Monday, June 7, 2010

30,000 மாணவருக்கு இலவச கணனி பயிற்சி நெறி


முப்பதாயிரம் மாணவர்களுக்கு இலவசமாக கணனிப் பயிற்சி யினை வழங்க தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சு முன்வந்துள்ளது. அமைச்சர் திஸ்ஸ வித்தாரணவின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியிலுள்ள ‘விதாதா’ நிலையங்களினூடாகவே இலவச கணனிப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

நாட்டு மக்களிடையே கணனி அறிவினை மேம்படுத்துவதற்காக வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவியரீதியில் ‘விதாதா’ பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட்டன. கடந்த வருடம் 15 ஆயிரம் மாணவர்கள் இதனூடாக பயிற்சி பெற்றிருந்தனர். தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளோர் எந்தவொரு ‘விதாதா’ நிலையத்தினூடாகவும் அதற்கான பயிற்சிகளை பெற்றுக் கொள்ளலாம்.
MONDAY, JUNE07, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment