
மக்களின் ஆதரவை தன்னால் வென்றெடுக்க முடியாது என்பது தெட்டத் தெளிவாக விளங்கியுள்ள நிலையிலும், தனது தலைவர் பதவி மாத்திரம் எக்காரணம் கொண்டும் பறிபோய்விடக் கூடாது என்பதில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தளை மாவட்ட அமைப்பாளர் நந்தமித்ர ஏக்கநாயக்க எம்.பி. நேற்று குற்றம் சாட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதியாகக்கூடிய தகுதியும் ஆளுமையும் உள்ள பலர் இருக்கின்ற நிலையிலும் அவர்களை தேர்தலில் போட்டியிடவிடாது வெளியிலிருந்து ஒருவரை கொண்டுவந்திருப்பது தனது தலைவர் பதவியை தக்க வைத்துக்கொள்ளவேயெனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான வதந்திகளை பரப்பி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் ஐ.தே.கவினால் பணம் வழங்கி நியமிக்கப்பட்டவர்களாகும்.
அப்பலோ நிறுவனத்தை பாதுகாப்பு செயலாளர் வாங்கியதாகவும் ஜனாதிபதியின் சகோதரர்கள் கொழும்பில் பெறுமதியான சொத்துக்களை வாங்கி வருவதாகவும் வதந்தி பரப்பப்பட்டுள்ளது. இவற்றில் எதுவித உண்மையும் கிடையாது.
40 வருட காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தவர்கள் இவ்வாறு பணம் திரட்டியது கிடையாது. இவ்வாறு பணம் திரட்டும் தேவையும் கிடையாது.
நாட்டுக்கு சேவையாற்றவே கோட்டாபே ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து இல ங்கைக்கு வந்தார். யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க பங்களித்த அவர் அதில் வெற்றியும் கண்டார். புனரமைப்பு பணிகளை பசில் ராஜபக்ஷ சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.
இவர்களின் பணிகள் தொடர்பில் குறைகூற எதுவுமில்லாத தாலேயே இவ்வாறு வதந்தி பரப்பப்படுகிறது. ஜனாதிபதியின் சகோதரர்கள் கொழும்பில் சொத்து வாங்குவது உண்மையானால் அதனை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும். மக்கள் மனங்களை குழப்பவே இவ்வாறு வதந்தி பரப்பப்படுகிறது.
ஐ.தே.க. ஆட்சியில் அன்றிருந்த அமைச்சர்கள் தமது குடும்பத்தவர்களுக்கு அரச சொத்துக்களை குத்தகைக்குக் கொடுத்தனர் என்றார்.
MONDAY, DECEMBER 07, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment