Wednesday, November 25, 2009

யாழ். எஸ். எஸ். பி சார்ள்ஸ் கொலை: பிரதான சந்தேக நபர் கைது


யாழ். மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சார்ள்ஸ் விஜேவர்தன கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

சுண்ணாகம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சுண்ணாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரகாஷ் (31) எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

யாழ். மாவட்டத்தின் பொறுப்பாளராக கடமையாற்றி வந்த பொலிஸ் அத்தியட்சகர் சார்ள்ஸ் விஜேவர்தன கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி புலிகளினால் கடத்திச் செல்லப்பட்ட பின் வெட்டிக் கொலை செய்யப்படடார்

WEDNESDAY, NOVEMBER 25, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment