Saturday, January 16, 2010

ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி துரத்தியோர் ஊடக சுதந்திரம் பற்றி பேசுவது கேலிக்குரியதுஅமைச்சர் லக்ஷ்மன் யாப்பா


லங்காதீப பத்திரிகையின் ஊடகவியலாளர் தயாசீலி லியனகேயை இராஜினாமாச் செய்வதற்கு அழுத்தம் கொடுத்த ரணிலும் எதிர்க் கட்சியினரும் அரசாங்கத்தின் ஊடக சுதந்திரம் பற்றிப் பேசுவது கேலிக்குரியதென தகவல் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இருபது வருடங்களுக்கு மேற்பட்ட சிறந்த அனுபவம் பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரை எதிரணியினர் அச்சுறுத்தியுள்ளனர். அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

வெளியான செய்தியில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதனை திருத்திக் கொள்வதற்கு பல மாற்று வழிகள் உள்ளன. அவற்றை கையாள்வதனை விடுத்து அச்சுறுத்தும் முறையை பின்பற்றுவது ஊடகத்துறைக்கே செய்யும் அவமரியாதையெனவும் அமைச்சர் தெரிவித்தார். ஊடகவியலாளர் தயாசீலி தற்போது எங்கு இருக்கிறாரென்றே யாருக்கும் தெரியாது.

அவருக்கு விடுத்த அச்சுறுத்தல் காரணமாக தனது இராஜினாமாக் கடிதத்தை அவர் வரவேற்பறையிலேயே கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். இதுவரையில் யாரும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. நிலைமை இப்படியிருக்க இதற்குக் காரணமான சம்பந்தன் எம்.பியோ ரணில் விக்கிரமசிங் கவோ இது குறித்து வாயே திறக்காமல் உள்ளனர்.

சிறையில் வைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் திஸ்ஸநாயக்கத்தைக் கூட இந்த அரசாங்கம் பிணையில் விடு வித்துள்ளது. ஊடகவியலாளர்களை வழி நடத்த தெரியாத இவர்கள் ஊடக சுதந்திரம் பற்றிப் பேசுவது எந்த வகையில் நியாயமா குமெனவும் அமைச்சர் கேள்வியெழுப்பினார்.
SATURDAY, JANUARY 16, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment