Monday, October 5, 2009

தொப்பிகல காட்டுக்குள் ஆயுதங்கள் மீட்பு


பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கும் புலி உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலையடுத்து நேற்று பெருந் தொகையான ஆயுதங்களும் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு, நரக்கமுல்ல, தொப்பிகலை பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதிக்குள்ளிருந்தே இவை மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 91 – ரி 56 ரக துப்பாக்கிகள், 10 – ரி-56 துப்பாக்கிக்கான தோட்டாக்கள், 1360 கண்ணி வெடிகள், 56 கிலோ கிராம் நிறைகொண்ட சி 4 வெடிப் பொருட்கள் ஆகியனவே மீட்கப்பட்டுள்ளன.
வவுனியா பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரே இப் புலி சந்தேக நபரை கைது செய்ததுடன் அவர் வழங்கிய தகவல் களுக்கமைய ஆயுதங்கள் மற்றும் வெடிப் பொருட்களை கைப்பற்றியிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்

MONDAY, OCTOBER 05, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment