
நாட்டின் பல பிரதேசங்களில் நேற்றும் நேற்று முன்தினமும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் அறுவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஐயக்கொடி கூறினார்.
மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்திருப்பதாகவும் நேற்று முன்தினம் நவகமுவ, நிட்டம்புவ மற்றும் கட்டுகஸ்தோட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் 114வது மைல் கல்லுக்கு அருகாமையில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். மட்டக்களப்பு நோக்கிச் சென்ற வான் ஒன்று வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
TUESDAY, February 09, 2010லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment