Thursday, December 31, 2009

சிவில் பாதுகாப்பு சேனா விதாயக்க நிதியம்:‘150 கோடி ரூபா தேர்தலுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறும் குற்றச்சாட்டு வெறும் பொய்’


சிவில் பாதுகாப்பு படையினரின் சேனா விதாயக்க நிதியத்திலிருந்து 150 கோடி ரூபா ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்கென உபயோகப்படுத்தப் பட்டிருப்பதாக மங்கள சமரவீர எம்.பி. ஊடகங்களுக்கு வழங்கியிருக்கும் செய்தி யினை அதன் பணிப்பாளர் அட்மிரல் சரத் வீரசேகர நேற்று முழுமை யாக மறுத்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று மாலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரி வித்தார்.

சேனாவிதாயக்க நிதியத்தில் தற்போது ஒரு இலட்சம் ரூபா கூட சேமிப்பில் இல்லை. இந்நிலையில் எவ்வாறு 150 கோடி ரூபாவினை செலவு செய்ய முடியும். தேர்தல் காலத்தில் ஜனாதிபதிக்கு அவதூறு செய்வதற்கென்றே திட்டமிட்ட சிலர் இவ்வாறான பொய்த் தகவல்களை வழங்கியுள்ளனர்.

THURSDAY, DECEMBER 31, 2009லக்ஷ்மி பரசுராமன்

யாழ்.குடா, தீவகப் பகுதிகளில் ஊரடங்கு முற்றாக நீக்கம்அல்லைப்பிட்டி, பொன்னாலை சோதனை நடவடிக்கைகள் நிறுத்தம்



தீவகப் பகுதி உட்பட யாழ். குடாநாட்டில் அமுல்படுத்தப்பட்டு வந்த இரவு நேர ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுகின்றது. அல்லைப்பிட்டி, பொன்னாலை, காரைநகர், மண்டைத் தீவு தடை முகாம்கள் மற்றும் சோதனைச் சாவடிகளும் நீக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் பணிப்புரையை அடுத்து இன்று முதல் இவை அனைத்தும் நீக்கப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

தீவகம், அல்லைப்பிட்டி, காரைநகர், மண்டைத்தீவு போன்ற உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளுக்கு இன்று முதல் பொதுமக்கள் சுதந்திரமாக சென்றுவரக் கூடியதாக இருக்கும். அத்துடன் தீவகப் பகுதிகளிலும் யாழ். குடாநாட்டிலும் மீனவர்களுக்காக அமுல்செய்யப்பட்டிருந்த பாஸ் நடைமுறையும் இன்று முதல் ரத்துச் செய்யப்படுகிறது.

தீவகப் பகுதி உட்பட உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் செய்திருந்தார். இப்பகுதி மக்கள் சுதந்திரமாக சென்றுவருவதற்காக மேற்படி சோதனைச் சாவடிகள், தடை முகாம்கள், வீதித் தடைகள் அகற்றுவது குறித்து ஆராய்ந்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மேற்படி விடயம் தொடர்பாக கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

தேவேளை தீவகப் பகுதிகளுக்கு உட்புகும் அல்லைப்பிட்டி தடைமுகாமும், நேற்று மதியம் முதல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். குடாநாட்டிலுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் தெரிவிக்கிறது.

நயினாதீவு, நெடுந்தீவு போன்ற தீவகப் பகுதிகளுக்குச் செல்வோர் கட்டாயமாக அல்லைப்பிட்டியூடாகவே செல்லவேண்டும். வாகனத்தில் செல்வோர் வாகனத்தைவிட்டு இறங்கி அடையாள அட்டை பதிவு செய்தே செல்லவேண்டும்.

எனினும் நேற்று மதியம் முதல் இந்த நடவடிக்கை முற்றாக நீக்கப்பட்டுள்ளது. சாதாரண காவலரண் மட்டுமே இயங்கு கிறது.
யாழ். குடாநாட்டடில் தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலும் சிலவேளைகளில் நள்ளிரவு 12.00 மணி முதல் 4.00 மணி வரையிலும் உத்தியோகப்பற்றற்ற ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வந்தது.

ஆலய உற்சவங்கள், சிவராத்திரி, கிறிஸ்மஸ் போன்ற தினங்களில் ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டு நேர மாற்றங்கள் செய்யப்பட்டும் வந்தன.
எனினும் நேற்று முதல் குடாநாட்டுக்கான ஊரடங்கு முற்றாக நீக்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்பட்ட பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய பகுதி மற்றும் மண்டைத்தீவு தடைமுகாம், மண்டைத்தீவு பகுதி மற்றும் காரைநகர் பகுதிக்கு இன்று முதல் மக்கள் சுதந்திரமாக சென்று வரமுடியும்.
ஈழத்துச் சிதம்பரம் என்றழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் உற்சவம் தற்போது நடைபெற்று வருவதால் ஆலயப் பகுதியில் தடைமுகாம்கள், சோதனைச் சாவடிகள் மற்றும் ஊரடங்கு நீக்கப்படுவது குறித்து ஒலிபெருக்கி மூலம் ஈ. பி. டி. பி. நேற்று மக்களுக்கு அறிவித்தது.
THURSDAY, DECEMBER 31, 2009லக்ஷ்மி பரசுராமன்

Monday, December 28, 2009

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரிடம் பண மோசடி: தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் தலைவர் அமில தேரர் நேற்று கைது


தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் தலைவர் வண. தம்மபர அமில தேரர் நேற்றுக் காலை சி.ஐ.டி. யினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

தலங்கமவில் வைத்து நேற்றுக் காலை 10 மணியளவில் இவரைக் கைது செய்த சி.ஐ.டி.யினர் விசாரணைகளுக்காக அழைத்துச் சென்றிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அமில தேரருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சி.ஐ.டி.யினருக்கு கிடைக்கப்பெற்றதையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்மை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி தேரர் பண மோசடி செய்ததாக ஹொரணை, குளியாப்பிட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சி.ஐ.டி. யினருக்கு வழங்கிய முறைப் பாடுகளை அடிப்படையாக வைத்தே நேற்று அமில தேரரை கைதுசெய்திருப்பதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஐ. எம். கருணாரட்ன கூறினார்.

பண மோசடி தவிர்ந்த பல்வேறு குற்றச்சாட்டுக்களும் அமில தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருப்பதனால், சி.ஐ.டி.யினர் இது குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வருவதாக குறிப்பிட்ட பொலிஸ் பேச்சாளர் ஆரம்ப விசாரணைகள் இடம்பெறுகின்றன.
MONDAY, DECEMBER 28, 2009லக்ஷ்மி பரசுராமன்

பண்டிகைக் காலம்; மக்கள் நலன் கருதி நாடு பூராவும் விசேட பொலிஸ் பாதுகாப்பு திட்டம் கொழும்பு நகரில் மட்டும் 500 பொலிஸார் சேவையில்



பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நலனைக் கருத்திற் கொண்டு நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாகங்களிலுமுள்ள பிரதான நகரங்களில் இவ்விசேட பாதுகாப்பு செயற்திட்டம் அமுல்படுத்தப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

சன நடமாட்டம் நிறைந்த பிரதான நகரங்களில் ஏமாற்றுப் பேர் வழிகள் மற்றும் முடிச்சு மாறிகளிடமி ருந்து மக்களை பாதுகாப்பதற்காகவே இவ்விசேட திட்டத்தினை பொலிஸ் திணைக்களம் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெளியிடங்களிலிருந்து பொருள் கொள்வனவுக்காக கொழும்பு மற்றும் பிரதான நகரங்களுக்கு வரும் மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு 24 மணித்தியாலமும் பொலிஸ் பாதுகாப்புச் சேவை நடத்தப்படவுள்ளது. இதன் போது பொலிஸார் சீருடையில் மாத்திரமன்றி சிவில் உடையுடனும் களத்திலிறங்கி சேவையிலீடுபடவிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

கொழும்பின் பிரதான நகரில் மாத்திரம் மேலதிகமாக ஐநூறு பொலிஸாரை சேவையிலீடுபடுத்த தீர்மானித்திருப்பதாகவும் ஏனைய நகரங்களில் சன நடமாட்டத்தின் அளவுக்கேற்ப பொலிஸார் சேவையிலீடுபடுத்தப்படுவரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த மாதம் இறுதி வரையில் இப்பாதுகாப்புச் சேவையை நடைமுறையில் வைக்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிவில் சேவையிலீடுபடுத்தப்படும் பொலிஸார் வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனைகளை நடத்துவதன் மூலம் ஏமாற்றும் நோக்குடன் செயற்படும் போலி வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோர் பாதுகாக்கப்படுவர்.

இதனால் பொருள் கொள்வனவுக்காக வெளியிடங்களிலிருந்து கொழும்பு வருவோர் எவ்வித தடையுமின்றி தாராளமாக தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியுமென சுட்டிக்காட்டிய பொலிஸ் பேச்சாளர் இருப்பினும், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுவது சிறந்தது எனவும் தெரிவித்தார்.
MONDAY, DECEMBER 28, 2009லக்ஷ்மி பரசுராமன்

‘சதி முயற்சியில் ஈடுபடுவோரின் தகவல் கோரல்’


ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சதி நடவடிக்கையில் ஈடுபட எவரேனும் முனைவார்களாயின் உடனடியாக அவர்கள் குறித்த தகவல்களை பெற்றுத் தருமாறு தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன கேட்டுக் கொண்டுள்ளார்.

பொது மக்கள் போதுமானளவு ஒத்துழைப்பை இதுவரை பெற்றுத் தந்திருப்பதால் தேர்தல் நடவடிக்கைகள் சுமுகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் குளறுபடிகளை தவிர்ப்பதற்காக நாடளாவிய ரீதியில் விசேட வீதிச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
MONDAY, DECEMBER 28, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Friday, December 25, 2009

40,000 மெ.தொ. அரிசியை உடன் இறக்குமதி செய்ய அரசு முடிவு


பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகரித்து வரும் கேள்வியை ஈடுசெய்யும் வகையில் அரசாங்கம் மேலதிகமாக 40 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர தெரிவித்தார்.

தனியார் வர்த்தகர்கள் பண்டிகைக் காலத்திற்கென விசேடமாக 44 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ள நிலையிலேயே அரச வாணிப கூட்டுத்தாபனம் மேலதிகமாக 40 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதில் 15 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி எதிர்வரும் 28 ஆம் திகதியும் மிகுதி 25 ஆயிரம் மெற்றிக் தொன், அரிசி அடுத்த வாரமளவிலும் இலங்கையை வந்தடையவிருப்பதாக செயலாளர் பி.பி. ஜயசுந்தர மேலும் கூறினார்.
FRIDAY, DECEMBER 25, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Monday, December 21, 2009

ஜனாதிபதித் தேர்தல் நாட்டுக்கு கிடைத்திருக்கும் பெறுமதியான சந்தர்ப்பம்:அமைச்சர் சம்பிக்க ரணவக்க



ஜனாதிபதித் தேர்தல் நாட்டுக்கு கிடைத்திருக்கும் பெறுமதியான சந்தர்ப்பம். இதனை சரியாக பயன்படுத்தி எமது எதிர்கால பிரஜைகளுக்கு வளமான நாட்டைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது எமது கடமையாகுமென சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்றுத் தெரிவித்தார்.

“ஜனாதிபதித் தேர்தலும் வழக்கறிஞர்களின் பொறுப்பும்” எனும் தொனிப்பொருளில் மஹாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார வளம் மிக்க சிங்கப்பூரிலும் எமது இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். அனைத்து வளங்களும் இயற்கையாகவே அமையப் பெற்ற போதிலும் கடந்த 30 வருடகாலமாக நாட்டில் நிலவிய பயங்கரவாத செயற்பாடுகளினால் ஏனைய நாடுகள் இலங்கையுடன் வர்த்தக ரீதியான உறவை முன்னெடுக்க தயக்கம் காட்டின.

சிங்கப்பூருக்கு வருடத்துக்கு ஒரு இலட்சத்து 28 ஆயிரம் வெளிநாட்டு கப்பல்கள் வருகின்றன. ஆனால் கொழும்பு துறைமுகத்துக்கு 4 ஆயிரம் கப்பல்கள்தான் இதுவரைகாலமும் வந்து செல்கின்றன. இதன் மூலம் 25 பில்லியன் ரூபாவே வருமானமாகக் கிடைக்கின்றது.

எமது நாட்டில் வாழும் 20 மில்லியன் மக்களிள் 13 மில்லியன் பேரிடம் இன்று கையடக்கத் தொலைபேசி பாவனையிலு ள்ளது. 60 இலட்சத்துக்கும் அதிகமானோர் கணனியை உபயோகித்து வருகின்றனர். நிச்சயமாக எமது நாடும் சிறப்பான ஆட்சியிலிருக்குமாயின் ஒருநாள் பொருளதார வளம் மிக்க நாடாக திகழும்.

இன்று நாட்டில் தீவிரவாதம் இல்லை. பிரபாகரனின் வரலாற்றுக்கு இந்த அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இனி பொருளாதாரத்துறையை கட்டி யெழுப்புவதில் தடையேதும் கிடையாது.

இக்கருத்தரங்கில் ஏற்றுமதி அபிவிருத்தி சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளுக்கான அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் உரையாற்றுகையில்:

பொன்சேகா தமது சுயநலத்துக்காக எதிர்காலத்தை நினைத்துப் பார்க்காத வகையில் கூறிய வார்த்தைகளால் இன்று நாடும் இராணுவமும் பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள் ளது.

தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் அபிவிருத்தியை கருத்திற்கொண்டு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம். அதனைத் தொடர்ந்து முன்னெடு க்க தாம் இந்த அரசாங்கத்துக்கு ஒத்துழை ப்பை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
TUESDAY, DECEMBER 22, 2009 லக்ஷ்மி பரசுராமன்

தேர்தல் காலத்தில் விசேட வீதிச் சோதனைகள்


தேர்தல் காலத்தில் விசேட வீதிச் சோதனைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்திருப்பதாக தேர்தல் நடவடிகைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ண நேற்றுத் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் இதற்கென அமைக்கப்பட விருக்கும் விசேட சோதனைச் சாவடிகளினூடாக போக்குவரத்திலீடுபடும் வாகனங்கள் சோதனைக்குட் படுத்தப்படுமெனவும் அவர் கூறினார்.

தேர்தல் வேட்பாளர்களுக்கோ கட்சிகளுக்கோ அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான சட்டத்துக்கு முரணான போஸ்டர்கள், கட்அவுட்கள் கொண்டு செல்லல், பிரசாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையிலான குண்டர்களின் செயற்பாடுகள், ஆயுதங்கள் கடத்தல் போன்றவற்றை தடுக்கும் முகமாகவே வீதிச் சோதனைகள் முன்னெடுக்கப்பட விருப்பதாகவும் கூறினார்
MONDAY, DECEMBER 21, 2009 லக்ஷ்மி பரசுராமன்

இலங்கை மீனவர்கள் குறித்து இதுவரை தகவல் இல்லை’


இந்திய கடல் எல்லைக்குள் காணாமற்போன இரண்டு இலங்கை மீனவர்கள் குறித்தும் இதுவரை எவ்விதத் தகவல்களும் கிடைக்கவில்லையென கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் அத்துல செனரத் நேற்றுத் தெரிவித்தார்.

கடந்த இரு தினங்களாக கடலில் ஏற்பட்ட வழமைக்கு மாறான கொந் தளிப்பின் காரணமாக இந்திய கடல் எல்லைக்குள் நின்றிருந்த இலங்கை மீனவர்கள் படகுடன் காணாமற் போயுள்ளனர். இவர்களைத் தேடும் பணி அந்நாட்டின் கடற் படையினரின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்
MONDAY, DECEMBER 21, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, December 15, 2009

தேசிய பாதுகாப்பு இரகசியத் தகவல்கள்:ஓய்வுபெற்ற அல்லது சேவையிலுள்ள இராணுவ வீரரொருவர் வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றம்


தேசத்தின் பாதுகாப்பு மற்றும் அதன் அக்கறையுடன் கூடிய செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான இரகசிய தகவல்களை ஓய்வுபெற்ற அல்லது சேவையிலிரு க்கும் இராணுவ வீரர் ஒருவர் வெளியிடுவது சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகுமென சிரேஷ்ட வழக்கறிஞர் காலிங்க இந்ததிஸ்ஸ கூறினார்.

தகவல் ஊடகத்துறையமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று சிரேஷ்ட வழக்கறிஞர்கள் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அந்தவகையில் சரத் பொன்சேக்கா நாட்டு மக்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் களங்கம் ஏற்படும் வகையில் வார இறுதி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வி சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகுமெனவும் சிரேஷ்ட வழக்கறிஞர் காலிங்க இந்ததிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின்படி சரத்து 6, 1 (இ) மற்றும் சரத்து 7 ஆகியவற்றின் படி சரத்பொன்சேக்கா ஊடகத்துக்கு வழங்கியிருக்கும் தகவல் சட்டப்படி குற்றமாகுமென கணிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த வழக்கறிஞர் காலிங்க, குற்றச் செயல் சட்டத்தின்படி நிரூபிக்கப்படும் பட்சத்தில் சரத்து 6, 1 (இ) யின்படி 14 வருட சிறைத் தண்டனையும் சரத்து 7 இன்படி இரண்டு வருட சிறைத் தண்டனையும் வழங்கப்பட முடியுமெனவும் தெரிவித்தார்.

இருப்பினும் சரத் பொன்சேக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசாங்கம் மற்றும் சட்டமா அதிபர் கைக ளிலேயே தங்கியுள்ளதெனவும் அவர் கூறி னார். பத்திரிகையில் பிரசுரமாகியிரு க்கும் அவரது செவ்வி நாட்டுக்கும் அதன் பாதுகாப்புக்கும் அச்சுறுத் தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அவ்வாறாயின் பொன்சேக்கா அதே பத்திரிகையில் தனது மறுப்பு அறிக்கையை வெளியிட முடியும் அல்லது செய்தியாளர் மாநாடொ ன்றின் மூலம் தனது செவ்வி எந்த இடத்தில் திரிவடைந்திருக்கிறது என் பதனையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

அதற்கேற்பவே சட்ட நடவடிக் கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

வழக்கறிஞர் அலி சப்றி இதுபற்றி கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த சில காலமாகவே குறித்த ஆங்கிலப் பத்திரிகையில் அரசாங்க த்துக்கு எதிரான கருத்துக்களே வெளிவருகின்றன.

அந்த வகையில் பத்திரிகை பிரசாரத்தில் ஏதாவது தவறு நடந்தி ருக்கும் என்ற கருத்தை இலகுவில் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.

சிரேஷ்ட வழக்கறிஞர் கோமின் தயாசிறி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் நாட்டு க்கும் முப்படையின ருக்கும் அப கீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிடாது நாட் டின் வெற்றியை மாத்திரமே கருத் திற் கொண்டு செயற்பட வேண்டும்.
TUESDAY, DECEMBER 15, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Monday, December 14, 2009

முல்லை, கிளிநொச்சி மாவட்டங்களில் இதுவரை 22,000 பேர் மீள்குடியமர்வு உறவினர்களுடன் வசிப்போர் 17, 18இல் மீள்குடியேற்றம்



முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் இதுவரையில் 22 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோரை மீளக்குடியமர்த்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தங்கியிருப்போரை மீளக்குடியமர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வசித்து வருபவர்கள் எதிர்வரும் 17 ஆம், 18 ஆம் திகதிகளில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் பூநகரி செயலாளர் பிரிவுகளில் மீளக் குடியமர்த்தப்படவிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் நேற்று தினகரனுக்குக்குத் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களை விடுத்து வவுனியாவின் வெளியிடங்களில் தங்கியிருப்பவர்கள் தமது மீள்குடியேற்றத்தை உறுதி செய்து கொள்வதற்காக வவுனியா - குருமண்காட்டில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மீள்குடியமர்வு க்கான விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அரச அதிபர் கேட்டுக் கொண்டார்.

ஏற்கனவே, பதிவுகளை மேற்கொண்டோரே 17ம், 18ம் திகதிகளில் விசேட பஸ்கள் மூலம் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். தமக்கு அறிவிக்கப்பட்டுள்ள திகதியன்று நகர சபை மைதானத்திற்கு காலை 8 மணிக்கு வருகை தருமாறும் இதன் போது பாரிய பொதிகளை தம்முடன் எடுத்து வரவேண்டாமென்றும் அரச அதிபர் மேலும் கேட்டுக் கொண்டார்.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உருத்திரபுரம் கிழக்கு, ஜெயந்திநகர், பெரிய பரத்தன், உதய நகர் மேற்கு ஆகிய இடங்களிலும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் முழங்காவில், இரணைதீவு, நாச்சிக்குடா, ஜெயபுரம் வடக்கு, ஜெயபுரம் தெற்கு, கிராஞ்சி, பல்லவராயன்கட்டு, பொன்னாவெளி, நல்லூர், கரியாலை நாகபடுவான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களே 17ம், 18ம் திகதிகளில் மீளக்குடியமர்த்தப்படவு ள்ளனர்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுக ளில் தங்கிருக்கும் முல்லைதீவு துணுக்காய், மாந்தை கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர் களும் மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
MONDAY, DECEMBER 14, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, December 9, 2009

கட்சிக்குள் குவியும் பணங்களை ரணில் கொள்ளையடிக்கிறார் ஐ.தே.க. சார்பில் வேட்பாளர் இன்றேல் கடும் நடவடிக்கை



ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடந்த முறை தேர்தலின் போது 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்தன. 09 மில்லியன் டொலர்களே தேர்தலுக்கு செலவானது. மிகுதி பணத்துக்கு என்ன நடந்தது? என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோர்ன்ஸ்டன் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.

எமது கட்சிக்கு மூடை மூடையாக பில்லியன்களில் பணம் வந்து குவிகின்றது. கட்சித் தலைவர் அப் பணத்தை நன்கு கொள்¨ ளயடிக்கிறார். ‘ஐக்கிய தேசியக்கட்சி’ எனும் பெயரில் அங்கு ரணில் விக்கிரமசிங்க கொம்பனிதான் நடக்கிறதெனவும் ஜோன்ஸ்டன் எம். பி. நேற்றுக் கூறினார். நிப்பொன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மக்களைக் கூட சந்தித்து பேச நேரமில் லாத ஐ.தே.க. தலைவர் அறைக் குள்ளி ருந்து எவ்வாறு பணத்தை சுருட்டலாம் என்பது பற்றியே சதா சிந்தித்துக் கொண்டி ருப்பார். அவருக்கு கட்சி பற்றியோ ஆதரவாளர்கள் பற்றியோ சிறிதும் கவ லையில்லை.

பல்வேறு வழிகளிலும் கட்சிக்கு கிடைக்கும் பணத்தை கொள் ளையடிப்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தனது தலைவர் பதவியை இழக்க விருப் பமில்லாமல் கட்சிக்கு வெளியிலிருந்து ஒருவரை தேர்தல் வேட்பாளராக நிறுத்தி யுள்ளாரென்றும் ஜோன்ஸ்டன் எம்.பி. தெரிவித்தார்.
அரசியல் அனுபவமில்லாத ஜெனரல் சரத் பொன்சேகா எப்படி பொது மக்க ளுக்காக சேவையாற்ற முடியும். எவ்வாறு அவரை நம்பி முழு நாட்டையும் ஒப்ப டைக்க முடியும். எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னதாக ஐ.தே.க. கட்சிக்குள்ளிருந்து ஒரு பொது வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும் இல்லையேல் நாம் கட்சித் தலைமைத் துவத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை யெடுக்க நேரிடுமெனவும் அவர் கூறினார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எம். பி. மேலும் கூறுகையில்,

ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக பொது வேட்பாளராக ஜெனரலை நியமிக்க ஐ.தே.க. சார்பில் நடத்தப்பட்ட செயற்குழுக் கூட்டத்தில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த வர்களில் நானும் ஒருவன். நான் ஊட கங்களில் அது குறித்து விளக்கமளித்த தையடுத்து அதனை நிறுத்துமாறும் கூறி எனது அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் கையடக்கத் தொலைபேசிக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்தன. தான் அதற்கு அஞ்சவில்லை.

கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் எனக் குண்டு. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கி ரமசிங்க ஒரு தலைவருக்குரிய இலட் சணங்களுடன் நடந்து கொள்கின்றார் இல்லை. எஸ். பி. திஸாநாயக்க போன்ற திறமையானவர்கள் கட்சியை விட்டு செல்லக் காரணம் இவரது நடத்தையே. திறமையானவர்கள் கட் சியை விட்டுப் போவது குறித்து தலைவர் ரணிலுக்கு சிறிதும் கவலையில்லை.
செயற்குழுக் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தை யடுத்தே இவர் கட்சியை விட்டு விலகியிருப்பதாக ஒரு ஊடகத்தில் அவர் சிரித்துக் கொண்டு பொய் கூறுகிறார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட் சியை எதிர்த்துப் போட்டியிட தைரிய மில்லாவிடில் முதுகெலும்புடைய எஸ். பி., சஜித் பிரேமதாச போன்றவர்களை வேட்பாளர்களாக நியமித்திருக்க வேண்டும்.

எமது கட்சி ஆதரவற்றிருந்த சமயத்தில் எதிர்க்கட்சியிலிருந்து ஏழெட்டு பாராளு மன்ற உறுப்பினர்களுடன் ஐ.தே.கவுக்கு வந்து அதனை கட்டியெழுப்ப உதவியவர் எஸ்.பி. அந்த நன்றியை ரணில் மறந்து விட்டார். திறமை மிக்கவர்கள் போன பின்னர் தொடர்ந்தும் கட்சியில் தானே தலைவராகவிருக்க வேண்டுமென்பதே அவரது விருப்பம்.

இவ்வாறான குறுகிய உள்நோக்கம் கொண்டவர்கள் இருக்கும் கட்சி எவ்வாறு முன்னேற முடியும். சந்திரிகா ஐ.தே.க.வுக்கு எதிராக செய்த மோசடிகளை மறந்து விட்டு இன்று சந்திரிகாவுடனும் மங்களவுடனும் இணைந்து இணையத்தளத்தில் எமக்கு சேறு பூசுகிறார். இந்தப் பயணம் நீடிக்காது.
ஐ.தே.க. வின் கொள்கைகளில் முரண் பட்டிருக்கும் எனக்கு இன்னமும் கட்சி யிலிருந்து விலகுமாறு கோரி கடிதம் தரா மலிருப்பது அதிசயமாகவுள்ளது. நானும் கட்சியை விட்டு விலகினால் அதை விட பெரிய சந்தோஷம் எமது தலைவருக்கு வெறெதுவுமாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
WEDNESDAY, DECEMBER 09, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Monday, December 7, 2009

ஜனாதிபதி மஹிந்தவுடன் நேருக்குநேர் போட்டியிடும் தகுதி ரணிலிடம் கிடையாது வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகளும் ஜனாதிபதிக்கே -நந்தமித்ர



மக்களின் ஆதரவை தன்னால் வென்றெடுக்க முடியாது என்பது தெட்டத் தெளிவாக விளங்கியுள்ள நிலையிலும், தனது தலைவர் பதவி மாத்திரம் எக்காரணம் கொண்டும் பறிபோய்விடக் கூடாது என்பதில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தளை மாவட்ட அமைப்பாளர் நந்தமித்ர ஏக்கநாயக்க எம்.பி. நேற்று குற்றம் சாட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதியாகக்கூடிய தகுதியும் ஆளுமையும் உள்ள பலர் இருக்கின்ற நிலையிலும் அவர்களை தேர்தலில் போட்டியிடவிடாது வெளியிலிருந்து ஒருவரை கொண்டுவந்திருப்பது தனது தலைவர் பதவியை தக்க வைத்துக்கொள்ளவேயெனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான வதந்திகளை பரப்பி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் ஐ.தே.கவினால் பணம் வழங்கி நியமிக்கப்பட்டவர்களாகும்.

அப்பலோ நிறுவனத்தை பாதுகாப்பு செயலாளர் வாங்கியதாகவும் ஜனாதிபதியின் சகோதரர்கள் கொழும்பில் பெறுமதியான சொத்துக்களை வாங்கி வருவதாகவும் வதந்தி பரப்பப்பட்டுள்ளது. இவற்றில் எதுவித உண்மையும் கிடையாது.

40 வருட காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தவர்கள் இவ்வாறு பணம் திரட்டியது கிடையாது. இவ்வாறு பணம் திரட்டும் தேவையும் கிடையாது.

நாட்டுக்கு சேவையாற்றவே கோட்டாபே ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து இல ங்கைக்கு வந்தார். யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க பங்களித்த அவர் அதில் வெற்றியும் கண்டார். புனரமைப்பு பணிகளை பசில் ராஜபக்ஷ சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.

இவர்களின் பணிகள் தொடர்பில் குறைகூற எதுவுமில்லாத தாலேயே இவ்வாறு வதந்தி பரப்பப்படுகிறது. ஜனாதிபதியின் சகோதரர்கள் கொழும்பில் சொத்து வாங்குவது உண்மையானால் அதனை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும். மக்கள் மனங்களை குழப்பவே இவ்வாறு வதந்தி பரப்பப்படுகிறது.

ஐ.தே.க. ஆட்சியில் அன்றிருந்த அமைச்சர்கள் தமது குடும்பத்தவர்களுக்கு அரச சொத்துக்களை குத்தகைக்குக் கொடுத்தனர் என்றார்.
MONDAY, DECEMBER 07, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, December 2, 2009

நிவாரணக் கிராம மக்கள் சுதந்திரமாக நடமாட்டம்; அரசுக்கும் ஜனாதிபதிக்கும் நன்றி தெரிவிப்பு


யுத்தத்தினால் இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள சகலரும் நேற்று முதல் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கப்பட்டு ள்ளதையடுத்து நேற்று முதலாம் திகதி ஆயிரக்கணக்கானோர் நிவார ணக் கிராமங்களிலிருந்து வெளியே செல்வதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

தம்மை சுதந்திரமாக நடமாட அனுமதித்தமைக்காக ஜனாதிபதிக் கும் அரசாங்கத்துக்கும் நன்றி தெரி வித்துள்ளனர். அத்துடன் மோதல் களின்போது தம்மைக் காப்பாற்றி சுதந்திரத்தைப் பெற்றுத் தந்திருக்கும் ஜனாதிபதிக்கு என்றும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர்கள் அரசாங்க அதிபரிடம் கூறியதாக அவர் தினகரனுக்குத் தெரி வித்தார்.

நேற்று முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையிலேயே நிவாரணக் கிராமங்களில் தங்கியிரு ந்தவர்களுக்கு சுதந்திரமாக நடமாட அரசாங்கம் அனுமதி வழங்கியிரு ந்தது. அதற்கமைய நேற்றுக் காலை 6 மணி முதல் மக்கள் நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியே செல் வதாக அரசாங்க அதிபர் கூறினார்.

நிவாரணக் கிராமத்திலிருந்து நேற்று வெளியேறியோருள் பலர் வவுனியா மாவட்டத்தினுள்ளும் ஏனையோர் ஏனைய மாவட் டங்களுக்கும் சென்றுள்ளனர்.

ஒவ்வொரு நிவாரணக் கிராமத்தி லிருந்தும் சுமார் 700 தொடக்கம் 800 வரையானோர் நேற்று வெளி யேறியுள்ளனர். இவர்களுள் பலர் நண்பகல் 12 மணிக்குள் திரும்பி வந்துவிட்டதாகவும் ஏனையோர் நான்கு, ஐந்து தினங்களுக்குப் பின் னரே வருவதாகக் கூறிச் சென்றி ருப்பதாகவும் அரச அதிபர் தெரிவி த்தார்.

நிவாரணக் கிராமங்களை விட்டு வெளியில் நடமாட விரும்பியவர்களது பெயர் விவரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னரே அவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நிவாரணக் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு ள்ளதுடன் வெளியில் நடமாட விரும்பியோர்க்கென விசேட நுழைவு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
நிவாரணக் கிராமத்தை விட்டு வெளியேறுவோர் மீண்டும் அங்கே வரும்போது நுழைவு அனுமதியை தம்முடனேயே எடுத்து வரவேண்டியது கட்டாயமெனவும் அரச அதிபர் சார்ள்ஸ்

கூறினார் WEDNESDAY, DECEMBER 02, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, December 1, 2009

பாரிய அபிவிருத்தியும் பொருளாதார வலுவூட்டலுமே ஜனாதிபதியின் குறிக்கோள்:அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்த நோக்கத்தோடு பதவியேற்றாரோ அந்த நோக்கம் நிறைவேறி விட்டது. தற்போது அவர் அபிவிருத்திப் பாதையில் நாட்டை இட்டுச் செல்கின்றார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதன் மூலம் அபிவிருத்தி திட்டங்களின் பாரிய இலக்குகளை நிறைவேற்றுவதே ஜனாதிபதியின் தற்போதைய ஒரே குறிக்கோளாகுமென தகவல் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது ஜனாதிபதி முப்படைகளினதும் தலைவராக விருந்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இனி அவரது இலக்கு நாட்டில் பாரிய மட்டத்திலான அபிவிருத்திகளை முன்னெடுப்பதும் பொருளாதாரத்தை வலுவூட்டுவதாகும்.

35 வருட அரசியல் அனுபவமுடைய ஜனாதிபதிக்கு பொருளாதாரம் மற்றும் அரசியல் பற்றி புதிதாக கற்க வேண்டிய அவசியமில்லை. உலக நாடுகள் பல பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்த வேளையிலும் எமது நாட்டில் ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா செலவில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள தென்றால் அது ஜனாதிபதியின் சிறப்பான ஆட்சிமுறையினை வெளிப்படுத்துவதாகவே உள்ளதெனவும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா கூறினார்.

நாட்டின் அபிவிருத்திப் பணிகள் ஒரு இடத்துக்கு மாத்திரம் உரித்தானவையல்ல. அது சகல மூலை முடுக்கிற்கும் கொண்டு செல்லப்பட வேண்டுமென்பதனையே ஜனாதிபதி மீண்டும் மீண்டும் கூறிவருகிறார்.
அரசியலுக்குள் பிரவேசிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.

அந்த வகையில் முன்னாள் இராணுவ அதிகாரி மாத்திரம் இதற்கு விதி விலக்காக மாட்டார். அதற்காக தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் அரசாங்கம், தான் கோரிய பாதுகாப்பினை தனக்கு தர மறுத்து விட்டதாகக் கூறி பொதுமக்களிடையே தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி அவர்களது சிந்தனையை திசை திருப்ப முயல்கின்றார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவினால் கோரப்பட்டிருந்த 05 பெண் இராணுவ வீராங்கனைகளை தவிர்ந்த ஏனைய அனைத்தும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் 70 பாதுகாப்பு அதிகாரிகளையே கோரியிருந்தார். ஆனால் மொத்தமாக 72 பேர் அவருக்காக வழங்கப்பட்டுள்ளனர். இது அரசாங்கத்தின் கடமை. இது பற்றி பலரும் பிழையான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார்.

சுமார் 40 வருட கால வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே ஒரு பெது வேட்பாளரை தெரிவுசெய்ய முடியாமல் போய்விட்டது.

சிறுபிள்ளைத்த னமாக யாரோ ஒருவரை நிறுத்த வேண்டுமென்பதற்காகவே பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளனர். இது இலட்சியம் கொண்ட பொது வேட்பாளருக்கும் குறிக்கோள் எதுவுமற்ற கேட்பாட்டாளர்களுக்குமிடையிலான போட்டியென்பதனை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
TUESDAY, DECEMBER 01, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Monday, November 30, 2009

திருமலையில் காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு:கடற்படையினருக்கு தொடர்பில்லை - பேச்சாளர்




திருமலை கொட்பே மீனவர் துறைமுகத் திலிருந்து கடத்திச் செல்லப்பட்டு பின்னர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இளைஞனுக்கும் கடற்படையி னருக்கும் எதுவித தொடர்பும் இல்லையென கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் அத்துல செனரத் தெரிவித்துள்ளார்.

குடிபோதையிலிருந்த மேற்படி சிங்கள இளைஞனை அன்றைய தினம் துறைமுகத்தில் கடமையிலிருந்த கடற்படை வீரரே கடத்திக் கொலைசெய்ததாக மீனவ சமூகத்தினால் முன்வைக்கப்படும் கூற்றை மறுக்கும் கடற்படைப் பேச்சாளர் கொலைக்கும் கடற்படையினருக்கும் எவ்வித தொடர்புமில்லையென தினகரனுக்குக் கூறினார்.
MONDAY, NOVEMBER 30, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, November 25, 2009

யாழ். எஸ். எஸ். பி சார்ள்ஸ் கொலை: பிரதான சந்தேக நபர் கைது


யாழ். மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சார்ள்ஸ் விஜேவர்தன கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

சுண்ணாகம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சுண்ணாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரகாஷ் (31) எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

யாழ். மாவட்டத்தின் பொறுப்பாளராக கடமையாற்றி வந்த பொலிஸ் அத்தியட்சகர் சார்ள்ஸ் விஜேவர்தன கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி புலிகளினால் கடத்திச் செல்லப்பட்ட பின் வெட்டிக் கொலை செய்யப்படடார்

WEDNESDAY, NOVEMBER 25, 2009 லக்ஷ்மி பரசுராமன்

தமிழ்க் கூட்டமைப்புதிருமலை மாவட்ட உறுப்பினர்கள் பசில் ராஜபக்ஷவுடன் சந்திப்பு


தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினர்.

திருகோணமலை மாவட்ட நகர சபைத் தலைவர் எஸ். ஜி. முகுந்தன், உப்புவெளி நகர மற்றும் கிராம சபைத் தலைவர் டி. கந்தரூபன், குச்சவெளி பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் யு. ரவிகுமார், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திருமலை மாவட்ட அரசியல் விவகாரங்களுக்கான ஊடக செயலாளர் மற்றும் குழு இணைப் பாளர் எஸ். அசோக் சிவகுமரன் ஆகியோரே நேற்று பசில் ராஜபக்ஷ எம்.பியை சந்தித்துள்ளனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கும் அரசாங்கத்துக்கும் தமது முழுமையான ஆதரவினை பெற்றுக் கொடுக்குமென கூட்டமைப்பின் திருமலை மாவட்ட உறுப்பினர்கள் பசில் எம்.பியிடம் இச்சந்திப்பின் போது உறுதி அளித்துள்ளனர்.
WEDNESDAY, NOVEMBER 25, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, November 24, 2009

பிரதமர் மற்றும் போகொல்லாகம மேற்கிந்தியதீவு பயணம்


பொதுநலவாய அமைப்பின் 21வது மாநாடு டிரினிடாட்டொபாகோவில் இன்று (24) ஆரம்பமாகிறது. இம்மாநாட்டில் இலங்கை சார்பாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் கலந்து கொள்கின்றனர்.

மாநாட்டில் பங்குபற்றுவதற்காக அமைச்சர் போகொல்லாகம இன்று காலை மேற்கிந்தியதீவுக்கு புறப்பட்டுச் செல்வதாக வெளிவிவகார அமைச்சு நேற்றுத் தெரிவித்தது.

பொதுநலவாய அமைப்பின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் மாநாட்டில் காலநிலை மாற்றம், சர்வதேச பொருளாதாரம் மற்றும் அகதிகள் விவகா ரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க எதிர்வரும் 27ம் திகதி முதல் 29ம் திகதிவரையான இறுதி மூன்று நாட்களும் மாநாட்டில் கலந்துகொள்வரென்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
TUESDAY, NOVEMBER 24, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Monday, November 23, 2009

வவுனியா வடக்கு மீள்குடியமர்த்தும் தினம் பற்றி இன்று முடிவெடுக்கப்படும்



வவுனியா வடக்கில் மீள்குடியேற் றத்துக்கு தயார் நிலையிலிருக்கும் ஆறு கிராமசேவகர் பிரிவுகளிலும் அனைத்து உட்கட்டமைப்பு பணிக ளும் இவ்வாரத்துக்குள் பூர்த்தியாக்க ப்படுமென வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்று தெரிவித்தார்.

மோதல் காரணமாக வவுனியா வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப் போரில் முதற் கட்டமாக 300 குடும் பங்கள் விரைவில் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தும் தினம் தொடர்பாக தமது தலை மையில் இன்று கூடி ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

வவுனியா வடக்கிலுள்ள 20 கிராம சேவகர் பிரிவுகளில் 06 கிராம சேவகர் பிரிவுகள் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட நிலையில் மீள்குடி யேற்றத்துக்கு தயார் நிலையிலுள் ளன. இப்பிரதேச செயலாளர் பிரிவு களில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் துரித கதியில் மேம்படுத் தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அனைத்துப் பணிக ளும் இவ்வாரத்துக்குள் பூர்த்தி யாக்கப்படுவதுடன் அனைத்து அலு வலகங்கள் மற்றும் உப அலுவலக ங்களும் இவ்வாரம் முதல் செயற் படுமெனவும் அரசாங்க அதிபர் கூறி னார்.

இதேவேளை மேற்படி ஆறு கிராமசேவகர் பிரிவுகளிலும் உள் வீதிகளை புனரமைப்பு செய்வதற் கென உலக வங்கி 25 மில்லியன் ரூபாவினை வழங்கியிருப்பதாகவும் புனரமைப்பு வேலைகள் மும்முர மாக நடைபெற்று வருதாகவும் அவர் மேலும் கூறினார்.

நிவாரணக் கிராமங்களில் நேற் றைய திகதிக்கு ஒரு இலட்சத்து 27 ஆயிரம் பேர் வரையிலானோரையே மீளக்குடியமர்த்தப்பட வேண்டியுள் ளது.

இவர்கள் முல்லைத்தீவு, கிளி நொச்சி, மன்னார் மற்றும் வவு னியா வடக்கைச் சேர்ந்தவர்கள். அனைவரும் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்குள் மீளக்குடியமர்த்தப் படவுள்ள நிலையில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தோரை விரை வில் மீளக்குடியமர்த்துவதற்கான நட வடிக்கைகளை அரசாங்கம் முன் னெடுத்து வருகிறது.

அந்த வகையில் வவுனியா வட க்கில் மீதமாகவுள்ள 14 கிராம சேவகர் பிரிவுகளிலும் கண்ணிவெடி யகற்றும் பணிகள் துரிதப்படுத்த ப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் சார்ள்ஸ் கூறினார்.

அதேவேளை நிவாரணக் கிராமத் திலுள்ள 800 பேர் இன்று முல்லை த்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கில் மீளக்குடியமர்த்தப்பட விருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவி த்தார்.

கடந்த வாரம் இங்கு 1100 பேர் மீளக்குடியமர்த்தப்பட்டமை குறிப் பிடத்தக்கது.
MONDAY, NOVEMBER 23, 2009 லக்ஷ்மி பரசுராமன்

சார்க் வர்த்தக தலைவர்களின் 3வது மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பம்:முதல் அமர்வில் பிரதமர் பிரதம அதிதி


சார்க் வர்த்தக தலைவர்களது மூன்றாவது மாநாடு நேற்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமானது.

தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு நடைபெறவிருக்கும் இம்மாநாட்டின் நேற்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இங்கை வர்த்தக சம்மேளனமும் சார்க் வர்த்தக சம்மேளனமும் இணைந்து, ‘தெற்காசியாவில் சமூக பொருளாதார அபிவிருத்திக்கான பிராந்திய ஒத்துழைப்பு’ எனும் தொனிப் பொருளில் இம்மாநாட்டை ஏற்பாடு செய்திருந் தது.

இம்மாநாட்டில் தெற்காசிய பிராந்தியத்தின் காலநிலை மாற்றம், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.

ஒரு நாட்டின் அபிவிருத்தி தனியே அந்த அரசாங்கத்தில் மட்டும் தங்கியிருக்கவில்லை. தனியார் துறையின் பங்களிப்பும் இதற்கு மிக அவசியம்.

எமது நாட்டினுடைய எதிர்காலம் எமது கைகளிலேயே உள்ளது. தெற்காசிய பிராந்தியத்¨தைச் சேர்ந்த நாம் கைகோர்த்து செயற்படுவதன் மூலமே எமது நாடுகளை வளம் மிக்கதாக ஆக்க முடியும்.

அதற்கு வர்த்தக சம்மேளனத்தின் ஒத்துழைப்பு அவசியம் தேவையென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தனது உரையில் குறிப்பிட்டார்.
MONDAY, NOVEMBER 23, 2009 லக்ஷ்மி பரசுராமன்

மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை வழங்கி வானை கடத்திய மர்ம மனிதர்:வெள்ளி சம்பவம்; சனிக்கிழமை மர்ம மனிதர் வானுடன் கைது



வானில் பயணம் செய்தோரை மயக்கி வேனை அபகரித்துச் சென்ற மர்ம மனி தரை பொலிஸார் வேனுடன் கையும் மெய்யுமாக கைது செய்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கரு ணாரத்ன தெரிவித்தார்.

இச்சம்பவம் கட்டுநாயக்க பகுதியில் வெள்ளி இடம்பெற்றுள்ளது. கிரிபத்கொடையில் வேனை வாடகைக்கு அமர்த்தி மூன்று நண்பர்கள் அதில் சுற்றுலா சென்றுள்ளனர்.

இதன்போது ஹோட்டல் ஒன்றில் வைத்து இடை நடுவே இந்நண்பர்களுடன் உறவை ஏற்படுத்திக்கொண்டு மர்ம மனிதர் நீர்க்கொழும்பு செல்வோமெனக் கூறி அதேவேனில் பயணித்துள்ளார்.

வெலிசர பகுதியில் வைத்து அனைவரும் இந்த மர்ம மனிதர் வாங்கிக்கொடுத்த குளிர்பானத்தை அருந்தியதையடுத்து மயக்கமுற்றுள்ளனர்.

இதனையடுத்து அம்மர்ம நபர் 16 இலட்சம் ரூபா பெறு மதியான வானை கடத்திச் சென்றுள்ளார். சனிக்கிழமை கட்டுநாயக்க எவரிவத்தை பகுதியில் வைத்து வேனை குறித்த மர்ம மனிதனுடன் கைது செய்துள்ளனர்.
MONDAY, NOVEMBER 23, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Monday, November 16, 2009

சவூதியில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்: சவூதி அரேபிய அரசுடன் பேச்சு நடாத்தபைலா தலைமையிலான குழு இன்று பயணம்



சவூதி அரேபியாபில் நிராதரவான நிலையில் இருக்கும் இலங்கையர்களை விரைவில் நாட்டுக்கு திருப்பியழைப்பது தொடர்பாக அந்நாட்டு அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவென பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் பைலா தலை மையிலான உயர்மட்டக் குழு இன்று சவூதி பயணமாகின்றது.

ஜித்தாவிலுள்ள பாலமொன்றின் கீழ் தமது தொழில் வாய்ப்புக்கள் பறிபோன நிலையில் இலங்கையர்கள் பலர் நிராதரவான நிலையிலிருப்பதாக அண்மையில் வெளிவந்த செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இதனையடுத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இப்பிரச்சினைக்கு தீர்வுக் காணும் பொருட்டு விசேட குழுவொன்றை நியமித்ததாக பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் பைலா, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் ஹரிஸ்சந்திர பட்டகொட, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஜான் ரட்நாயக்க, பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய உள்ளிட்ட குழுவினரே இன்று திங்கட்கிழமை சவூதி அரேபியா புறப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொழில் வாய்ப்புக்கள் பறிபோன நிலையில் ஜித்தா பாலத்தின் கீழ் கடந்த காலங்களில் நிராதரவான நிலையிலிருந்த 2040 இற்கும் மேற்பட்ட இலங்கையர்களை சவூதி அரேபிய அரசாங்கம் 156 மில்லியன் ரூபா செலவில் கட்டம் கட்டமாக இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இருப்பினும் தற்போது அந்நாட்டு சட்ட விதிமுறைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் காரணமாக தொழிலற்ற நிலையில் பாலத்தின் கீழ் இருப்போரை அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

ஜித்தாவிலுள்ள பாலத்தின் கீழ் தற்போது சுமார் மூவாயிரம் பேர் வரையிலானோர் தொழில் வாய்ப்பற்ற நிலையில் தங்கியுள்ளனர். இவர்களுள் 250 பேர் இலங்கையர்களாவர்.

அந்நாட்டு சட்ட விதிமுறைகளுக்கமைய விரைவில் இலங்கையர்களை திருப்பியழைப்பது தொடர்பான பேச்சுக்களை இக்குழு மேற்கொள்ளுமெனவும் பணியகத்தின் தலைவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
MONDAY, NOVEMBER 16, 2009 லக்ஷ்மி பரசுராமன்

வவுனியா மீள்குடியேற்றம், புனர்நிர்மாண பணி:ஜப்பான் அரசு, உலக ஸ்தாபனங்கள் 250 மில். அ. டொலர் வழங்க இணக்கம்


வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்குடியேற்றம் மற்றும் புனர் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக வெளிநாடுகள் மற்றும் உலக ஸ்தாபனங்கள் மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை இவ்வருடத்துக்குள் வழங்க இணக்கம் தெரிவித்திருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார்.

உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பான் அரசாங்கம் ஆகியனவே எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் இந் நிதியுதவியை வழங்க
MONDAY, NOVEMBER 16, 2009 லக்ஷ்மி பரசுராமன்

மீள் குடியேற்றத்துக்கு தயாராக 10 இடங்கள்


வவுனியா மாவட்டத்தில் 10 இடங்கள் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளுக் காக தயார் நிலையிலிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

வவுனியா வடக்கே நெடுங்கேணி உட்பட்ட ஏழு பிரதேச செய லாளர் பிரிவுகளும் வவுனியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட கன்னிக்குளம், சேமமடு, பால மடு, பன்றிக்கெய்த குளம், இர ணைக் குளம், ஆறுமுகத்தான் புதுக்குளம், மாளிகை உள்ளிட்ட பத்து இடங்களே மீள்குடியேற் றத்துக்கு தயாராகயிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மீளக் குடியர்த்தப்படுவோரு க்கு வாழ்வாதார தொழிலை
பெற்றுக் கொடுக்கும் நோக்கி லும் பெரும்போக பயிர்ச் செய்கையில் அவர்களை ஈடுபடுத்தும் வகையிலும் கைவிடப்பட்ட நிலையிலிருந்த 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு விவசாயத்துக்கு ஏற்ற வகையில் தயார் செய்யப்பட்டு வருவதா கவும் வவுனியா அரச அதிபர் சுட்டிக் காட்டினார்.

நிவாரணக் கிராமங்களில் 2 இலட்சத்து 85 ஆயிரம் பேர் இருந்த இடத்தில் தற் போது ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேரே இருக்கின்றனர்.

மீள்குடியேற்றம் மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தல் என நாள்தோறும் மூவாயிரம் தொடக்கம் நான்காயிரம் வரையான மக்கள் நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியில் செல்கின்றனர் என்றார்.
MONDAY, NOVEMBER 16, 2009 MONDAY, NOVEMBER 16, 2009

Thursday, November 12, 2009

அரச துறையில் மேலும் 17,174 பட்டதாரிகளை இணைக்க தீர்மானம்:வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம்



17 ஆயிரத்து 174 பட்டதாரிகள் அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்ளப்பட விருப்பதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது.

இதில் 14 ஆயிரம் பேர் ‘ஜன சபா’ செயலாளர்களாகவும் 3 ஆயிரத்து 174 பேர் கலைப்பட்டதாரி ஆசிரியர்களாகவும் நியமனம் பெறவிருப்பதாக நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

நிதியமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மூவாயிரத்து 174 கலைப்பட்டதாரி ஆசிரியர்களும் எதிர்வரும் ஜனவரி முதல் ஆசிரிய சேவையில் நியமனம் பெறவுள்ளனர். இதே வேளை ‘ஜன சபா’ செயலாளர்களை விரைவில் பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.

‘ஜன சபா’ செயலாளர் பதவி குறித்து அமைச்சின் முகாமைச் சேவையாளர் எல். பி. ஜயம்பதி விளக்கமளிக்கையில், வேலையில்லா பட்டதாரிகளில் மிகவும் திறமைசாலிகளையே நாம் இந்தப் பதவியில் சேர்த்துக் கொள்ளவுள்ளோம். இவர்கள் செயலாளர்களாக மட்டுமின்றி அந்த பிரதேசத்துக்குரிய தலைவரைப் போன்றும் செயற்பட வேண்டும்.

பிரதேச செயலாளர் பிரிவின் உட்கடமைப்பு வசதிகள், பொருளாதாரம், விவசாயம், கலாசாரம், விளையாட்டு ஆகிய துறை களையும் மட்டுமின்றி போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதுடன் சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட சகல அம்சங்களையும் கையாளக் கூடியவராக இருக்க வேண்டும்.

‘ஜன சபா’ செயலாளர்களாக நியமிக் கப்படுவோருக்கு 15,250 ரூபா தொடக்கம் 25,965 ரூபா வரையிலான தொகை அடிப்படைச் சம்பளமாக வழங்கப்படும். இவர்களது பதவி நிரந்தரமானது.

அத் துடன் ஓய்வூதியமும் கிடைக்கும் அரச ஊழியர்களுக்கான அனைத்து சலுகைக ளையும் இவர்கள் பெறமுடியும். சாதார ணமாக எட்டு மணித்தியாலங்கள் மட்டும சேவை புரிபவராகவன்றி 24 மணித் தியாலங்களும் பொதுமக்களின் தேவையை கருத்திற் கொண்டு செயற்படுபவர்களையே நாம் இப்பதவிக்காக எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.

நாட்டை அபிவிருத்தி செய்வதானால் அபிவிருத்தியை ஆரம்பிக்க வேண்டுமென மஹிந்த சிந்தனையில் குறிப் பிட்டதற் கமைய கிராமங்களை கட்டி யெழுப்புவதற்கு விசேடமாக இப்பதவியை பட்டதாரிகளுக்கு வழங்க தீர்மானித்திருப் பதாக அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இலங்கையில் பதிவு செய் யப்பட்ட எந்தவொரு அரசாங்க பல்கலைக் கழகங்களில் இருந்தும் பட்டம் பெற்ற 22 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இரு பாலாரும் இப்பதவிக்காக விண்ணப் பிக்கலாம். தெரிவு செய்யப்படுவோருக்கு தாம் வசிக்கும் பிரதேச செயலாளர் பிரிவிலேயே நியமனம் வழங்கப்படுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
THURSDAY, NOVEMBER 12, 2009 லக்ஷ்மி பரசுராமன்

இயல்பு நிலை பாதிக்கப்பட்டால் சேவையில் ஈடுபட படையினர் தயார்:இராணுவப் பேச்சாளர்



தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமா யின் அதனை நிவர்த்தி செய்யும் வகை யில் சேவையில் ஈடுபட படைவீரர் கள் தயார் நிலையில் வைக்கப்பட்டி ருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரி கேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தின் கீழ், நாட்டின் இயல்பு நிலையை சீராக பேணுவதற்கு அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் படை வீரர்களின் ஒத் துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

அந்த வகையிலேயே முப்படை யினர் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ளதாக பிரிகேடியர் நாணயக் கார கூறினார்.

தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே பிரிகேடியர் மேற் கண்டவாறு கூறினார்.

இலங்கை மின்சார சபையின் இயந்திரங் களை இயக்குதல், பெட்ரோல் பெளசர்களை ஓட்டுதல் போன்ற சேவைகளை படையினர் முன்னெடுப்பர். இதற்கு முன்னரும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் படையினர் மேற்படி சேவைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

துறைமுக அதிகார சபை, பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் சபை ஆகியவற்றின் தொழிற் சங்கங்கள் சில ஒன்றிணைந்து சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை நேற்று முதல் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
THURSDAY, NOVEMBER 12, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, November 11, 2009

மின்சாரசபை, பெற்றோலிய் ஊழியருக்கு சம்பள உயர்வு:இம்மாதம் முதல் அமுல்; கல்விக் கல்லூரி மாணவர் கொடுப்பனவும் அதிகரிப்பு



கல்விக் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை இரண்டு மடங்காக அதிகரிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி ருவன்புர தேசியக் கல்விக் கல்லூரியின் தகவல் தொழில் நுட்பப்பீடத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி இதற்கான பணிப்புரையை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு வழங்கினார்.

கல்விக் கல்லூரி மாணவர்க ளுக்கு தற்போது மாதாந்தக் கொடுப்பனவாக 2,500 ரூபா வழங்கப்பட்டு வருகிறது.

இதனை 5,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கல்வி அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.

இது பற்றி கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அடுத்த வருடத்திலிருந்து இக்கொடுப்பனவு அதிகரிக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை பெட்ரோலியக் கூட்டுத் தாபன ஊழியர்களுக்கு இம்மாதம் (நவம்பர்) முதல் அமுலுக்கு வரும் வகையில் அடிப்படைச் சம்பளத்தில் 22 சதவீத அதிகரிப்பை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் ஏ. எச். எம். பெளசி நேற்றுத் தெரிவித்தார்.

2009ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களுக்கான சம்பள அதிகரிப்பு நிலுவையை ஜனவரியில் வழங்கத் தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அமைச்சில் நேற்று மாலை அமைச்சர் பெளசி தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கொள்கையடிப்படையில் இராணுவத்தினர், பொலிஸார் உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இம்மாதம் முதல் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுகிறது.

அந்த அடிப்படையிலேயே பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர் களுக்கும் சம்பள அதிகரிப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டிருப்பதனால் கூட்டுத்தாபன ஊழியர்கள் இன்று முன்னெடுக்க திட்டமிட்டிருக்கும் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்கப் போராட்டத்தை கைவிடு மாறும் அமைச்சர் பெளசி கேட்டுக் கொண்டுள்ளார்.

வழங்கப்படவிருக்கும் சம்பள அதி கரிப்பு தொடர்பாக நேற்று கூட்டுத் தாபனத்தின் குறித்த தொழிற் சங்கங் களுடன் அமைச்சரும் சம்பந்தப் பட்ட அதிகாரிகளும் பேச்சு நடத்தியு ள்ளமை இருப்பினும் தொழிற் சங் கங்கள் அதற்கு இணக்கம் தெரிவி க்கவில்லை. 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் சம்பள அதிகரிப்புக்கான நிலுவையை தமக்குப் பெற்றுத் தர வேண்டுமென்ற கோரிக்கையிலேயே அவர்கள் தொடர்ந்துமி ருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஜனவரி முதல் சம்பள அதிகரிப்புக்கான நிலுவையைப் பெற்றுக் கொடுப்பது சாத்தியமாகாது. கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் பாரிய செலவீனங்களை செய்திருந்தமையினால் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப் பகுதிக்குரிய சம்பள அதிகரிப்பு நிலுவையை அரசாங்கத்துக்கு தியாகமாக வழங்க முன்வர வேண்டுமெனவும் அமைச்சர் தொழிற்சங்கங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால் மக்கள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாக நேரிடுமா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எவ்வித தடங்கல்களும் இல்லாமல் பெட்ரோல், டீசல் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்கான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையிலிருப்பதாக குறிப்பிட்டார்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திலேயே பெருமளவிலான ஊழியர்கள் சேவை புரிகின்றனர். சில தொழிற்சங்கங்கள் இவ்வாறான போராட்டத்தில் ஈடுபட்டாலும் எமக்கு நம்பிக்கைக்குரியவர்கள் சீரான சேவையை பெற்றுக் கொடுப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

வழமைக்கும் மாறாக 1600 லீற்றர் டீசல் கொண்ட 300 பவுசர்கள் கொலன்னாவை எண்ணெய்க் களஞ்சியசாலைக்கும் 6600 லீற்றர் டீசல் கொண்ட 300 பவுசர்கள் முத்துராஜவெல எண்ணெய்க் களஞ்சியசா லைக்கும் நேற்று நள்ளிரவுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் பெட்ரோல் தாங்கிகள் முழுவதையும் நிரப்புவதற்கு கடன் வசதிகளையும் நாம் வழங்கியிருக் கிறோம். எனவே, பொதுமக்கள் இதற்காக அஞ்சவோ நீண்ட வரிசையில் காத்திருந்து காலத்தை வீணடிக்கவோ தேவையில்லை.

சில விஷமிகள் திட்டமிட்டு அரசாங்க த்துக்கு சேறு பூசவேண்டுமெ ன்பதற்காக சிறு போத்தல்களை ஏற்றிக் கொண்டு நள்ளிரவு முதல் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையிலேயே நாம் வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். எனவே, பொதுமக்கள் இதற்காக அஞ்சி எரிபொருளை வாங்கி சேமித்து வைக்க வேண்டிய அவசியம் ஒருபோதும் இல்லையெனவும் அமைச்சர் பெளசி வலியுறுத்திக் கூறினார்.
WEDNESDAY, NOVEMBER 11, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Monday, November 9, 2009

கியூபா நாட்டு பிரதி வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகை:மியன்மார் ஜனாதிபதி 12 இல் விஜயம்


கியூபா பிரதி வெளிவிவகார அமைச்சர் மார்கொஸ் ரொட்ரிகஸ் கொஸ்டா இன்று (9ம் திகதி) இலங்கை வருகிறார்.

இலங்கைக்கும் கியூபாவுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருட பூர்த்தியை சிறப்பிக்கும் முகமாகவே அந்நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்.

இதேவேளை இலங்கை - கியூபா 60 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு வெளிவிவகார அமைச்சில் இன்று முத்திரையொன்றும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

இதேவேளை நாளை மறுதினம் புதன்கிழமை தென்னாபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சரும் வியாழக்கிழமை மியன்மார் ஜனாதிபதியும் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள தாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
MONDAY, NOVEMBER 09, 2009 லக்ஷ்மி பரசுராமன்

ஏ(எச்1என்1): இலங்கையில் முதல் மரணம்::கண்டி வைத்திய தம்பதியரின் 16 வயது புதல்வன் உயிரிழப்பு


இலங்கையில் முதல் தடவையாக ஏ(எச்1என்1) இன்புளுவன்சா நோய்த்தாக்கத் திற்கு கண்டியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பலியாகியுள்ளார். வைத்தியத் தம்பதியினரின் மகனான மேற்படி பாடசாலை மாணவன் கடந்த புதன்கிழமை இரவு கண்டி போதனா வைத்தியாலையில் உயிரிழந்துள்ளார்.

பொதுமக்கள் இதுகுறித்து கவலையடையத் தேவையில்லையெனவும் உயிரிழந்தவர் ஏற்கனவே முள்ளந்தண்டு மற்றும் நுரையீரல் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவரை ஏ(எச்1என்1) இன்புளுவன்சா வைரஸ் தாக்கியிருக்கின்றது என வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குருநாகல் மாவட்டத்தில் ஏ(எச்1என்1) இன்புளுவன்சா வைரசினால் பாடசாலை மாணவர்கள் இருவர் பாதிக்கப்பட்டமை ஊர்ஜிதம் செய்யப்பட்டதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்ட அம்மாவட்டத்தின் நகரப் பாடசாலைகள் அனைத்தும் இன்று மீள திறக்கப்படுவதாக கல்வியமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வைரஸ் தாக்கத்துக்கு உள்ளான மாணவர்கள் இருவரும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
MONDAY, NOVEMBER 09, 2009 லக்ஷ்மி பரசுராமன்

சு. க. வின் 19வது தேசிய மாநாட்டில் 15 நாடுகளின் பிரதிநிதிகள்



“சூழ்ச்சிகளை முறியடித்து நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதியுடன் கைகோர்ப்போம்” எனும் தொனிப் பொருளிலேயே இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு நடத்தப்படவிருப்பதாக மேல் மாகாண ஆளுநரும், சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவருமான அலவி மெளலான தெரிவித்தார்.

கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி தேசிய மாநாட்டை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சி ஏற்பாட்டாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 19வது தேசிய மாநாடாகும். மூன்று மணியளவில் ஆரம்பமாக விருக்கும் இந்த மாநாட்டிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குவார்.

இந்த மாநாட்டில் அரசாங்கத்தின் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கான கொள்கை அறிக்கை வெளியிடப்படுவதோடு, தேர்தல்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பும் வெளியிடப்படுமென சு.க. வட்டாரங்கள் தெரிவித்தன. நாடு முழுவதிலுமிருந்து சு.க. கிளைகளின் பிரதிநிதிகள், சு.க. அமைப்பாளர்கள், ஐ.ம.சு.மு. வில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றுவார்கள்.

சு.க. வின் தேசிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனா, இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் பத்துக்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்வதெனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்தார். சு.க. வின் அழைப்பையேற்று பிரிட்டிஷ் கன்சர்வேட்டிக் கட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பங்குபற்றுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்களெனத் தெரியவருகிறது.
MONDAY, NOVEMBER 09, 2009 லக்ஷ்மி பரசுராமன்

மாளிகாவத்தையில் இளைஞன் கைது


மாளிகாவத்தையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று 2 கிராமும் 50 மில்லிகிராமும் கொண்ட ஹெரோயின் பக்கற்றுக் களுடன் கைது செய்யப்பட்டிருப் பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.


காலி கின்தோட்டை ரயில்வே கடவைக் கருகில் வைத்தே மேற்படி இளைஞர் தென்மாகாண பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
MONDAY, NOVEMBER 09, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Friday, October 30, 2009

சுனாமி எச்சரிக்கை ஒத்திகை வெற்றி



கிழக்கு மாகாணம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டதென அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.


சுனாமி அனர்த்தம் இடம்பெறக்கூடியதற் கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு ஆகக் குறைந்தது 16 நிமிடங்களுக்குள் அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது மக்களும் ஆகக் கூடிய 30 நிமிடங்களுக்குள் காலி மாவட்டத்தின் பெரலியிவைச் சேர்ந்த மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவ்வதிகாரி தெரிவித்தார்.


சுமாத்திரா தீவில் நேற்று பி.ப. 2.50 மணிக்கு பூகம்பம் இடம்பெற்றதாக கற்பனை செய்து இலங்கையின் குறித்த ஆறு மாவட்டங்களிலும் சுனாமி அனர்த்தம் இடம்பெறக்கூடியதற்கான வாய்ப்பு இருப்பதாக மாலை 3.40 மணியளவில் அனைத்து அனர்த்த முகாமைத்துவ நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டது.


நிலைய இணைப்பாளர்கள் ஆறு மாவ ட்டங்களைச் சேர்ந்த கரையோர மக்களையும் விழிப்புணர்வூட்டி பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். ஆகக்கூடியது 30 நிமிடங்களுக்குள் இதனை வெற்றிகரமாக செய்து முடிக்கக் கூடியதாக விருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய ஆறு மாவட்டங்க ளில் நேற்று சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடத்தப்பட்டமை குறிப்பித்தக்கது.

FRIDAY, OCTOBER 30, 2009 லக்ஷ்மி பரசுராமன்

பம்பலப்பிட்டி கடலில் இளைஞன் அடித்துக் கொலைபொலிஸ் விசாரணைக்கு உத்தரவு:


பம்பலப்பிட்டி கடலில் நேற்று மாலை இளைஞரொருவர் அடித்துக் கொல் லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.


குறித்த இளைஞனை பொல்லினால் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து தடுப்புக் காவலில் வைக்குமாறு தான் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டிருப்ப தாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மெத்திவக்க கூறினார்.


இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர் கள் எவராகவிருப்பினும் கைது செய்யப்படும் அதேவேளை, பொலிஸாராயிருந்தாலும் பக்கச்சார்பின்றி உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
பம்பலப்பிட்டி கரையோரத்தில் நேற்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:-


கரையோரத்திலிருந்த இளைஞரொருவர் நேற்றுக்காலை முதல் அவ்வழியாக சென்ற வாகனங்கள் மற்றும் ரயில்கள் மீது கற்களை எறிந்து வந்ததாக கூறப்படுகிறது. இறுதியாக ரயில் ஒன்றின் மீது குறித்த இளைஞன் கற்களை வீசி எறிந்த போது அங்கிருந்தவர்கள் கூடி அவனை நையப்புடைத்துள்ளனர்.
அதனையடுத்து கரையோரத்தில் சனக்கூட்டம் அதிகமாகவே அங்கிருந்த ஒருவரினால் இச்சம்பவம் வீடியோ படமாக்கப்பட்டுள்ளது.


அதில் சிலர் கடலுக்குள் வைத்து குறித்த இளைஞனை பொல்லினால் தாக்க முயற்சிப்பதாயும் சிறிது நேரத்தில் அவன் உயிரிழந்த நிலையில் கடலுக்குள் தாழ்ந்து செல்வதாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.


உண்மையில் இளைஞன் பொதுமக்களினால் கரையில் வைத்து தாக்கப்படும் போது தவறி கடலுக்குள் விழுந்தானா? அல்லது சம்பவ இடத்துக்கு விரைந்த பம்பலப்பிட்டி பொலிஸார் அவனை கைது செய்ய முற்பட்டவேளை தான் தப்புவதற்காக கடலுக்குள் குதித்தானா? என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மெத்திவக்க தெரிவித்தார்.


உயிரிழந்த இளைஞன் புத்தி சுவாதீனமற்றவன் எனத் தகவல்கள் கிடைத்துள்ளமையால் அது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனக் கூறிய பொலிஸ் பேச்சாளர், இளைஞன் பொல்லினால் தாக்குண்டதினால் தான் கொல்லப்பட்டானா என்பது குறித்தும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் நேற்று இரவுவரை மீட்கப்படவில்லை. மீட்புப் பணி கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

FRIDAY, OCTOBER 30, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Thursday, October 29, 2009

ஆறு மாவட்டங்களில் இன்று சுனாமி எச்சரிக்கை ஒத்திகை:ஒரு மணி நேரத்தினுள் மக்கள் பாதுகாப்பு’



தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ஆறு மாவட்டங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வுகளை இன்றைய தினத்திலும் நடத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலேயே இன்று பிற்பகல் 3 மணி முதல் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடத்தப்படவி ருப்பதாக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் காமினி ஹெட்டியாராச்சி நேற்று தெரிவித்தார்.

இடர்முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சில் நேற்று மாலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்தார்.

சுனாமி அனர்த்தம் எதிர்காலத்தில் இடம்பெறுமாயின் அதற்கு மக்கள் தைரியத்துடன் முகம் கொடுக்க வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டே இந்த முன் னெச்சரிக்கை ஒத்திகையை இன்று நட த்துவதாக கூறிய மேஜர் ஜெனரல் காமினி ஹெட்டியாராச்சி, தேசிய பாது காப்பு தினமான டிசம்பர் 26 ஆம் திகதி இந்த ஒத்திகையை 11 மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.

பூகம்பம் இடம்பெற்று சுனாமி ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பதாகக் கொண்டே இன்று 29 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு எமது ஒத்திகை நிகழ்வை ஆரம்பிக்கவுள்ளோம். அனர்த்த முகாமைத்துவ நிலையங்களுக்கூடாக குறித்த 06 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அதனூடாக பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் அங்கிருந்து கிராம சேவகர் பிரிவுகளினூடாக பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கப்படும். சுமார் ஒரு மணித்தியாலத்துக்குள் மக்களை பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்வதே இச்செயற்பாட்டின் பிரதான நோக்கமெனவும் அவர் கூறினார்.

தொலைபேசி, குறுந்தகவல், மின்னஞ்சல், தொலைபண்ணி ஆகியவற்றினூடாக நாளை குறித்த ஆறு மாவட்டத்துக்கும் இது தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல் அனுப்பி வைக்கப்படும்.

கொழும்பில் லுனாவை, காலியில் பெரலிய, அம்பாந்தோட்டையில் பட்டஅத்த தெற்கு, அம்பாறையில் சாய்ந்தமருது, மட்டக்களப்பில் கல்குடா, திருகோணமலையில் நிலாவெளி ஆகிய பிரிவுகளிலேயே சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இன்று நடத்தப்படும்.

இதற்கு முன்னர் இரு தடவைகள் இது போன்ற ஒத்திகை நிகழ்வுகளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
THURSDAY, OCTOBER 29, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, October 27, 2009

மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அரசு மறுப்பு



ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் காங்கிரஸ¤க்கு சமர்ப்பித்திருக்கும் அறிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் அறிக்கை சமர்பிக்க வேண்டுமென அதன் பேச்சாளர் வெளியிட்டுள்ள கருத்தை இலங்கை அரசாங்கம் வன்மையாக மறுப்பதாக மனித உரிமைகளுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிக ராலயத்திற்கு மனித உரிமைகள் தவிர்ந்த ஏனைய விடயங்களில் தலையிடுவதற்கு எவ்வித உரிமையும் இல்லையென அதன் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளைக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் எனவும் அமைச்சர் கூறினார். ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பில் 192 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவர்கள் அனைத்து நாடுகளுக்கும் சேவை செய்வதை விடுத்து எப்போதும் ஒரு பிராந்தியத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருவது தவறு. ஏனைய அங்கத்துவ நாடுகளின் ஒத்துழைப்புடன் இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளோமெனவும் அமைச்சர் சமரசிங்க நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். இதேவேளை வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்த 2 இலட்சத்து 88 ஆயிரம் பேருள் தற்போது ஒரு இலட்சத்து 96 ஆயிரத்து 88 பேரே தங்கியிருப்பதாகவும் ஏனையோர் மீளக் குடியமர்த்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

யாழ். நிவாரணக் கிராமங்களில் 6, 896 பேரும் மன்னார் நிவாரணக் கிராமங்களில் 1,590 பேரும் திருகோணமலை நிவாரணக் கிராமங்களில் 6,405 பேரும், ஆறு வைத்தியசாலைகளில் 1,626 பேரும் தங்கியிருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். கண்ணிவெடியகற்றும் பணிகளை துரிதப்படுத்துவதற்காக புதிதாக ஆயிரம் இராணுவ வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கண்ணிவெடியகற்றும் 14 இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் இரு வாரத்தினுள் மேலும் 10 இயந்திரங்கள் கொண்டு வரப்படவுள்ளன. இவற்றுள் 05 ஐ. நா நன்கொடையாக வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
TUESDAY, OCTOBER 27, 2009 லக்ஷ்மி பரசுராமன்

அமெ. இராஜாங்க திணைக்களம் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக ஆராய சுயாதீன குழு: ஒருவாரத்துக்குள் ஜனாதிபதியால் நியமனம்



ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களம், அதன் காங்கிரஸ¤க்கு சமர்ப்பித்திருக்கும் அறிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி விரைவில் அறிவிக்கவுள்ளார். இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை தொடர்பாக ஆராயவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஒரு வார காலப் பகுதிக்குள் சுயாதீனக் குழுவொன்றை நியமிக்கவிருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார். காங்கிரஸ¤க்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப் பகுதிக்குள் இடம் பெற்ற சம்பவங்களில் எந்தவொரு இடத்திலும் போர் விதிகளை மீறியமைக்கான ஆதாரபூர்வமான சாட்சிகள் இல்லையெனவும் அவை சட்ட ரீதியாக நிரூபிக்கப்பட வில்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு இந்த அறிக்கை சாதகமாக அமைந்த போதிலும் இதனை பகடைக்காயாக உபயோகித்து சில அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புக்களும் அரசியல் இலாபம் தேட முனைத்துள்ளன.

இவ்வாறான அமைப்புக்களுக்கும் கட்சிகளுக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையிலேயே ஜனாதிபதியினால் மேற்படி அறிக்கை தொடர்பாக ஆராயவென சுயாதீனக் குழு நியமிக்கப்படவுள்ளது. இக்குழு பக்கச் சார்பற்ற முறையில் அதனை ஆராய்ந்து ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்.

குழு முன்வைக்கும் அறிக்கையின் பிரகாரம் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு ஜனாதிபதியி னால் விரைவில் அறிவிக்கப்படும்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம் மாநாட்டில் அமைச்சருடன் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, ஜெனீவாவின் முன்னாள் உயர்ஸ்தானிகரும் புதுடில்லியின் புதிய உயர்ஸ்தானிகராக பதவியேற்க விருப்பவருமான பிரசாத் காரியவசம் உள்ளிட்ட ஐவர் கலந்து கொண்டனர்.
அறிக்கையின் முன்பக்க அட்டையில் “காங்கிரஸ¤க்கு சம்பவங்கள் தொடர்பான அறிக்கை” என்று தான் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் போர் குற்றங்கள் தொடர்பாக விபரிக்கப்படவில்லை.
இதன் மூன்றாம் பக்கத்தில் இலங்கையில் போர் குற்றங்கள் இடம்பெற்றதற்கான எந்த சாட்சியங்களும் இல்லையென தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் வெளியிட்ட தவறான கருத்துக்களை அடிப்படையாக வைத்தே காங்கிரஸ் இலங்கையில் போர்க் குற்றம் இடம் பெற்றிருப்பதாக விவாதத்தினை முன்னெடுத்திருக்க வேண்டுமெனவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார்.
சர்வதேச யுத்த நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த வேண்டுமென்பதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட சதியின் விளைவாகவே காங்கிரஸ¤க்கு இலங்கை அரசாங்கம் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இலங்கை மீது மட்டுமன்றி ஈராக், ஜோர்டான், பாகிஸ்தான், மெக்சிக்கோ உள்ளிட்ட பல நாடுகள் குறித்தும் காங்கிரஸ், இராஜாங்க திணைக்களத்திடம் அறிக்கை கோரியுள்ளதெனவும் அமைச்சர் சமரசிங்க கூறினார்.
TUESDAY, OCTOBER 27, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Monday, October 26, 2009

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகை



ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வி லெவ்ரோ இன்று (26) திங்கட்கிழமை இலங்கை வருகிறார்.

குறுகிய கால விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

மேலும் இரு நாடுகளுக்குமிடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவுடன் இரு தரப்பு சந்திப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

இலங்கை, ரஷ்யா ஆகிய நாடுகளிடையே சட்டவிரோத ஆட்கடத்தல் போதைவஸ்து துஷ்பிரயோகம் ஆகியவற்றை தடுக்கும் பொருட்டு அமைச்சர்களான போகொல்லாகம, லெவ்ரோ ஆகியோரிடையே ஒப்ப ந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இதேவேளை இயற்கை அனர்த் தத்திலிருந்து பாதுகாத்தல், அவ் வாறான சூழ்நிலையின்போது அதனை ஆற்றுப்படுத் தல் என்பன தொடர்பாக இரு நாடுகளுக்கு மிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமெனவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரி வித்தார்.
MONDAY, OCTOBER 26, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Friday, October 23, 2009

ஜனாதிபதி மஹிந்தவுக்கு மகத்தான வரவேற்பு:வியட்நாம் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்ய இணக்கம்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் அழைப்பை ஏற்றுக் கொண்ட வியட்நாம் ஜனாதிபதி நுயன் மின் ட்ரயட், இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற் கொண்டு வியட்நாம் சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டு ஜனாதிபதியை இலங்கை நேரப்படி நேற்று மாலை சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தினார். இதன்போதே இந்த அழைப்பு முன் வைக்கப்பட்டது.

இச்சந்திப்பின்போது இரு அரசாங் கங்களுக்குமிடையில் முக்கிய பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. குற்றச்செயல்களை தடுத்தல், இரு நாடுகளினதும் பிராந்தியங்களினதும் பாதுகாப்பை பலப்படுதல் தொடர்பான ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கைச்சாத்திட்டன.

இரு தரப்பு சந்திப்பின்போது ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ, தென் கிழக்காசிய நாடுகளில் வியட்நாம் பொருளாதாரத்துறையில் பெரும் வளர்ச்சியடைந்து வருவதாக அந் நாட்டு ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளினதும் இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்தும் வகை யில் விசாயம் மற்றும் மீன்பிடித்துறை குறித்தும் இச்சந்திப்பின்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் யுத்தம் முடிவடைந்ததுடன் நாட்டில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கான சந்தர்ப்பம் அதிகரித்திருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்தை தோற்கடித்தமை க்காக இலங்கை ஜனாதிபதியை வியட்நாம் ஜனாதிபதி பாராட்டியதுடன் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பாகவும் கூடிய கவ னம் செலுத்தியுள்ளார்.
FRIDAY, OCTOBER 23, 2009 லக்ஷ்மி பரசுராமன்

வறுமைக் கோட்டுக்குள் வாழ்வோரின் தொழிலை மேம்படுத்த உலகவங்கி ரூ.8.6 பில்லியன் உதவி


நாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களின் வாழ்வாதார தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் 8.6 பில்லியன் இலங்கை ரூபாவினை வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது.

செயற்படுத்தப்பட்டு வரும் சமுதாய அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிலை முன்னேற்றும் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளுக்காக இந்நிதி பயன்படுத்தப்படுமென நிதி, திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இச் செயற்திட்டத்தின் மூலம் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 800 பின்தங்கிய கிராமங்களிலுள்ள ஒரு மில்லியன் மக்கள் நன்மையடையவுள்ளனர். இதற்கான ஒப்பந்தம் நேற்று நிதி, திட்டமிடல் அமைச்சில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

அரசாங்கத் தரப்பில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தரவும் உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் நாக் கோ இஷியும் இதில் கையொப்பமிட்டனர்.

உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் பதுள்ளை, மொனராகலை, அம்பாந் தோட்டை, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களை இலக்கு வைத்து இச்செயற்திட்டம் அமுல்படுத்தப்படும்.

இதன் பிரதான நோக்கம் கிராம அபிவிருத்தி, கிராமங்களுக்கிடையிலான தொடர்பை அபிவிருத்தி செய்தல், வாழ் க்கைத் தொழிலை முன்னேற்றல் என்ப னவாகும். தேச நிர்மாண மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கெமிதிரிய மன்றம், சமுர்த்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் இணைந்து இத்திட்டத்தை செயற்படுத்தவுள்ளது.
FRIDAY, OCTOBER 23, 2009 லஷ்மி பரசுராமன்

புலிகளின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இரண்டு மீட்பு



புலிகள் தமது பயங்கரவாத செயற்பாடுகளுக்காக பயன்படுத்திய விமான எதிர்ப்பு ஏவுகணைகளான இரண்டு சேம் மிசைல்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தின் 8வது செயலணியின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவே புதுக்குடியிருப்பு இரணைப்பாளை எனும் இடத்திலிருந்து நேற்று இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் மீட்கப்பட்டுள்ளன.

புலிகள் தம்மிடமிருந்த அதிசக்தி வாய்ந்த ஏவுகணைகளைக் கொண்டு கடந்த காலங்களில் விமாப் படையினரின் விமானங்களை இலக்கு வைத்து பல்வேறு பயங்கரவாதச் செயற்பாடுகளை நடத்தியமையையும் பிரிகேடியர் நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அப்பகுதியிலிருந்து எம்.பி.எம்.ஜி உள்ளடக்கப்பட்ட ஒரு பீப்பாயும் 240 லீற்றர் மண்ணெண்ணெய் கொண்ட 10 பீப்பாய்களும், பல்வேறு வகையான மோட்டார் குண்டுகளும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இராணுவத்தின் 8வது செயலணியின் படைத் தளபதியான ரவிப்பிரிய லியனகே தலைமையிலான புலனாய்வுப் பிரிவினரே நேற்று இவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
FRIDAY, OCTOBER 23, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, October 13, 2009

உலக பேரழிவு குறைப்பு தினம்:மட்டு, அம்பாந்தோட்டையில் நாளை சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி


உலக பேரழிவு குறைப்பு தினத்தை முன்னிட்டு அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நாளை 14 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன.

இந்து சமுத்திரத்தின் அரசாங்கங்களுக் கிடையிலான சுனாமி எச்சரிக்கை இணைப்புக்குழு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
அன்றைய தினம் இந்து சமுத்திரத்தின் 15 நாடுகளில் இந்த சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

“சுனாமி பேரனர்த்தம் இடம்பெறு மாயின் அதனால் ஏற்படக்கூடிய பேரழிவிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான முன் ஏற்பாடுகளை கற்பிப்பதற்காகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவுமே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.

சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு இது நடத்தப்படவுள்ளது.
TUESDAY, OCTOBER 13, 2009 லக்ஷ்மி பரசுராமன்

புலிகளுக்கு தகவல் வழங்கிய நபர் கைது; படகும் மீட்பு


கொழும்புத் துறைமுகம் மற்றும் கடற்பரப்பின் நிலைமைகள் குறித்து புலிகளுக்கு தகவல் வழங்கி வந்த நபர் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.
TUESDAY, OCTOBER 13, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Friday, October 9, 2009

தென் மா. ச. தேர்தல் நாளை; சகல ஏற்பாடுகளும் பூர்த்தி




தென்மாகாண சபைத் தேர்தல் நாளை (10) நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் நடைபெறும் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளன. நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்கெடுப்பு நடத்தப்படும்.

தேர்தல் மோசடிகள் இடம்பெறும் பட்சத்தில் உடனடியாக அப்பகுதிக்கான தேர்தல் ரத்துச் செய்யப்பட்டு பிறிதொரு தினத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்படுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க கூறினார்.

மூன்று மாவட்டங்களிலும் 17 இலட்சத்து 61 ஆயிரத்து 859 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 670 வாக்குச்சாவடிகள் அமைக்கப் படுவதுடன் 161 நிலையங்களில் வாக்குகள் கணக்கெடுக்கப்ப டவுள்ளன.
FRIDAY, OCTOBER 09, 2009 லக்ஷ்மி பரசுராமன்

இரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து: 3 பலி; 19 பேர் காயம்


காலி மாவட்டத்திலுள்ள கொஸ்கொடையில் நேற்று அதிகாலை இரண்டு பஸ் வண்டிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூவர் உயிரிழந்திருப்பதுடன் 19 பேர் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து காலி நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பஸ்ஸ¤ம் காலியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த இபோச பஸ்ஸ¤ம் ஒன்றுடனொன்று மோதியுள்ளன. விபத்தில் தனியார் பஸ்ஸின் சாரதி உட்பட மூவர் உயிரிழந்திருப்பதுடன்.

இரண்டு பஸ்களிலும் பயணித்தவர்களுள் 19 பேர் காயமடை ந்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். கொல்லப்பட்ட மூவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளனர். காயமடைந் தவர்கள் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுல்லானர்
FRIDAY, OCTOBER 09, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Thursday, October 8, 2009

தேர்தலுக்கு குந்தகம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை:தேர்தல்கள் ஆணையர்




தென்மாகாணத்தில் நாளை மறுதினம் 10ஆம் திகதி நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலின்போது வாக்குச்சாவடியி லிருந்து 500 மீற்றருக்கு உட்பட்ட பகுதியில் கட்சி ஆதரவாளர்களோ பொதுமக்களோ குழப்பங்களை உண்டுபண்ணக் கூடாது.

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குறிப்பிட்ட பகுதியில் ஏதேனும் அசம்பாவி தங்கள் இடம்பெறின் உடனடியாக அங்கு தேர்தல் ரத்துச் செய்யப்பட்டு பிறிதொரு தினத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்படுவது உறுதியென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸா நாயக்க தெரிவித்தார்.

வாக்காளர் அட்டையை பலவந்தமாக பறித்தல், குறித்த நபருக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தல் உள்ளிட்ட தேர்தலுக்கு குந்தகம் ஏற்படுத்தும் பல்வேறு சம்பவங்கள் இதன் போது கருத்திற்கொள்ளப்படும்.
இம்முறை வாக்களிப்பு நிலையம் மாத் திரமன்றி அதனைச் சூழவுள்ள 500 மீற்றர் வரையான சூழலும் தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்காக பொறுப்பாக் கப்பட்டுள்ளது. 500 மீற்றருக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் வன்முறைகள் இடம் பெறுமாயின் உடனடியாக அங்கு தேர்தல் ரத்துச் செய்யப்பட்டு பிறிதொரு தினத்தில் மீளநடத்தப்படுமெனவும் ஆணையாளர் கூறினார்.

இதேவேளை, வாக்குப்பெட்டிக்குள் தேர்தல் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்ப டுத்தும் வகையில் வாக்குச் சீட்டுக்கள் காணப்படுமாயினும் அச்சாவடிக்குரிய தேர்தலை உடனடியாக ரத்துச் செய்து பிறிதொரு தினத்தில் நடத்துமாறும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் நேற்றுமாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.

வடமேல் மாகாண சபைத் தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில் நாயக் கர்சேனையில் கிடைக்கப்பெற்ற வாக்குப் பெட்டியில் நான்கைந்து வாக்குச் சீட்டு க்கள் ஒன்றாக மடித்து போடப்பட்டிருந்தன.

இதனையடுத்து நாம் உடனடியாக அப் பகுதிக்கான தேர்தலை ரத்துச் செய்தோம். அதுபோன்று வாக்குப் பெட்டிகளுக்குள் எமக்கு ஏதேனும் சந்தேகம் நிலவுமாயின் மறுபேச்சுக்கு இடமின்றி தேர்தல் ரத்துச் செய்யப்பட்டு பிறிதொரு தினத்தில் நடத்தப்படும் என்றும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.
THURSDAY, OCTOBER 08, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, October 6, 2009

பருவப்பெயர்ச்சி மழையின் பாதிப்பை நிவாரண கிராமங்களில் தவிர்க்க திட்டம்: வடிகாலமைப்பு, சுகாதார வேலைத் திட்டம் 80 வீதம் பூர்த்தி


வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்கள் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாவண்ணம் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதார மற்றும் உட்கட்டமைப்பு வேலைத் திட்டங்கள் 80 சதவீதம் பூர்த்தியடைந்திருப்பதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்கள் அமைக்கப்பட்டிருக்கும் வவுனியாவில் அனைத்து வலயங்களிலும் பாதுகாப்பான முறையில் வடிகாலமைக்கும் வேலைத் திட்டங்கள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் 10 நாட்களுக்குள் இத்திட்டத்தின் பணிகள் முழுமையாக பூரணப்படுத்தப்படுமெனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

வன்னியில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின்போது இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தோரில், மீளக்குடியமர்த்தப்பட்டோர் மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டோர் தவிர்ந்த தற்போது தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் 2 இலட்சத்து 88 ஆயிரத்து 679 பேரினதும் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் இச் செயற்திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம்மாதம் இறுதி முதல் எதிர்வரும் டிசம்பர் வரையான காலப் பகுதியில் வவுனியாவில் பருவப் பெயர்ச்சி மழை எதிர்பார்க்கப்படுவது வழமை.

இம்மழைக்கு முகம் கொடுக்க கூடிய வகையில் வேலைத் திட்டங்கள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை அரசாங்கத்தின் இந்த வேலைத் திட்டங்கள் ஐ.நா. அமைப்புக்களின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றன.

வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் மீள்குடியேற்றம் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் இதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

மழைகாலத்தின்போது நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்கள் பாரிய அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவ்வாறானதொரு சூழ்நிலையை தவிர்க்கும் முகமாகவே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

மழையினால் ஏற்படக் கூடிய அசாதாரண சூழ்நிலைகளை தவிர்க்கும் முகமாக அநேகமான வேலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

வவுனியா வலையம் 01 இல் 95 சதவீதமான வேலைத் திட்டம் பூர்த்தியாகியிருப்பதாகவும் வலையம் 02 இல் 100 சதவீதமும் வலையம் 03 இல் 80 சதவீதமும் வலையம் 04 இல் 80 சதவீதமும் வலையம் 05 இல் 90 சதவீதமும் வலையம் 06 ‘எ’ யில் 40 சதவீதமும் வலையம் 06 ‘பி’ யில் 50 சதவீதமும், வலையம் 08 இல் சுமார் 70 சதவீதமான வேலையும் பூர்த்தியடைந்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். வலையம் ‘0’ மற்றும் வலையில் 07 இல் வேலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
TUESDAY, OCTOBER 06, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Monday, October 5, 2009

குருநாகலில் வாகனமொன்றில் பெருந்தொகை ஆயுதங்கள்


பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று வாகனமொன்றிலி ருந்து பெருந்தொகையான அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டிரு ப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

குருநாகல் மாஸ்பொத்த பகுதியில் வைத்து 56-9968 என்ற இலக்கம் கொண்ட வான் ஒன்றிலிருந்தே சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டு, இலத்திரனியல் டெட்டனேட்டர்கள், கிரனைட்டுகள், ரவைகள் உள்ளிட்ட பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

குறித்த வாகனத்திலிருந்து நேற்று 340 - ரி56 ரவைகளும், 5 கிலோ கிராம் நிறை கொண்ட ஆறு கிளேமோர் மைன்கள், 04 - ரி-56 தோட்டாக்களும், 100 - இலத்திரனியல் டெட்டனேட்டர்களும், 288-9 மில்லி மீற்றர் ரவைகளும், 02 - ரிமோட் கருவிகளும், 06 - 9 வோல்ற் பற்றரிகளும், 06 கிளேமோர் குண்டு பொருத்திகளும், மைக்ரோ பிஸ்டல் ஒன்றும், 50 மீற்றர் டெட்டனேட்டர் கோர்ட்டும், 06 - கிரனேற் கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
MONDAY, OCTOBER 05, 2009 லக்ஷ்மி பரசுராமன்)