்குப் பிரதேசங்களில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு அமைச்சினால் அறிவுறுத் தப்பட்டுள்ளது.

அமைச்சின் அதிகாரிகள் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது, அங்கு அரசாங்க அதிபருடன் நடந்த கலந்துரையாடலின் போதே அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசங்களில் மக்களை மீள்குடியேற்றுவது குறித்து அரச அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் செயலாளர் திஸாநாயக்க கூறினார்.

இதன்படி யாழ். குடாநாட்டின் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றத்தை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அனுமதி அரச அதிபருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் அது தொடர்பான கலந்துரை யாடல்களை தற்போது ஆரம்பித்திருப் பதாகவும் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உபய மதவளவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, யாழ். குடாநாட்டின் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அது குறித்து விரைவில் சாதகமான பதில் கிடைக்குமென்ற நம்பிக்கையிருப் பதாகவும் கூறினார்.

அரச அதிபர் கே. கணேஷ் இவ்விடயம் தொடர்பில் யாழ். பாதுகாப்புக்கு பொறு ப்பான கொமாண்டர் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவுடன் கலந்துரையாடி வருகின்றார். அப்பகுதிகளில் தற்போது நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
TUESDAY, JULY 06, 2010லக்ஷ்மி பரசுராமன்)

Monday, July 5, 2010

தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்கள் நேற்று புதுடில்லி சென்றடைவு


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு நேற்று புதுடில்லியை சென்றடைந்தது.

இந்திய உள்துறையமைச்சர் ப. சிதம்பரத்தின் அழைப்பின் பேரிலேயே இக்குழு நேற்று புதுடில்லி பயணமானதாக அரியநேத்திரன் எம். பி. தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பாக கூட்டமைப்புக் குழு பேச்சு நடத்துமென எதிர்பார்க்கப் படுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர். சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் சுமத்திரன் ஆகியோரே நேற்று மாலை 2 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புதுடில்லி நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர்

MONDAY, JULY 05, 2010லக்ஷ்மி பரசுராமன்

காதர் எம்.பிக்கு கொலை அச்சுறுத்தல்:மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணை


ஐ. தே. க. கண்டி மாவட்ட எம்.பி., ஏ. ஆர். எம். அப்துல் காதருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் சிசிர தெரிவித்தார்.

குறித்த கொலை அச்சுறுத்தல் காதர் எம்.பி.யின் கையடக்கத் தொலைபேசிக்கே வந்துள்ளது. கண்டி மாவட்டத்திலிருந்தே இவ்வச்சுறுத்தல் விடுக்கப் பட்டிருக்க வேண்டுமென்ற சந்தேகம் ஆரம்ப கட்ட விசார ணைகளிலிருந்து எழுந்திருப்பதாக தெரிவித்த கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சந்தேக நபரை கைது செய்வதற்கான தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

நீதிமன்ற முன் அனுமதி இன்று கிடைக்கப் பெற்றதும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி இலக்கத்தின் சொந்தக்காரர் பற்றிய மேலதிக விவரங்களை குறித்த நிறு வனத்தினூடாக பெற்றுக்கொள்ள விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வரவு-செலவுத் திட்டத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவாக காதர் எம்.பி. வாக்களித்தமையை கண்டித்தே கடந்த சனிக்கிழமை இரவு 8 மணியளவில் அவரது கையடக்கத் தொலைபேசிக்கு இந்த கொலை அச்சுறுத் தல் வந்துள்ளது. அதனையடுத்து காதர் எம்.பி. உடனடியாக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு சென்று இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டையடுத்து பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் குழுக்கள் காதர் எம்.பியிடம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொண்டதுடன் சந்தேக நபரைத் தேடி வலையும் விரித் துள்ளது.
MONDAY, JULY 05, 2010லக்ஷ்மி பரசுராமன்

Thursday, July 1, 2010

த.தே.கூட்டமைப்புக்கு இந்தியா அழைப்பு


தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பேச்சுக்கு வருமாறு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. புதுடில்லியிலிருந்து இந்த அழைப்பு கூட்டமைப்புக்கு நேற்று உத்தியோகபூர்வமாக கிடைக்கப் பெற்றிருப்பதாக வினோ எம்.பி. தினகரனுக்குத் தெரிவித்தார்.

அழைப்பினை ஏற்றிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ்வார இறுதிக்குள் இந்தியா செல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றக் கட்டடத்தில் இன்று கூடவிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இது தொடர்பாக ஆராய்வார்கள் எனவும் அவர் கூறினார்.
THURSDAY, JULY01, 2010லக்ஷ்மி பரசுராமன்

த.தே.கூ., த.தே.வி.கூ. அரசியல் கட்சிகளாக பதிவதற்கு விண்ணப்பம்


சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் என். ஸ்ரீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஆகியன நேற்று தங்களை அரசியல் கட்சிகளாக பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளன.

தேர்தல்கள் அலுவலகத்துக்குச் சென்ற மேற்படி கட்சிப் பிரதிநிதிகள் நேற்று தமது விண்ணப்பங்களை தேர்தல்கள் பிரதி ஆணையாளர் சுமணசிறியிடம் கையளித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தன் எம்.பி.யும், இணை செயலாளர்களாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., மாவை சேனாதிராஜா எம்.பி. மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் எம்.பி. ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூட்டமைப்பைச் சேர்ந்த வினோ எம்.பி. தினகரனுக்குத் தெரிவித்தார்.

இதேவேளை தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவராக என்.ஸ்ரீகாந்தாவும் செயலாளராக எம்.கே. சிவாஜிலிங்கமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
THURSDAY, JULY01, 2010லக்ஷ்மி பரசுராமன்

ஷெல் -117/=, லாஃப்-85/= சமையல் எரிவாயுவின் விலைகள் குறைப்பு



சமையல் எரிவாயுக்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்புச் செய்யப்பட்டுள்ள தாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னா ண்டோ தெரிவித்தார்.
இதன்படி, ஷெல் காஸின் விலை 12.5 கிலோ, 117 ரூபாவினாலும் லாஃப் காஸின் விலை 85 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய ஷெல் காஸின் புதிய விலை 1652 ரூபா வாக இருக்கும். (1769-117=1652) லாஃப் காஸின் புதிய விலை 1659 ரூபாவாகும்.

(1744 - 85 = 1659). உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலைகள் குறைந்ததையடுத்தே இந்த விலைக்குறைப்புச் செய்யப்பட்டுள்ள தாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னா ண்டோ கூறினார்.
THURSDAY, JULY01, 2010லக்ஷ்மி பரசுராமன்)