
இலங்கையில் புதிதாக இரண்டு இந்திய பிரதி உயர் ஸ்தானிகராலயங்களை ஸ்தாபிப்பது தொடர்பாக இரு நாடுகளினதும் உயர்மட்டக் குழுக்கள் ஆராய்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
யாழ்ப்பாணத்திலும் அம்பாந் தோட்டையிலுமே இந்திய பிரதி உயர் ஸ்தானிகராலயங்கள் ஸ்தாபிக்கப்படுவது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது.
கண்டியில் தற்போது இயங்கி வரும் இந்திய பிரதி உயர் ஸ்தானிகராலயத்துக்கு மேலதிகமாகவே யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டையிலும் இவற்றை நிறுவுவது தொடர்பாக இரு நாடுகளிடையிலும் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இவ் விடயம் தொடர்பாக ஆராயப்படுமெனவும் எதிர்பார்க்கப்ப டுகிறது.
MONDAY, MAY31, 2010லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment