Monday, June 21, 2010

நிவாரணக் கிராமங்களில் அரிசி விநியோகத்தில் மாற்றமில்லைதமிழ் அரசியல் பிரமுகரின் குற்றச்சாட்டுக்கு அரசாங்க அதிபர் சார்ள்ஸ் பதிலடி:


வவுனியா நிவாரணக் கிராமங் களில் அரிசி வழங்கப்படுவதில்லை யென்றும் தண்ணீருக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் வெளியாகியிருக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவையென வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளோருக்கு அரிசி வழங்கப்படுவதில்லை யெனவும் அதற்கு பதிலாக
மா மாத்திரமே வழங்கி வருவதாகவும், தண்ணீர் வசதிகளின்றி மக்கள் அங்கு அவதியுறுவதாகவும் தமிழ் அரசியல் வாதியொருவரை மேற்கோள் காட்டி பத்திரிகையொன்றில் (தினகரனில் அல்ல) வெளியாகியிருக்கும் செய்திகளை தான் மறுப்பதாகவும் வவுனியா அரசாங்க அதி பர் கூறினார். குறித்த பத்திரிகையில் வெளி யாகியிருக்கும் செய்தியில் எவ்வித உண்மை யுமில்லையென கூறிய திருமதி சார்ள்ஸ், வழமைபோலவே நிவாரணக் கிராமங்களில் உள்ளோருக்கு அரிசி வழங்கப்பட்டு வருவதாகவும் அதில் எவ்வித சிக்கலு மில்லையெனவும் குறிப்பிட்டார்.

நிவாரணக் கிராமத்தில் தங்கியிருப்போரு க்கு அரிசியும் மாவும் வழங்கப்படுகிறது. சில தினங்களாக எமது களஞ்சியசாலையில் மைசூர் பருப்புக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டின் காரணமாக பருப்பு கிடைக்கப்பெறாதவர் களுக்காக குறித்த அளவு மாவினை நாம் மேலதிகமாக வழங்கினோமே தவிர அரிசி நிறுத்தப்படவில்லை” எனவும் அரசாங்க அதிபர் சுட்டிக் காட்டினார்.
சுமார் மூன்று இலட்சம் பேர் இருந்த நிவாரணக் கிராமங்களில் தற்போது 45 ஆயிரம் பேர்வரையிலானோரே தங்கி யுள்ளனர். மூடப்பட்ட நிவாரணக் கிரா மங்களைத் தவிர்ந்த ஏனையவற்றில் முன்பிருந்த அதே வசதிகளே தொடர்ந்தும் காணப்படுகின்றன. இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதற்கு எவ்வித சாத்தியக்கூறுகளுமில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

அங்கு வேலை பார்க்கும் உத்தியோகத் தர்களிடமிருந்தோ பொதுமக்களிடமிருந்தோ நீர் மற்றும் மலசலகூட வசதியின்மை தொடர்பாக இதுவரை தனக்கு எவ்வித முறைப்பாடும் கிடைக்காதபட்சத்தில் இந்த குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பான தகவலெனவும் கூறினார்.
MONDAY, JUNE 21, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment