
கிழக்கு மாகாணம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டதென அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
சுனாமி அனர்த்தம் இடம்பெறக்கூடியதற் கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு ஆகக் குறைந்தது 16 நிமிடங்களுக்குள் அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது மக்களும் ஆகக் கூடிய 30 நிமிடங்களுக்குள் காலி மாவட்டத்தின் பெரலியிவைச் சேர்ந்த மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவ்வதிகாரி தெரிவித்தார்.
சுமாத்திரா தீவில் நேற்று பி.ப. 2.50 மணிக்கு பூகம்பம் இடம்பெற்றதாக கற்பனை செய்து இலங்கையின் குறித்த ஆறு மாவட்டங்களிலும் சுனாமி அனர்த்தம் இடம்பெறக்கூடியதற்கான வாய்ப்பு இருப்பதாக மாலை 3.40 மணியளவில் அனைத்து அனர்த்த முகாமைத்துவ நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டது.
நிலைய இணைப்பாளர்கள் ஆறு மாவ ட்டங்களைச் சேர்ந்த கரையோர மக்களையும் விழிப்புணர்வூட்டி பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். ஆகக்கூடியது 30 நிமிடங்களுக்குள் இதனை வெற்றிகரமாக செய்து முடிக்கக் கூடியதாக விருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய ஆறு மாவட்டங்க ளில் நேற்று சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடத்தப்பட்டமை குறிப்பித்தக்கது.
FRIDAY, OCTOBER 30, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment