Monday, October 5, 2009

வெளிநாடுகளுக்கு படகு மூலம் ஆட்களை அனுப்பிய மூவர் கைது




வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக படகுகள் மூலம் ஆட்களை அனுப்பி வந்ததாகக் கூறப்படும் மூவர் நேற்று கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே சிலாபத்தில் வைத்து இம் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.
MONDAY, OCTOBER 05, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment