
ஜனாதிபதித் தேர்தல் நாட்டுக்கு கிடைத்திருக்கும் பெறுமதியான சந்தர்ப்பம். இதனை சரியாக பயன்படுத்தி எமது எதிர்கால பிரஜைகளுக்கு வளமான நாட்டைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது எமது கடமையாகுமென சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்றுத் தெரிவித்தார்.
“ஜனாதிபதித் தேர்தலும் வழக்கறிஞர்களின் பொறுப்பும்” எனும் தொனிப்பொருளில் மஹாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பொருளாதார வளம் மிக்க சிங்கப்பூரிலும் எமது இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். அனைத்து வளங்களும் இயற்கையாகவே அமையப் பெற்ற போதிலும் கடந்த 30 வருடகாலமாக நாட்டில் நிலவிய பயங்கரவாத செயற்பாடுகளினால் ஏனைய நாடுகள் இலங்கையுடன் வர்த்தக ரீதியான உறவை முன்னெடுக்க தயக்கம் காட்டின.
சிங்கப்பூருக்கு வருடத்துக்கு ஒரு இலட்சத்து 28 ஆயிரம் வெளிநாட்டு கப்பல்கள் வருகின்றன. ஆனால் கொழும்பு துறைமுகத்துக்கு 4 ஆயிரம் கப்பல்கள்தான் இதுவரைகாலமும் வந்து செல்கின்றன. இதன் மூலம் 25 பில்லியன் ரூபாவே வருமானமாகக் கிடைக்கின்றது.
எமது நாட்டில் வாழும் 20 மில்லியன் மக்களிள் 13 மில்லியன் பேரிடம் இன்று கையடக்கத் தொலைபேசி பாவனையிலு ள்ளது. 60 இலட்சத்துக்கும் அதிகமானோர் கணனியை உபயோகித்து வருகின்றனர். நிச்சயமாக எமது நாடும் சிறப்பான ஆட்சியிலிருக்குமாயின் ஒருநாள் பொருளதார வளம் மிக்க நாடாக திகழும்.
இன்று நாட்டில் தீவிரவாதம் இல்லை. பிரபாகரனின் வரலாற்றுக்கு இந்த அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இனி பொருளாதாரத்துறையை கட்டி யெழுப்புவதில் தடையேதும் கிடையாது.
இக்கருத்தரங்கில் ஏற்றுமதி அபிவிருத்தி சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளுக்கான அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் உரையாற்றுகையில்:
பொன்சேகா தமது சுயநலத்துக்காக எதிர்காலத்தை நினைத்துப் பார்க்காத வகையில் கூறிய வார்த்தைகளால் இன்று நாடும் இராணுவமும் பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள் ளது.
தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் அபிவிருத்தியை கருத்திற்கொண்டு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம். அதனைத் தொடர்ந்து முன்னெடு க்க தாம் இந்த அரசாங்கத்துக்கு ஒத்துழை ப்பை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
TUESDAY, DECEMBER 22, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment