Thursday, June 17, 2010

ஐ.நா. அதிகாரி பெஸ்கோ நேற்று முல்லைத்தீவு விஜயம்


ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலாளர் லிங் பெஸ்கோ நேற்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்தார்.

நேற்று நண்பகல் ஒருமணியளவில் அங்கு சென்ற அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்குடியேற்றம், அபிவிருத்தி நடவடிக்கைகள், கண்ணிவெடி அகற்றல் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ,மெல்டா சுகுமார் தெரிவித்தார்.

வற்றாப்பளையில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளோரைச் சந்தித்து உரையாடிய அவர், அவர்களது தேவைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

வற்றாப்பளையிலுள்ள கூட்டுறவுக் களஞ்சியங்கள், உணவு விநியோகங்கள் என்பனவற்றைப் பார்வையிட்டதுடன் அவை திருப்தியளிப்பதாகவும் தெரிவித்தார். THURSDAY, JUNE17, 2010 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment