Thursday, October 8, 2009

தேர்தலுக்கு குந்தகம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை:தேர்தல்கள் ஆணையர்




தென்மாகாணத்தில் நாளை மறுதினம் 10ஆம் திகதி நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலின்போது வாக்குச்சாவடியி லிருந்து 500 மீற்றருக்கு உட்பட்ட பகுதியில் கட்சி ஆதரவாளர்களோ பொதுமக்களோ குழப்பங்களை உண்டுபண்ணக் கூடாது.

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குறிப்பிட்ட பகுதியில் ஏதேனும் அசம்பாவி தங்கள் இடம்பெறின் உடனடியாக அங்கு தேர்தல் ரத்துச் செய்யப்பட்டு பிறிதொரு தினத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்படுவது உறுதியென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸா நாயக்க தெரிவித்தார்.

வாக்காளர் அட்டையை பலவந்தமாக பறித்தல், குறித்த நபருக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தல் உள்ளிட்ட தேர்தலுக்கு குந்தகம் ஏற்படுத்தும் பல்வேறு சம்பவங்கள் இதன் போது கருத்திற்கொள்ளப்படும்.
இம்முறை வாக்களிப்பு நிலையம் மாத் திரமன்றி அதனைச் சூழவுள்ள 500 மீற்றர் வரையான சூழலும் தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்காக பொறுப்பாக் கப்பட்டுள்ளது. 500 மீற்றருக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் வன்முறைகள் இடம் பெறுமாயின் உடனடியாக அங்கு தேர்தல் ரத்துச் செய்யப்பட்டு பிறிதொரு தினத்தில் மீளநடத்தப்படுமெனவும் ஆணையாளர் கூறினார்.

இதேவேளை, வாக்குப்பெட்டிக்குள் தேர்தல் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்ப டுத்தும் வகையில் வாக்குச் சீட்டுக்கள் காணப்படுமாயினும் அச்சாவடிக்குரிய தேர்தலை உடனடியாக ரத்துச் செய்து பிறிதொரு தினத்தில் நடத்துமாறும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் நேற்றுமாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.

வடமேல் மாகாண சபைத் தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில் நாயக் கர்சேனையில் கிடைக்கப்பெற்ற வாக்குப் பெட்டியில் நான்கைந்து வாக்குச் சீட்டு க்கள் ஒன்றாக மடித்து போடப்பட்டிருந்தன.

இதனையடுத்து நாம் உடனடியாக அப் பகுதிக்கான தேர்தலை ரத்துச் செய்தோம். அதுபோன்று வாக்குப் பெட்டிகளுக்குள் எமக்கு ஏதேனும் சந்தேகம் நிலவுமாயின் மறுபேச்சுக்கு இடமின்றி தேர்தல் ரத்துச் செய்யப்பட்டு பிறிதொரு தினத்தில் நடத்தப்படும் என்றும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.
THURSDAY, OCTOBER 08, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment