Tuesday, October 13, 2009

உலக பேரழிவு குறைப்பு தினம்:மட்டு, அம்பாந்தோட்டையில் நாளை சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி


உலக பேரழிவு குறைப்பு தினத்தை முன்னிட்டு அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நாளை 14 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன.

இந்து சமுத்திரத்தின் அரசாங்கங்களுக் கிடையிலான சுனாமி எச்சரிக்கை இணைப்புக்குழு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
அன்றைய தினம் இந்து சமுத்திரத்தின் 15 நாடுகளில் இந்த சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

“சுனாமி பேரனர்த்தம் இடம்பெறு மாயின் அதனால் ஏற்படக்கூடிய பேரழிவிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான முன் ஏற்பாடுகளை கற்பிப்பதற்காகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவுமே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.

சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு இது நடத்தப்படவுள்ளது.
TUESDAY, OCTOBER 13, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment