
வடக்கில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளோ ர்க்கு எதிர்வரும் மழைக் காலத்திற்கு முன்னதாக பாதுகாப்பான கூடாரங்களை அமைத்துக் கொடுப்பதற்கென வட மாகாண சபை 5 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளதென மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிரி தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வடக்கில் மீள்குடியேறியுள்ளோருக்கென 51 ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணிகள் ஒக்டோபர் நடுப்பகுதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மழைக் காலத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் தற்காலிகமாக இந்தக் கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கப்படவிரு ப்பதாகவும் ஆளுநர் கூறினார்.
மோதல்களின் போது இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்கள் மற்றும் ஏனைய வெளி மாவட்டங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் அரசாங்கத்தின் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். துரிதகதியில் மீள் குடியேற்றம் இடம்பெற்றுவரும் நிலையில், எதிர்வரும் மழைக்காலத்திற்கு முன்னதாக அம்மக்களுக்கு பாதுகாப்பான கூடாரங்கள் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக வடமாகாண ஆளுநர் தலைமையில் அண்மையில் கொழும்பில் கூடி ஆராயப்பட்டது.
இந்திய அரசாங்கம் பெற்றுத் தருவதாக இணக்கம் தெரிவித்திருக்கும் கூரைத் தகரங்களுக்கும் மேலதிகமாகவே வடமாகாண சபை இதற்கென 05 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளது. இதேவேளை, ஆளுநரின் வேண்டுகோளுக்கமைய போதி யளவு கூரைத்தகரங்கள் மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் சீட்டுக்களைப் பெற் றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மீள்குடி யேற்ற அமைச்சு முன்னெடுத்து வருவதாக வும் அதன் செயலாளர் எஸ். திஸாநாயக்க கூறினார். இதற்குரிய நிதி கூடிய விரை வில் அமைச்சினூடாக பெற்றுக் கொடுக்கப் படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பல தன்னார்வ தொண்டு நிறுவனங் களும் மழைக் காலத்திற்கு முன்னதாக கூடா ரங்களைப் பெற்றுக் கொடுக்க இணக்கம் தெரிவித்துள்ளன.
இதன்படி குடும்ப மொன்றுக்கு 12 கூரைத் தகடுகள் வீதம் வழங்கப்பட தீர்மானிக்கப்பட் டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
MONDAY, SEPTEMBER, 27, 2010லக்ஷ்மி பரசுராமன்
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வடக்கில் மீள்குடியேறியுள்ளோருக்கென 51 ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணிகள் ஒக்டோபர் நடுப்பகுதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மழைக் காலத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் தற்காலிகமாக இந்தக் கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கப்படவிரு ப்பதாகவும் ஆளுநர் கூறினார்.
மோதல்களின் போது இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்கள் மற்றும் ஏனைய வெளி மாவட்டங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் அரசாங்கத்தின் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். துரிதகதியில் மீள் குடியேற்றம் இடம்பெற்றுவரும் நிலையில், எதிர்வரும் மழைக்காலத்திற்கு முன்னதாக அம்மக்களுக்கு பாதுகாப்பான கூடாரங்கள் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக வடமாகாண ஆளுநர் தலைமையில் அண்மையில் கொழும்பில் கூடி ஆராயப்பட்டது.
இந்திய அரசாங்கம் பெற்றுத் தருவதாக இணக்கம் தெரிவித்திருக்கும் கூரைத் தகரங்களுக்கும் மேலதிகமாகவே வடமாகாண சபை இதற்கென 05 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளது. இதேவேளை, ஆளுநரின் வேண்டுகோளுக்கமைய போதி யளவு கூரைத்தகரங்கள் மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் சீட்டுக்களைப் பெற் றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மீள்குடி யேற்ற அமைச்சு முன்னெடுத்து வருவதாக வும் அதன் செயலாளர் எஸ். திஸாநாயக்க கூறினார். இதற்குரிய நிதி கூடிய விரை வில் அமைச்சினூடாக பெற்றுக் கொடுக்கப் படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பல தன்னார்வ தொண்டு நிறுவனங் களும் மழைக் காலத்திற்கு முன்னதாக கூடா ரங்களைப் பெற்றுக் கொடுக்க இணக்கம் தெரிவித்துள்ளன.
இதன்படி குடும்ப மொன்றுக்கு 12 கூரைத் தகடுகள் வீதம் வழங்கப்பட தீர்மானிக்கப்பட் டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
MONDAY, SEPTEMBER, 27, 2010லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment