Wednesday, January 27, 2010

வவுனியாவில் விஜிதஹேரத்துடன் சென்ற 40 பேர் விசாரணை; விடுவிப்பு


ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உள்ளிட்ட 40 பேர் சென்ற இரண்டு பஸ்கள் வவுனியா பொலிஸ் சோதனைச் சாவடியில் சந்தேகத்தின்பேரில் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத் தப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டிரு ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம். கருணாரட்ன தெரிவித்தார்.

தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக கொழும்பிலிருந்து இரண்டு பஸ் களில் வவுனியா நோக்கிச் சென்றவர்களே பொலிஸாரினால் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

பஸ்களில் எம்.பி.யுடன் பிரயாணம் செய்த 40 பேருள் 20 பேர் இராணுவத்திலிருந்து தப்பி வந்தவர்கள் என்ற விபரம் தெரிய வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காலை 8.50 மணியளவில் வவுனியா பொலிஸ் சோதனைச் சாவடியில் விசார ணைக்காக தடுத்து வைக்கப்பட்டவர்கள் காலை 10.45 மணியளவில் விடுவிக்கப்பட்ட தாகவும் அவர் கூறினார்.

WEDNESDAY, JANUARY 27, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment