Thursday, May 13, 2010

வத்தளையில் 1 1/2 வயது குழந்தை மாயம்; தீவிர விசாரணை


வத்தளை பள்ளியாவத்தையைச் சேர்ந்த தம்பதியினரின் காணாம ற்போன ஒன்றரை வயது குழந்தை தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளைமுன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
சித்தும் சத்கார எனும் இந்த குழந்தை தனது பாட்டியுடன் வீட்டிலிருந்த வேளை கடந்த 04 ஆம் திகதி காணாமற் போயுள்ளது.

தாயும் தந்தையும் வேலைக்குப் போகும் நிலையில் குறித்த குழந்தை பாட்டியுடன் வீட்டிலிருப்பது வழக்கம்.

அன்றைய தினம் வீட்டு முன்றலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமற் போயுள்ளது. இவர்களது வீட்டுக்கு முன்னால் 20 அடி ஆழமான களனி கங்கை ஆறு காணப்படுகிறது.

குழந்தை திட்டமிட்டு யாரானேனும் கடத்தப்பட்டுள்ளதா அல்லது களனி அவற்றில் விழுந்து காணாமற் போயுள்ளதா என்ற சந்தேகம் பொலிஸாருக்கு எழுந்துள்ளது. கடற் படையினரின் ஒத்துழைப்புடன் களனியாற்றில் தேடுதல் நடத்தப்பட்டு வரும் அதேவேளை பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
THURSDAY, MAY 13, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment