
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்திருக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கவையென பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்பு தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் 765 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனக் கோரி அரியநேந்திரன் எம்.பி. ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்தார்.
அதில் அனைவரையும் விடுவிக்க முடியாத பட்சத்திலும் சிறைகளிலுள்ள 50 பெண்களையும் 05 குழந்தைகளையுமாவது விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டுமென தான் கேட்டிருந்ததாகவும் அரியநேந்திரன் எம்.பி. தினகரனுக்குத் தெரிவித்தார்.
மகஜர் கிடைத்ததும் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி அறிவித்திருந்ததுடன், நீதியமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கூறி சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்திருந்தமை தொடர்பாக தனக்கு கடிதங்கள் கிடைத்துள்ளதாகவும் அரியநேந்திரன் எம்.பி. கூறினார்.
MONDAY, AUGUST 23, 2010லக்ஷ்மி பரசுராமன்
பயங்கரவாத தடுப்பு தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் 765 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனக் கோரி அரியநேந்திரன் எம்.பி. ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்தார்.
அதில் அனைவரையும் விடுவிக்க முடியாத பட்சத்திலும் சிறைகளிலுள்ள 50 பெண்களையும் 05 குழந்தைகளையுமாவது விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டுமென தான் கேட்டிருந்ததாகவும் அரியநேந்திரன் எம்.பி. தினகரனுக்குத் தெரிவித்தார்.
மகஜர் கிடைத்ததும் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி அறிவித்திருந்ததுடன், நீதியமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கூறி சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்திருந்தமை தொடர்பாக தனக்கு கடிதங்கள் கிடைத்துள்ளதாகவும் அரியநேந்திரன் எம்.பி. கூறினார்.
MONDAY, AUGUST 23, 2010லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment