Monday, February 22, 2010

ஜோர்தான் நாட்டுக்கு பணியாட்களை அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தம்:



ஜோர்தான் நாட்டுக்குப் பணி யாட்கள் அனுப்புவதைத் தற்காலிக மாக இடை நிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணி யகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரண வக்க நேற்று தெரிவித்தார்.

இலங்கைப் பணியாட்கள் ஜோர் தானில் எதிர்நோக்கும் பிரச்சினைக ளுக்கு உடனடித் தீர்வு காணும் முகமாகவே இத் திட்டத்தினை தற் காலிகமாக இடை நிறுத்தி வைத்தி ருப்பதாகவும் அவர் கூறினார்.

பணியாட்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் அந்நாட்டின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் தமது கடமை களை நிறைவு செய்வதற்காக இல ங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் மூன்று வார காலம் அவகாசம் வழங்கப்பட்டிருப் பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜோர்தான் நாட்டின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் தொடர்பாக நாளுக்கு நாள் முறைப் பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்த மையையடுத்து இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
MONDAY, FEBRUARY 22, 2010லஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment