Friday, June 18, 2010

வடக்கில் அபிவிருத்தி, மீள்குடியேற்ற செயற்பாடுகள் சிறப்பாக முன்னெடுப்புஅரசின் நடவடிக்கை திருப்தி - பெஸ்கோ



வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி மீள்குடியேற்றம், மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான செயற்பாடுகள் பூரண திருப்தியளிப்பதாக இலங்கை வந்திருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் வின் பெஸ்கோ தெரிவித்தார்.

ஐ.நா. செயலாளர் நாயகம் இந்நாட்டு ஜனாதிபதியுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையின் செயற்பாடுகள் சிறப்பான முறையில் முன் னெடுக்கப்பட்டு வருவதனை தான் நேரில் காணக்கூடியதாக விருந்ததாகவும் பெஸ்கோ நேற்று கூறினார்.

இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் வின் பெஸ்கோ ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர், தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரை சந்தித்து உரையாடியதுடன் முன்னாள் யுத்த பிர தேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து கொழும்பிலுள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் அவர் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்த தனது நிலைப்பாட்டை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனது இந்த உத்தியோகபூர்வ விஜயம் இலங்கையுடனான ஐ.நா.வின் உறவை மேலும் பலப்படுத்தியிருப்பதாக நான் நம்புகின்றேன்” என்று கூறிய பெஸ்கோ கடந்த மு¨றான் இங்கு வந்திருந்ததை பார்க்கவும் கூடுதலான அபிவிருத்தி செயற்பாடுகளையும் மீள்குடியேற்றத்தையும் நேரில் காணமுடிந்ததாகவும் இது தேசிய அரசாங்கத்தினதும் உள்ளூர் அதிகாரிகளினதும் அர்ப்பணிப்புடனான செயற்பாட்டையே பிரதிபலிக்கிறது என்றும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் பாடசாலைக்குச் செல்கின்றனர். அவர்களது இயல்பு வாழ்க்கையை மீளப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சித்து வருவதனை என்னால் அவதானிக்க முடிந்தது. ஐ.நாவின் முகவர் அமைப்புக்கள், உள்ளூர் மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அர்ப்பணிப்புடன் இப்பகுதிகளில் செயலாற்றி வருகின்றன.

இலங்கையில், பல தசாப்தங்களாக நிலவி வந்த மோதலால் ஏற்பட்ட ரணங்களுக்கு ஓரிரவில் மருந்து கட்டட முடியாது என்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால், அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு இதுவே உகந்த தருணம் என்பதனால் சிறப்பானதொரு அரசியல் தீர்வை எதிர்பார்க்கிறோமெனவும் பெஸ்கோ குறிப்பட்டார்.

இதேவேளை, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் ஐ.நா. செயலாளர் நாயகம் அடுத்த வாரம் ஆரம்பத்தில் தன்னால் நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணத்துவ குழு தொடர்பாக அறிவிக்கவுள்ளாரெனவும் பெஸ்கோ சுட்டிக்காட்டினார்.
FRIDAY, JUNE18, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment