Thursday, December 31, 2009

சிவில் பாதுகாப்பு சேனா விதாயக்க நிதியம்:‘150 கோடி ரூபா தேர்தலுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறும் குற்றச்சாட்டு வெறும் பொய்’


சிவில் பாதுகாப்பு படையினரின் சேனா விதாயக்க நிதியத்திலிருந்து 150 கோடி ரூபா ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்கென உபயோகப்படுத்தப் பட்டிருப்பதாக மங்கள சமரவீர எம்.பி. ஊடகங்களுக்கு வழங்கியிருக்கும் செய்தி யினை அதன் பணிப்பாளர் அட்மிரல் சரத் வீரசேகர நேற்று முழுமை யாக மறுத்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று மாலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரி வித்தார்.

சேனாவிதாயக்க நிதியத்தில் தற்போது ஒரு இலட்சம் ரூபா கூட சேமிப்பில் இல்லை. இந்நிலையில் எவ்வாறு 150 கோடி ரூபாவினை செலவு செய்ய முடியும். தேர்தல் காலத்தில் ஜனாதிபதிக்கு அவதூறு செய்வதற்கென்றே திட்டமிட்ட சிலர் இவ்வாறான பொய்த் தகவல்களை வழங்கியுள்ளனர்.

THURSDAY, DECEMBER 31, 2009லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment