
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் கைது விவகாரத்தில் ஐ.நா. தலையிடமாட்டாதென இலங்கை வந்திருக்கும் ஐ.நா செயலாளர் நாயகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் வின் பெஸ்கோ தெரிவித்தார்.
சரத் பொன்சேக்காவின் கைது உள்நாட்டு விவகாரம். அது அந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்ப ட்ட விடயமென்பதால் அதில் ஐ.நா. தலையிட விரும்பவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நேற்று மாலை வின் பெஸ்கோ தலைமையில் செய்தியாளர் மாநாடொன்று நடைபெற்றது. அதில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதேபோல், கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் புலி உறுப்பினர்கள் 11 பேர் தொடர்பான விடயமும் நாட்டின் உள்விவகாரமென பெஸ்கோ சுட்டிக் காட்டினார்.
அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அதன் பிரகாரம் விடுதலை செய்யப்படவேண்டியவர்கள். ஆகையால், அது தொடர்பாகவும் ஐ.நா. தலையிடாதென அவர் கூறினார். நாட்டின் அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் என்பனவே ஐ.நாவின் முக்கிய குறிக்கோள்களாகும். இவற்றையே நாம் உலக நாடுகளுக்கு வலியுறுத்தி வருகின்றோம். அந்த வகையில் இலங்கையில் மோதல்களுக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளில் நாம் அதிக ஆர்வத்துடன் உள்ளோமெனவும் பெஸ்கோ குறிப்பிட்டார்.
FRIDAY, JUNE18, 2010லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment