Sunday, September 5, 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம்:12 அம்சங்களடங்கிய கோரிக்கை முன்வைத்து நிருபமாராவுடன் பேச்சு


தமிழ்க் கட்சிகள் அரங்கம் நேற்று இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமாராவை சந்தித்து 12 அம்ச கோரிக் கைகளை முன்வைத்தது. இந்திய இல்லத் தில் நேற்றுக்காலை சுமார் ஒரு மணித்தி யாலமாக இடம்பெற்ற சந்திப்பில் தமிழ்க் கட்சிகள் அரங்கப் பிரதிநிதிகள் இந்திய வெளிவிகார செயலாளரிடம் அர்த்தமுள்ள மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிக ளுடன் கூடிய மீள்கட்டுமானம், உயர்பாது காப்பு வலயம் மற்றும் இராணுவ முகாம் களை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற இந்தியா உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்ததாக அதன் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த வெளிவிவகார செயலாளர், இந்திய அரசாங்கம் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு உதவும். இதற்காக 50 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப் படவிருப்பதாகவும் மலையக மக்களுக்காக பல்வேறு உதவிகளை முன்னெடுக்க விருப்பதாகவும் கூறினார்
FRIDAY, SEPTEMBER, 03, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment