Tuesday, August 25, 2009

பாதுகாப்பு செயலாளரை படுகொலை செய்ய தயார் நிலையில் இருந்த தற்கொலை அங்கி மீட்பு:மோதரை மாடிவீட்டிலிருந்து பாதுகாப்புத் தரப்பினரால் கண்டுபிடிப்பு


பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மீது தற்கொலை தாக்குதல் நடத்த தயார் நிலையில் வைக்கப் பட்டிருந்த தற்கொலை அங்கி உள்ளிட்ட பெருமளவு வெடி பொருட்கள் நேற்று கொழு ம்பிலுள்ள வீடொன்றிலிரு ந்து மீட்கப்பட்டுள்ளன.
மோதரை, மட்டக்குளிய வீடமைப்புத் தொகுதியிலு ள்ள இரண்டு மாடி வீடொ ன்றின் மேல் மாடியிலிரு ந்து தேசிய புலனாய்வுப் பிரி வினரால் இவை கைப்ப ற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

தற்கொலை குண்டுதாரி மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதல் நடத்தும் விதத்தி லேயே புலிகளினால் திட் டம் தீட்டப்பட்டிருந்தது அம் பலத்துக்கு வந்துள்ளதுடன் அதற்கேற்ற வகையில் அதி சக்திவாய்ந்த வெடி பொருட் கள் மற்நும் தற்கொலை அங்கிகளை கொழும்புக்கு கடத்தியிருப்பதாகவும் தேசிய புலனாய்வுப் பிரிவினர் மேற் கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக பொலிஸ் பேச் சாளர் மெதிவக்க சுட்டிக் காட்டினார்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வாகன அணிவகுப்பை இல க்கு வைத்தே இத்தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட ப்பட்டுள்ளது.
தாக்குதலின் போது பாதுகாப்புச் செயலா ளர் காயங்களுக்கு உள்ளாகும் பட்சத்தில் அவரை எடுத்துச் செல்வதற்காக தயார் நிலை யிலிருக்கும் அம்பியுலன்ஸ் வண்டி மீதும் குண்டுத் தாக் குதலை நடத்தவும் புலிகள் ஏற்பாடுகளை முன்னெடுத் திருந்தமையும் அம்பலமாகி யிருப்பதாக பொலிஸ் பேச் சாளர் மேலும் குறிப்பிட்டார். தற்கொலையங்கி உள்ளிட்ட அதி சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்ட தையடுத்து அவ்வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளரை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதலை நடத்துவதற்கி ருந்த பிரதான சந்தேக நபரான தற்கொலை குண்டுதாரியையும் மோட்டார் சைக்கிளை யும் தேடி பொலிஸ் வலை விரித்திருப்பதா கவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

தேசிய புலனாய்வுப் பிரிவினர் கடந்த ஒரு மாத காலமாக கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மேற்கொண்டுவரும் தேடுதல்களை அடிப்படையாக வைத்தே பொலிஸாரினால் நேற்று இந்த வீடு முற்றுகையிடப்பட்டு மேற்படி வெடிபொரு ட்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐந்து கிலோ நிறைகொண்ட தற்கொலை யங்கி, இயந்திரத் துப்பாக்கி, அதற்குப் பயன் படுத்தப்படும் 125 ரவைகள், இரண்டு தோட்டா கேசுகள், 05 கிரனேற் கைக்குண் டுகள், 13 சயனைற் குப்பிகள், தற்கொலை யங்கியில் பொருத்தும் 05 பற்றரிகள், ஒரு ரிமோட் கருவி, பல இடங்களுக்கும் கொண்டு செல்லக்கூடிய 02 ரிமோட் கருவிகள், 50 அடி நீளமான வயர் மற்றும் ஒரு டெட் டனேட்டர் ஆகியனவே நேற்று மட்டக் குளியிலுள்ள மேற்படி வீட்டின் அலுமாரி க்குள்ளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக விசேட பொலிஸ் குழு புலனாய்வு விசாரணை களை முன்னெடுத்து வருகின்றது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மீது 2006 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி கொழும்பு கொள்ளுப்பி ட்டியில் வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆண் தற்கொலை குண்டுதாரியினால் நடத்தப்பட்ட மேற்படி தாக்குதலில் பாதுகாப்புச் செயலாளர் தெய் வாதீனமாக உயிர் தப்பினார். இதன்போது இருவர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.TUESDAY, AUGUST 25, 2009லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment