
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா தனியார் தொலைக்காட்சியொன்றில் வழங்கியுள்ள பேட்டியில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (சி.ஐ.டி.) சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறியதாக தெரிவித்திரு க்கும் கருத்தினை அதன் பணிப்பாளர் எம். கே. டி. விஜய அமரசிங்க நேற்று மறு த்தார். கட்சி, மத, சமய பேதமின்றி சி.ஐ.டி. பிரிவு செயற்பட்டு வருகிறது.
அரசியல் இலாபத்துக்காக சிலர் சி.ஐ.டி.யினர் மீது அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் தெரிவிக்கும் கருத்துகளால் பொது மக்களிடையே நம்பகத்தன்மை குறைய இடமுண்டு. இருப்பினும், பொன்சேகா கூறியிருக்கும் கருத்துக்களில் எவ்வித உண்மையுமிருக்க வாய்ப்பில்லை யெனவும் சி.ஐ.டி. பணிப்பாளர் விஜய சமரசிங்க நேற்று தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று மாலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து பணிப்பாளர் விஜய அமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்;
சி.ஐ.டி. யினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய கொழும்பு மற்றும் அமெரிக்காவில் அமையப்பெற்றி ருக்கும் ‘ஹை கோர்ப்’ நிறுவனம் தொடர் பான விசாரணைகள் முன்னெடுக்க ப்படுகின்றன.
அதற்கமைய, 109வது சட்ட மூலத்தின் 06 வது உப பிரிவின்படி விசாரணைகளுக்கான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக வேட்பாளர் பொன்சேகாவின் மருமகனான தனுன திலக்கரட்ணவை விசார ணைகளுக்காக சி.ஐ.டி. க்கு வருகை தருமாறு கடிதம் ஒன்றை கடந்த 19 ஆம் திகதி அனுப்பி வைத்தோம்.
அதில் 20 ஆம் திகதி காலை சமுக மளிக்குமாறு குறிப்பிடப்பட்டிரு ந்தது.
இருப்பினும், 20 ஆம் திகதி எமக்கு கிடைக்கப்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளின் வேலைப்பளு காரணமாக விசாரணையை மறு அறிவித்தல் வரை ஒத்திவைத்திரு ப்பதாக குறிப்பிட்டு எனது கையொ ப்பத்துடன், தபாலை பொலிஸ் அதிகாரியொருவரூடாக தனுன திலக்கரட்ணவின் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.
நான் அதனை 10 மணிக்கு அனு ப்பி வைத்த அதே நாள் 11.45 மணி யளவில் தனுன திலக்கரட்ணவிடமி ருந்து எனக்கொரு தொலைநகல் கிடைத்தது. அதில் அவர், தனது மாமாவுடன் தேர்தல் வேலையில் ஈடுபட்டிருப்பதனால் 26 ஆம் திகதிக்கு பின்னரே விசாரணைக்காக சமுகமளிக்க முடியுமெனக் குறிப்பி ட்டிருந்தார்.
தேர்தலைப் பொறுத்தவரை இது முக்கிய விசாரணையாக மதிக்கப் பட்ட போதிலும் சி.ஐ.டி. யைப் பொறுத்தவரை இது அவ்வளவு முக்கியமானதல்ல.
எனவே, எதிர்வரும் 26ஆம் திகதி க்குப் பின்னர் இது குறித்து தினம் ஒன்றை ஒதுக்கவோமென நான் எனது சிரேஷ்ட அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தேன்.
அதற்கிடையில், சி.ஐ.டி. யைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரியொருவர் விசாரணைக்காக பொன்சேகாவின் மருமகனை இங்கே வரவழைப்பத னைவிட எனது சீருடையை களை ந்துவிட்டு வீடு செல்லலாம் என கூறியதாக பொன்சேகா செவ்வி யொன்றில் தெரிவித்திருந்தார். இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் சி.ஐ.டி. பணிப்பா ளராக பதவியேற்ற இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் தொடர்பா கவும் நன்கு அறிந்து வைத்துள்ளேன்.
அதேவேளை, நாம் கட்சி பேதமின்றி செயற்படும் ஒரு நிறு வனம் என்பதனையும் பொது மக்க ளுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன் எனவும் தெரிவித்தார்.
TUESDAY, JANUARY 26, 2010லக்ஷ்மி பரசுராமன்
அரசியல் இலாபத்துக்காக சிலர் சி.ஐ.டி.யினர் மீது அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் தெரிவிக்கும் கருத்துகளால் பொது மக்களிடையே நம்பகத்தன்மை குறைய இடமுண்டு. இருப்பினும், பொன்சேகா கூறியிருக்கும் கருத்துக்களில் எவ்வித உண்மையுமிருக்க வாய்ப்பில்லை யெனவும் சி.ஐ.டி. பணிப்பாளர் விஜய சமரசிங்க நேற்று தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று மாலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து பணிப்பாளர் விஜய அமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்;
சி.ஐ.டி. யினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய கொழும்பு மற்றும் அமெரிக்காவில் அமையப்பெற்றி ருக்கும் ‘ஹை கோர்ப்’ நிறுவனம் தொடர் பான விசாரணைகள் முன்னெடுக்க ப்படுகின்றன.
அதற்கமைய, 109வது சட்ட மூலத்தின் 06 வது உப பிரிவின்படி விசாரணைகளுக்கான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக வேட்பாளர் பொன்சேகாவின் மருமகனான தனுன திலக்கரட்ணவை விசார ணைகளுக்காக சி.ஐ.டி. க்கு வருகை தருமாறு கடிதம் ஒன்றை கடந்த 19 ஆம் திகதி அனுப்பி வைத்தோம்.
அதில் 20 ஆம் திகதி காலை சமுக மளிக்குமாறு குறிப்பிடப்பட்டிரு ந்தது.
இருப்பினும், 20 ஆம் திகதி எமக்கு கிடைக்கப்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளின் வேலைப்பளு காரணமாக விசாரணையை மறு அறிவித்தல் வரை ஒத்திவைத்திரு ப்பதாக குறிப்பிட்டு எனது கையொ ப்பத்துடன், தபாலை பொலிஸ் அதிகாரியொருவரூடாக தனுன திலக்கரட்ணவின் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.
நான் அதனை 10 மணிக்கு அனு ப்பி வைத்த அதே நாள் 11.45 மணி யளவில் தனுன திலக்கரட்ணவிடமி ருந்து எனக்கொரு தொலைநகல் கிடைத்தது. அதில் அவர், தனது மாமாவுடன் தேர்தல் வேலையில் ஈடுபட்டிருப்பதனால் 26 ஆம் திகதிக்கு பின்னரே விசாரணைக்காக சமுகமளிக்க முடியுமெனக் குறிப்பி ட்டிருந்தார்.
தேர்தலைப் பொறுத்தவரை இது முக்கிய விசாரணையாக மதிக்கப் பட்ட போதிலும் சி.ஐ.டி. யைப் பொறுத்தவரை இது அவ்வளவு முக்கியமானதல்ல.
எனவே, எதிர்வரும் 26ஆம் திகதி க்குப் பின்னர் இது குறித்து தினம் ஒன்றை ஒதுக்கவோமென நான் எனது சிரேஷ்ட அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தேன்.
அதற்கிடையில், சி.ஐ.டி. யைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரியொருவர் விசாரணைக்காக பொன்சேகாவின் மருமகனை இங்கே வரவழைப்பத னைவிட எனது சீருடையை களை ந்துவிட்டு வீடு செல்லலாம் என கூறியதாக பொன்சேகா செவ்வி யொன்றில் தெரிவித்திருந்தார். இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் சி.ஐ.டி. பணிப்பா ளராக பதவியேற்ற இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் தொடர்பா கவும் நன்கு அறிந்து வைத்துள்ளேன்.
அதேவேளை, நாம் கட்சி பேதமின்றி செயற்படும் ஒரு நிறு வனம் என்பதனையும் பொது மக்க ளுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன் எனவும் தெரிவித்தார்.
TUESDAY, JANUARY 26, 2010லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment