Monday, June 28, 2010

முன்னாள் பெண் புலிகளுக்கு முன்பள்ளி டிப்ளோமா நெறி


வவுனியா புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முன்னாள் பெண் புலி உறுப்பினர்களுக்கென முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறியொன்று அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவிருப்பதாக புனர்வாழ்வு நிலையத்தின் ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க தெரிவித்தார்.

வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு நிலையங்களில் முன்னாள் பெண் புலி உறுப்பினர்கள் 120 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்காக இக்கற்கை நெறி நடத்தப்படவுள்ளது. வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் 60 பெண்களும், பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் 60 பெண்களும் தங்கியுள்ளனர். இவர்களுக்கு இக்கற்கை நெறி வெவ்வேறாக நடத்தப்படவுள்ளது

MONDAY, JUNE 28, 2010லக்ஷ்மி பரசுராமன்


No comments:

Post a Comment