Friday, October 9, 2009

இரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து: 3 பலி; 19 பேர் காயம்


காலி மாவட்டத்திலுள்ள கொஸ்கொடையில் நேற்று அதிகாலை இரண்டு பஸ் வண்டிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூவர் உயிரிழந்திருப்பதுடன் 19 பேர் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து காலி நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பஸ்ஸ¤ம் காலியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த இபோச பஸ்ஸ¤ம் ஒன்றுடனொன்று மோதியுள்ளன. விபத்தில் தனியார் பஸ்ஸின் சாரதி உட்பட மூவர் உயிரிழந்திருப்பதுடன்.

இரண்டு பஸ்களிலும் பயணித்தவர்களுள் 19 பேர் காயமடை ந்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். கொல்லப்பட்ட மூவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளனர். காயமடைந் தவர்கள் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுல்லானர்
FRIDAY, OCTOBER 09, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment