Tuesday, January 12, 2010

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, மாத்தறை:இரண்டு செயற்திட்டங்களுக்கு ஜப்பான் ரூ. 103 மில். நன்கொடை



நாட்டின் ஐந்து மாவட்டங்களில் இரு வேறு செயற்திட்டங்களை முன்னெடுப்ப தற்காக ஜப்பானிய அரசாங்கம் 103 மில்லியன் ரூபாவினை நன்கொடையாக வழங்கியுள்ளது.

மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் செயற்திட்டத்துக்கும் யாழ்., மட்டக்களப்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வாழ்க்கைத் தொழில் அபிவிருத்தி செயற்திட்டங்களை அமுல்படுத்தவுமே ஜப்பானிய அரசாங்கம் இந்நிதியுதவியினை வழங்கியுள்ளது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் குன்யோ டக்காஷி செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ள பல்வேறு அமைப்பு க்களின் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளுடன் நேற்று தூதரகத்தில் வைத்து அதற்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார்.

இதன்படி வவுனியா, மன்னார் மாவட்டங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியை பொறுப்பேற்கவிருக்கும் சுவிஸ் மன்றம் எனப்படும் எப்.எஸ்.டி. அமைப்புக்கு ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடையின் 77 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களை விரைவில் மீளக்குடியமர்த்துவதற்காகவே ஜப்பானிய அரசாங்கம் இதற்கான பணிகளை துரிதப்படுத்தி வருகின்றது.

யாழ்ப்பாணம், புளியன்கோடல் கிராமத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள வர்களின் சமூக பொருளாதார நலனைக் கருத்திற்கொண்டு முழு கிராமத்தையும் மீள்நிர்மாணம் செய்வதற்காக ஜப்பானிய அரசாங்கம் 11.3 மில்லியன் ரூபாவினை சேவாலங்கா மன்றத்துக்கு ஒதுக்கியுள்ளது.
இந்நிதியுதவியின் கீழ் சேவாலங்கா மன்றம் வீதி, கிணறுகள், பாலர் பாடசாலைகள் ஆகியவற்றை புனர்நிர்மாணம் செய்யவுள்ளது. இதன் மூலம் 500 குடும்பங்கள் நன்மையடையுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீளக்குடியம ர்த்தப்பட்ட பகுதிகளில் விவசாய உட்கட்ட மைப்புகளை அபிவிருத்தி செய்வதற்காக சர்வோதய மன்றத்துக்கு 10 மில்லியன் ரூபாவினை ஜப்பானிய தூதரகம் ஒதுக்கீடு செய்துள்ளது. மாத்தறை மாவட்டத்தில் “பெண்களின் பொருளாதாரத்தை வலு வூட்டல், கருவாடு உற்பத்தியை அதிகரித்தல்” செயற்திட்டத்தை அமுல்படுத் துவத ற்காக சோபா காந்தா சூழல் முகாமைத்துவம் மற்றும் சமுதாய அபி விருத்தி மன்றத்துக்கென 4.7 மில்லியன் ரூபா தூதரகத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
TUESDAY, JANUARY 12, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment