Tuesday, March 30, 2010

குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞன் பலி:வெலிகமவில் சம்பவம்



வெலிகமவில் சங்கீத நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கொட்டவில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. எல். எம். ஏ. திலங்க (21) எனும் இளைஞரே சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளார்.

இசை நிகழ்ச்சியில் பாட்டொன்றை மீளப்பாடுவதற்கு இடமளிக்காமையே மோதல் ஏற்படக் காரணமாகும். படுகாயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சந்தேக நபர்கள் பற்றிய விவரங்கள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள போதும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
TUESDAY, MARCH 30, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment