
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை செவ்வாய்க்கிழமை புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளாரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் இருதரப்பு உறவுகள், அரசியல், பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பாக ஆராய்ந்து பல புதிய தீர்மானங்களை முன்னெடுக்கும் நோக்கிலேயே ஜனாதிபதினின் இந்தியாவுக்கான விஜயம் அமையவிருப்பதாகவும் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.என். கிருஷ்ணா, அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்துவார்.
இச்சந்திப்புக்களின் போது, அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள், நல்லிணக்க குழு வின் செயற்பாடுகள், அரசியலமைப்பு மாற்றம் உள்ளிட்ட நாட்டின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக ஜனாதிபதி அந்நாட்டுத் தலைவர்களுக்கு விளக்க மளிப்பார்.
இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் இருதரப்பு உறவுகள், அரசியல், பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பாக ஆராய்ந்து பல புதிய தீர்மானங்களை முன்னெடுக்கும் நோக்கிலேயே ஜனாதிபதினின் இந்தியாவுக்கான விஜயம் அமையவிருப்பதாகவும் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.என். கிருஷ்ணா, அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்துவார்.
இச்சந்திப்புக்களின் போது, அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள், நல்லிணக்க குழு வின் செயற்பாடுகள், அரசியலமைப்பு மாற்றம் உள்ளிட்ட நாட்டின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக ஜனாதிபதி அந்நாட்டுத் தலைவர்களுக்கு விளக்க மளிப்பார்.
இந்த மூன்று நாள் விஜயத்தின் போது இரு நாடுகளுக்குமிடையிலான 03 இருதரப்பு ஒப்பந்தங்களும் 02 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் (மொத்த மாக 05 ஒப்பந்தங்கள்) கைச்சாத்திடப் படவிருப் பதாகவும் அமைச்சின் அதிகாரி தெரிவித்தார்.
ஜனாதிபதியுடன் அமைச்சர்களான ஜீ. எல். பீரிஸ், கெஹெலிய ரம்புக்வெல்ல, டக்ளஸ் தேவானந்தா, நிதியமைச்சின் செயலாளர் பி. பி. ஜயசுந்தர, மின் சக்தியமைச்சின் செயலாளர் பெர்னான்டோ, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க, போக்குவரத்து அமைச்சின் செயலாளர், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட குழுவினரும் நாளை இந்தியா பயண மாகின்றனர்
MONDAY, JUNE07, 2010லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment