Wednesday, May 26, 2010

உள்ளூர் உல்லாச பயணிகளுக்கும் வழிகாட்டிகளுக்குமிடையில் மோதல்:வில்பத்துவில் சம்பவம்; ஐவர் காயம்; ஐவர் கைது


வில்பத்து தேசிய சரணாலயத்தை பார்வையிடச் சென்ற உள்ளூர் உல்லாச பயணிகளுக்கும், வழிகாட்டிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஐவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

சரணாலயத்தை பார்வையிடச் சென்ற உள்ளூர் உல்லாச பயணிகள் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதையடுத்து அவர்களை கட்டுப்படுத்தச் சென்ற வழிகாட்டிகளுக்கும் பயணிகளுக்குமிடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் சரணாலயத்தின் வழிகாட்டிகள் இருவர் உட்பட ஐவர் காயமடைந்து நொச்சியாகம வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருப் பதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார். குடிபோதை யிலிருந்த உல்லாச பயணிகள், சரணாலய வழிகாட்டிகள், அவர்களது வாகனங்கள், வாகன சாரதி ஆகியோரை தாக்கியிருப் பதாகவும் அவர் கூறினார்.
WEDNESDAY, MAY 26, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment