Saturday, August 29, 2009

அங்குலானையிலிருந்து இரு கிளேமோர் குண்டுகள் மீட்பு




மொரட்டுவை அங்குலான பகுதியிலிருந்து நேற்று மாலை அதிசக்திவாய்ந்த இரண்டு கிளேமோர் குண்டுகள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிமல் மெதிவக்க கூறினார்.

அங்குலான பிரதேசத்திலுள்ள ஒரு வெட்ட வெளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேற்படி அதிசக்தி வாய்ந்த இரண்டு கிளேமோர்களையும் புலனாய்வுப் பிரிவினரே நேற்று மாலையளவில் கண்டு பிடித்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இராணுவத்தின் குண்டை செயலிழக்கச் செய்யும் பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து குண்டுகளை செய லிழக்கச் செய்துள்ளனர். இது குறித்த விசாரணைகள் தொட ர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். SATURDAY, AUGUST 29, 2009லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment