
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 67 சதவீத மக்கள் ஆதரவைப் பெற்று முன்னணியில் திகழ்வதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பெறுபேறுகள் சுட்டிக்காட்டியிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான மக்களின் ஆதரவு குறித்து மூன்றாவது தடவையாக எடுக்கப்ப ட்டிருக்கும் கணக்கெடுப்பின் பெறுபேறே இதனை சுட்டிக்காட்டு கிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் இயலாமையையும் வங்குரோத்து அரசியல் பிரசாரங்களையும் நன்கு அறிந்து வைத்துள்ள நாட்டு மக்கள் என்றுமில்லாதவாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டத்துக்கு அணிதிரண்டு வருகிறார்கள். எமது கூட்டங்களுக்கு வருகைதரும் இலட்சக் கணக்கான மக்களை பார்க்கையில் இந்த நாட்டின்
தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் என்பதனை அவர்கள் உறுதிசெய்துவிட்டா ர்கள் என்பது மேலும் ஊர்ஜிதமாகியி ருப்பதாகவும் அமைச்சர் மைத்திரிபால கூறினார்.
கொழும்பு மகாவெலி கேந்திர நிலையத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். அதில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெல்வது உறுதியாகியுள்ளது. வீதியில் எங்கு பார்த்தாலும் 90 சதவீதம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அலுவலகங்களும் நீலக்கொடிகளும் வெற்றிலைச் சின்னங்களுமே காணப்படு கின்றன.
நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி சரத் பொன்சேகாவுக்கும் எதிர்க்கட்சியினரின் வங்குரோத்து அரசியல் பிரசாரம் நன்கு புரிந்துவிட்டது.
தான் தேர்தலில் தோல்வியடையப் போகின்றேன் என்பது பொன்சேகாவுக்கு நன்கு விளங்கிவிட்டது.
இயலாமையை தோல்வியின் வேதனையை பொன்சேக்காவின் நடவடிக்கைகள், முகபாவம் மற்றும் பிரசாரங்கள் வாயிலாகவே அறிந்துக்கொள்ள முடிகிறதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் மைத்திரிபால இது தொடர்பாக மேலும் கூறுகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் போட்டியிட்டு ஐக்கிய தேசியக் கட்சியால் ஒருபோதும் வெற்றி காண முடியாதென அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்கு தெரியும். தோல்வி உறுதியென்பது நிச்சயமானதன் பின்னரே மக்களுக்கு வேடிக்கை காண்பிப்பதற்காக அரசியல் அனுபவமில்லாத இந்த பொன்சேக்காவை அறிமுகம் செய்துள்ளனர்.
பொன்சேக்காவின் மனசாட்சிக்கு இந்த உண்மை நன்கு தெரியும்.
சரத் பொன்சேக்கா இராணுவத்தில் பதவியிலிருந்த காலப்பகுதியிலேயே ரணில் விக்கிரமசிங்க பிரபாகரனுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருந்தார்.
அவரது ஒப்பந்தப்படி புலிகள் படையினருக்கு எத்தனை அவதூறு செய்திருந்தாலும் அதனை படையினர் கைகட்டி பார்த்திருக்க வேண்டும்.
பொன்சேக்கா திறமையான படை வீரரென்றால் அந்த நேரமே யுத்தத்துக்கு முடிவு கண்டிருக்கலாமே? ஏன் அவரால் அதனை செய்ய முடியவில்லை.
எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சிக்கு வந்த பின்பே நாட்டில் பல தசாப்த காலமாக நிலவி வந்த மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இப்போது, பொன்சேக்கா தானே மோதல்களை தீர்த்து வைத்ததாக பெருமை தேடிக்கொள்கிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியினரின் வங்குரோத்து அரசியல் நிலையினை மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றனர். போலிப் பிரசாரங்கள் மூலம் மக்களை ஏமாற்ற நினைப்பது வெறும் கனவு மாத்திரமே.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மாத்திரமேயுள்ளன. அதற்கிடையில் எமது ஜனாதிபதிக்கான ஆதரவினை இன்னும் பல மடங்கு பலப்படுத்துவோம். ஜனாதிபதிக்கு வெற்றி நிச்சயமெனவும் அவர் கூறினார்.
MONDAY, JANUARY 18, 2010லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment