Wednesday, November 25, 2009

தமிழ்க் கூட்டமைப்புதிருமலை மாவட்ட உறுப்பினர்கள் பசில் ராஜபக்ஷவுடன் சந்திப்பு


தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினர்.

திருகோணமலை மாவட்ட நகர சபைத் தலைவர் எஸ். ஜி. முகுந்தன், உப்புவெளி நகர மற்றும் கிராம சபைத் தலைவர் டி. கந்தரூபன், குச்சவெளி பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் யு. ரவிகுமார், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திருமலை மாவட்ட அரசியல் விவகாரங்களுக்கான ஊடக செயலாளர் மற்றும் குழு இணைப் பாளர் எஸ். அசோக் சிவகுமரன் ஆகியோரே நேற்று பசில் ராஜபக்ஷ எம்.பியை சந்தித்துள்ளனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கும் அரசாங்கத்துக்கும் தமது முழுமையான ஆதரவினை பெற்றுக் கொடுக்குமென கூட்டமைப்பின் திருமலை மாவட்ட உறுப்பினர்கள் பசில் எம்.பியிடம் இச்சந்திப்பின் போது உறுதி அளித்துள்ளனர்.
WEDNESDAY, NOVEMBER 25, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment