Monday, March 22, 2010

தபால் மூல வாக்களிப்பை கண்காணிக்க சுமார் 3 ஆயிரம் பணியாளர்கள்



பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் சுமார் மூவாயிரம் கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடு த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக சுயாதீன தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

}நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 25 ஆம் 26 ஆம் திகதிகளில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களில் தபால்மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

இம்முறை 4 இலட்சத்து 15 ஆயிரத்து 430 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.இந்நிலையில், முன்னைய தேர்தல்களின் போது வன்முறைச் சம்பவங்கள் இடம் பெற்ற மத்திய நிலையங்கள் மற்றும் அரசியல் நெருக்கடி காணப்படக்கூடிய இடங்களில் விசேட பிரதிநிதிகளை நேரில் அனுப்பவும் நடமாடும் கண்கா ணிப்புச் சேவையினை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுயாதீன தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் கூறின.தெரிவு செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளைகள், பொலிஸ் நிலையங்கள், கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் உள்ளூராட்சி சபை நிறுவனங்கள் ஆகியவற்றில் தபால் மூல வாக்களிப்பினை கண்காணிப்ப தற்காக ஆயிரம் பேரை நியமித்திருப்பதாகவும் ஏனையோரை வேறு நிலையங்களுக்கு பயன்படுத்தவிருப்பதாகவும் பெவ்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
MONDAY, MARCH 22, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment