
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து ஆறு மாவட்டங்களில் போட்டியிடுவதாக அ.இ.மு.கா. தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம். எஸ். எஸ். அமீர் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை, வன்னி, குருணாகல், அநுராதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களிலேயே இம்முறை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுகின்றது.
அ.இ.மு.கா. சார்பாக மேற்படி ஆறு மாவட்டங்களிலிருந்தும் 05 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகுவர் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். முஸ்லிம் மக்களின் ஆதரவு எமக்கு நிறையவே உண்டு. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து மக்கள் நன்கு அறிவர்.
ஆதலால் மக்களின் ஆதரவுடன் நாம் அமோக வெற்றியீட்டிவோமெனவும் முன்னாள் அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.
இதேவேளை பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ.ம.சு.மு.வின் முதன்மை வேட்பாளராக முன்னாள் அமைச்சர் அமீர் அலி போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
MONDAY, FEBRUARY 22, 2010லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment