
வாரியபொலவில் நேற்று அதிகாலை இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.
ச். எம். தம்மிக்க ஹேரத் (33) எனும் வர்த்தகரே இச்சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் தலைமையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இது குறித்து விளக்கமளித்தார்.
வாரியபொல பிரதேசத்தில் நேற்று அதிகாலை பத்து பேர் சேர்ந்து தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவ்வேளை ஏழு மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்த குழுவினர் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டி ருந்தவர்கள் மீது தடிகளால் தாக்கியுள்ளனர்.
இத்தாக்குதலிலிருந்து அனைவரும் தப்பியோட முயற்சித்த போதும், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க தெரிவித்தார்.
இத்தாக்குதலில் ஈடுபட்ட அறுவரின் பெயர் விவரங்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும், நேற்றுவரை ஐவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உயிரிழந்தவர் அமக்கடவர வித்தியாலயத்தின் ஓய்வுபெற்ற அதிபரின் மகனாவார். அவரது உடல் பிரேத பரிசோதனைகளுக்காக குருணாகலை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
TUESDAY, JANUARY 19, 2010லக்ஷ்மி பரசுராமன்
ச். எம். தம்மிக்க ஹேரத் (33) எனும் வர்த்தகரே இச்சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் தலைமையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இது குறித்து விளக்கமளித்தார்.
வாரியபொல பிரதேசத்தில் நேற்று அதிகாலை பத்து பேர் சேர்ந்து தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவ்வேளை ஏழு மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்த குழுவினர் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டி ருந்தவர்கள் மீது தடிகளால் தாக்கியுள்ளனர்.
இத்தாக்குதலிலிருந்து அனைவரும் தப்பியோட முயற்சித்த போதும், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க தெரிவித்தார்.
இத்தாக்குதலில் ஈடுபட்ட அறுவரின் பெயர் விவரங்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும், நேற்றுவரை ஐவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உயிரிழந்தவர் அமக்கடவர வித்தியாலயத்தின் ஓய்வுபெற்ற அதிபரின் மகனாவார். அவரது உடல் பிரேத பரிசோதனைகளுக்காக குருணாகலை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
TUESDAY, JANUARY 19, 2010லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment