Friday, August 13, 2010

பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டு:விஜித ஹேரத் உட்பட மூவர் காலியில் கைது



ஜே. வி. பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அஜித் குமார மற்றும் மாகாண சபை உறுப்பினர் நZன் ஹேவகே ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

காலியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கடமைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள், பொலிஸாரைத் தாக்கினார்கள் ஆகிய குற்றச் சாட்டுகளின் பேரிலேயே இம்மூவரும் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி ஜனநாயக தேசிய முன்னணி நேற்று காலியில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. பொலிஸார் அதனை கலைக்க முற்பட்டதையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. சம்பவத் தின் போது ஆர்ப்பாட்டக்காரர் களின் தாக்குதலுக்குள்ளான 5 பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
FRIDAY, AUGUST 13, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment