Tuesday, August 17, 2010

கிரிந்த துறைமுகத்தில் படகு கவிழ்ந்து இருவர் பலி; மூவர் மாயம்


அம்பாந்தோட்டை கிரிந்த துறைமுகத் திற்குட்பட்ட கடற்பரப்பில் நேற்று மாலை படகொன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்திருப்பதுடன் மூவர் காணாமற் போயிருப்பதாகவும் மூவர் காயமடைந்திருப்பதாகவும் கடற்படை பேச்சாளர் கெப்டன் அத்துல செனரத் தெரிவித்தார்.

கடற்படை அதிகாரியொருவர் மற்றும் அவரது குடும்பத்தார் கடற்படைக்குச் சொந்தமான டிங்கி படகில் சவாரி செய்கையிலேயே கடல் சீற்றம் காரணமாக படகு அலையில் சிக்கி இவ்விபத்து நேர்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

சம்பவத்தின்போது படகில் எண்மர் பணித்துள்ளனர்.

இவர்களுள் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சிறு பிள்ளையொன்றும் உயிரிழந்துள்ளது. மேலும் இரண்டு பிள்ளைகள் உட்பட மூவர் காணாமற் போயுள்ளனர்.

காயமடைந்த மூவருள் ஒருவர் திஸ்ஸ மஹாராம வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். காணாமற்போன வர்களை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
TUESDAY, AUGUST 17, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment