Wednesday, August 11, 2010

ஜீப் ஆற்றுக்குள் விழுந்து விபத்து; 3 பொலிஸார் பலி


கலவானை கொஸ்வத்த பகுதியில் நேற்று மாலை 6.30மணியளவில் பொலிஸ் ஜீப்பொன்று குக்குலேகங்க ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் கலவானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சரத் கம்ஹேவா, சார்ஜன்ட் குணபால, பொலிஸ் கான்ஸ்டபிள் பிரிமானே ஆகியோரே உயிரிழந்துள்ளனர். கலவானை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. பொலிஸ் ஜீப் வண்டியில் இவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த போது வண்டி கலவானை கொஸ்வத்தையிலுள்ள பள்ளத்திலிருந்து குடைசாய்ந்து ஆறு ஒன்றினுள் விழுந்ததிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது
WEDNESDAY, AUGUST 11, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment