Wednesday, December 2, 2009

நிவாரணக் கிராம மக்கள் சுதந்திரமாக நடமாட்டம்; அரசுக்கும் ஜனாதிபதிக்கும் நன்றி தெரிவிப்பு


யுத்தத்தினால் இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள சகலரும் நேற்று முதல் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கப்பட்டு ள்ளதையடுத்து நேற்று முதலாம் திகதி ஆயிரக்கணக்கானோர் நிவார ணக் கிராமங்களிலிருந்து வெளியே செல்வதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

தம்மை சுதந்திரமாக நடமாட அனுமதித்தமைக்காக ஜனாதிபதிக் கும் அரசாங்கத்துக்கும் நன்றி தெரி வித்துள்ளனர். அத்துடன் மோதல் களின்போது தம்மைக் காப்பாற்றி சுதந்திரத்தைப் பெற்றுத் தந்திருக்கும் ஜனாதிபதிக்கு என்றும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர்கள் அரசாங்க அதிபரிடம் கூறியதாக அவர் தினகரனுக்குத் தெரி வித்தார்.

நேற்று முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையிலேயே நிவாரணக் கிராமங்களில் தங்கியிரு ந்தவர்களுக்கு சுதந்திரமாக நடமாட அரசாங்கம் அனுமதி வழங்கியிரு ந்தது. அதற்கமைய நேற்றுக் காலை 6 மணி முதல் மக்கள் நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியே செல் வதாக அரசாங்க அதிபர் கூறினார்.

நிவாரணக் கிராமத்திலிருந்து நேற்று வெளியேறியோருள் பலர் வவுனியா மாவட்டத்தினுள்ளும் ஏனையோர் ஏனைய மாவட் டங்களுக்கும் சென்றுள்ளனர்.

ஒவ்வொரு நிவாரணக் கிராமத்தி லிருந்தும் சுமார் 700 தொடக்கம் 800 வரையானோர் நேற்று வெளி யேறியுள்ளனர். இவர்களுள் பலர் நண்பகல் 12 மணிக்குள் திரும்பி வந்துவிட்டதாகவும் ஏனையோர் நான்கு, ஐந்து தினங்களுக்குப் பின் னரே வருவதாகக் கூறிச் சென்றி ருப்பதாகவும் அரச அதிபர் தெரிவி த்தார்.

நிவாரணக் கிராமங்களை விட்டு வெளியில் நடமாட விரும்பியவர்களது பெயர் விவரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னரே அவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நிவாரணக் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு ள்ளதுடன் வெளியில் நடமாட விரும்பியோர்க்கென விசேட நுழைவு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
நிவாரணக் கிராமத்தை விட்டு வெளியேறுவோர் மீண்டும் அங்கே வரும்போது நுழைவு அனுமதியை தம்முடனேயே எடுத்து வரவேண்டியது கட்டாயமெனவும் அரச அதிபர் சார்ள்ஸ்

கூறினார் WEDNESDAY, DECEMBER 02, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment