Tuesday, November 24, 2009

பிரதமர் மற்றும் போகொல்லாகம மேற்கிந்தியதீவு பயணம்


பொதுநலவாய அமைப்பின் 21வது மாநாடு டிரினிடாட்டொபாகோவில் இன்று (24) ஆரம்பமாகிறது. இம்மாநாட்டில் இலங்கை சார்பாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் கலந்து கொள்கின்றனர்.

மாநாட்டில் பங்குபற்றுவதற்காக அமைச்சர் போகொல்லாகம இன்று காலை மேற்கிந்தியதீவுக்கு புறப்பட்டுச் செல்வதாக வெளிவிவகார அமைச்சு நேற்றுத் தெரிவித்தது.

பொதுநலவாய அமைப்பின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் மாநாட்டில் காலநிலை மாற்றம், சர்வதேச பொருளாதாரம் மற்றும் அகதிகள் விவகா ரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க எதிர்வரும் 27ம் திகதி முதல் 29ம் திகதிவரையான இறுதி மூன்று நாட்களும் மாநாட்டில் கலந்துகொள்வரென்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
TUESDAY, NOVEMBER 24, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment