Monday, October 5, 2009

கிளிநொச்சி இராணுவ தலைமை வளவுக்குள் இடம்பெற்றது விபத்தே


கிளிநொச்சியில் நேற்றுக்காலை இராணுவ தலைமை அலுவலக வளவுக்குள் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவம் ஒரு விபத்தென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.

புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட அதிசக்தி வாந்த வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்த கன்டேனர் வாகனத்தில் திடீரென ஏற்பட்ட தீயினாலேயே இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றி ருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சியிலுள்ள இராணுவத்தின் 58 ஆம் படைப்பிரிவினரின் தலைமை அலுவலக வளவுக்குள் நேற்றுக்காலை இவ் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது.

இது ஒரு விபத்தெனவும் இதனால் எந்தவொரு உயிர் ஆபத்தோ சேதமோ ஏற்படவில்லையெனவும் பிரிகேடியர் மேலும் கூறினார்.
MONDAY, OCTOBER 05, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment