Sunday, September 5, 2010

எரியூட்டப்பட்ட நிலையில் புலிகளின் விமான உதிரிப்பாகங்கள்:கரியமுள்ளிவாய்க்காலில் மீட்பு


கரியமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து நேற்று இலங்கை விமானப் படையின் புலனாய்வுப் பிரிவினர் எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட சில விமான உதிரிப்பாகங்களை மீட்டிருப்பதாக விமானப்படை பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்தார்.

கொள்கலன் ஒன்றினுள் விமான உதரிரிப்பாகங்கள் இடப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையிலேயே அவை மீட்கப்பட்டுள்ளன. முன்னாள் புலி உறுப்பினர்கள் வழிகாட்டியதையடுத்தே விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்துக்கு சென்று உதிரிப்பாக ங்களை மீட்டுள்ளனர்.

எரியூட்டப்பட்ட நிலையில் 02 சிறிய இயந்திரங்கள், லைட்கள், சக்கரங்கள் உள்ளிட்ட சில விமான உதிரிப்பாகங்களும் பற்றுச்சீட்டுப் புத்தகங் கள், தொலைபேசிகள், பற்றரி சார்ஜர்கள் ஆகிய பொருட்களும் குறித்த கொள்கலனி லிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

இவை இலகுரக விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் உதிரிப்பாகங்களென தெரிவித்த விமானப்படை பேச்சாளர், படையினருக்கும் புலிகளுக்கும் மோதல் உக்கிரமாக நிலவிய காலத்தில் புலிகள் அவற்றுக்கு தீ வைத்திருக்கலாமென நம்புவதாகவும் கூறினார்.
THURSDAY, SEPTEMBER, 02, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment