
சட்ட விரோதமான முறையில் மின்சார இணைப்பை பெற முயற்சித்த நால்வர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரகஸ்வெவ பிரதேசத்திலேயே நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 8.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சூரிய வெவ பிரதேசத்தைச் சேர்ந்த துஷார சம்பத், கொடிதுவக்கு, அமிதபால, ஜி. ஏ. குலரத்ன ஆகிய நால்வருமே உயிரிழந்துள் ளனர்.
பிரதான மின் கம்பத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் மின்சார இணைப்பை பெற முயற் சித்த வேளை மேற்படி நால்வரு க்கும் மின்சாரம் தாக்கியுள்ளது.
அதனையடுத்து அயலவர்களால் இந்நால்வரும் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டனர். சிகிச்சைப் பயனின்றி நால்வரும் பின்னர் உயிரிழந்ததாக வும் பொலிஸ் பேச்சாளர் தெரி வித்தார்.
இதேவேளை, இச்சம்பவம் தொடர் பாக விசாரணைகளை நடத்துவத ற்காக மின்சார பொறியியலாளர்கள் அடங்கிய குழுவொன்று நாளை சூரியவெவ செல்லவிருப்பதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தம்மித்த குமாரசிங்க தெரிவித்தார்.
MONDAY, APRIL 26, 2010லக்ஷ்மி பரசுராமன்









Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time