Wednesday, December 9, 2009

கட்சிக்குள் குவியும் பணங்களை ரணில் கொள்ளையடிக்கிறார் ஐ.தே.க. சார்பில் வேட்பாளர் இன்றேல் கடும் நடவடிக்கை



ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடந்த முறை தேர்தலின் போது 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்தன. 09 மில்லியன் டொலர்களே தேர்தலுக்கு செலவானது. மிகுதி பணத்துக்கு என்ன நடந்தது? என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோர்ன்ஸ்டன் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.

எமது கட்சிக்கு மூடை மூடையாக பில்லியன்களில் பணம் வந்து குவிகின்றது. கட்சித் தலைவர் அப் பணத்தை நன்கு கொள்¨ ளயடிக்கிறார். ‘ஐக்கிய தேசியக்கட்சி’ எனும் பெயரில் அங்கு ரணில் விக்கிரமசிங்க கொம்பனிதான் நடக்கிறதெனவும் ஜோன்ஸ்டன் எம். பி. நேற்றுக் கூறினார். நிப்பொன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மக்களைக் கூட சந்தித்து பேச நேரமில் லாத ஐ.தே.க. தலைவர் அறைக் குள்ளி ருந்து எவ்வாறு பணத்தை சுருட்டலாம் என்பது பற்றியே சதா சிந்தித்துக் கொண்டி ருப்பார். அவருக்கு கட்சி பற்றியோ ஆதரவாளர்கள் பற்றியோ சிறிதும் கவ லையில்லை.

பல்வேறு வழிகளிலும் கட்சிக்கு கிடைக்கும் பணத்தை கொள் ளையடிப்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தனது தலைவர் பதவியை இழக்க விருப் பமில்லாமல் கட்சிக்கு வெளியிலிருந்து ஒருவரை தேர்தல் வேட்பாளராக நிறுத்தி யுள்ளாரென்றும் ஜோன்ஸ்டன் எம்.பி. தெரிவித்தார்.
அரசியல் அனுபவமில்லாத ஜெனரல் சரத் பொன்சேகா எப்படி பொது மக்க ளுக்காக சேவையாற்ற முடியும். எவ்வாறு அவரை நம்பி முழு நாட்டையும் ஒப்ப டைக்க முடியும். எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னதாக ஐ.தே.க. கட்சிக்குள்ளிருந்து ஒரு பொது வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும் இல்லையேல் நாம் கட்சித் தலைமைத் துவத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை யெடுக்க நேரிடுமெனவும் அவர் கூறினார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எம். பி. மேலும் கூறுகையில்,

ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக பொது வேட்பாளராக ஜெனரலை நியமிக்க ஐ.தே.க. சார்பில் நடத்தப்பட்ட செயற்குழுக் கூட்டத்தில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த வர்களில் நானும் ஒருவன். நான் ஊட கங்களில் அது குறித்து விளக்கமளித்த தையடுத்து அதனை நிறுத்துமாறும் கூறி எனது அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் கையடக்கத் தொலைபேசிக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்தன. தான் அதற்கு அஞ்சவில்லை.

கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் எனக் குண்டு. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கி ரமசிங்க ஒரு தலைவருக்குரிய இலட் சணங்களுடன் நடந்து கொள்கின்றார் இல்லை. எஸ். பி. திஸாநாயக்க போன்ற திறமையானவர்கள் கட்சியை விட்டு செல்லக் காரணம் இவரது நடத்தையே. திறமையானவர்கள் கட் சியை விட்டுப் போவது குறித்து தலைவர் ரணிலுக்கு சிறிதும் கவலையில்லை.
செயற்குழுக் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தை யடுத்தே இவர் கட்சியை விட்டு விலகியிருப்பதாக ஒரு ஊடகத்தில் அவர் சிரித்துக் கொண்டு பொய் கூறுகிறார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட் சியை எதிர்த்துப் போட்டியிட தைரிய மில்லாவிடில் முதுகெலும்புடைய எஸ். பி., சஜித் பிரேமதாச போன்றவர்களை வேட்பாளர்களாக நியமித்திருக்க வேண்டும்.

எமது கட்சி ஆதரவற்றிருந்த சமயத்தில் எதிர்க்கட்சியிலிருந்து ஏழெட்டு பாராளு மன்ற உறுப்பினர்களுடன் ஐ.தே.கவுக்கு வந்து அதனை கட்டியெழுப்ப உதவியவர் எஸ்.பி. அந்த நன்றியை ரணில் மறந்து விட்டார். திறமை மிக்கவர்கள் போன பின்னர் தொடர்ந்தும் கட்சியில் தானே தலைவராகவிருக்க வேண்டுமென்பதே அவரது விருப்பம்.

இவ்வாறான குறுகிய உள்நோக்கம் கொண்டவர்கள் இருக்கும் கட்சி எவ்வாறு முன்னேற முடியும். சந்திரிகா ஐ.தே.க.வுக்கு எதிராக செய்த மோசடிகளை மறந்து விட்டு இன்று சந்திரிகாவுடனும் மங்களவுடனும் இணைந்து இணையத்தளத்தில் எமக்கு சேறு பூசுகிறார். இந்தப் பயணம் நீடிக்காது.
ஐ.தே.க. வின் கொள்கைகளில் முரண் பட்டிருக்கும் எனக்கு இன்னமும் கட்சி யிலிருந்து விலகுமாறு கோரி கடிதம் தரா மலிருப்பது அதிசயமாகவுள்ளது. நானும் கட்சியை விட்டு விலகினால் அதை விட பெரிய சந்தோஷம் எமது தலைவருக்கு வெறெதுவுமாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
WEDNESDAY, DECEMBER 09, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment